Pages

Friday, September 20, 2013

வெள்ளிக்கிழமை பாடிட வேண்டிய சிவ தோத்திரங்கள்.


பஞ்ச புராணமான ஐந்து சமய நூல்கள்.

ஒவ்வொரு நாளும் சிவனை துதித்து முத்தி பெறுவோமாக. 

வெள்ளிக்கிழமை பாடிட வேண்டிய சிவ தோத்திரங்கள். 

முதலாவது தேவாரம்.
சுந்தரர்.
 7ம் திருமுறை.
 பண்; தக்கேசி.

பொன்னும் மெய்பொருளும் தருவானை 
போகமும் திருவும் புணர்ப்பானை 
பின்னை என் பிழையைப் போருப்பானை 
பிழை எலாம் தவிரப் பணிப்பானை 
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா 
எம்மானை வைகும் வயல் பழனத்து அணி 
ஆரூரானை மறக்கலும் ஆமே. 

2. திருவாசகம்.
 மாணிக்கவாசகர்.
 8ம் திருமுறை.

மெய்தான் அரும்பி விதிர் விதித்து 
உன் விரை ஆர் கழற்கு என் 
கைதான் தலை வைத்து கண்ணீர் 
ததும்பி, வெதும்பி, உள்ளம் பேய்தான் 
தவிர்த்து உன்னைப்போற்றி,
சய சய போற்றி என்னும் 
கை தான் நெகிழ விடேன், உடையாய் 
என்னைக் கண்டு கொள்ளே.

3. திருவிசைப்பா 

பண்: இளந்தளம் 
 திருவாலியமுதனார்.  
9ம் திருமுறை.

அன்ன நடையார் அமுத மொழியார் 
அவர்கள் பயில் தில்லைத் 
தென்னன் தமிழும் இசையும் கலந்த 
சிற்றம்பலம் தன்னுள் பொன்னும் 
மணியும் இரத்த தலத்துப் 
புலித்தோல் ப்ப்பிற்கு இட்டு 
மின்னின் இடையாள் உமையாள் காண 
விகிர்தன் ஆடுமே.

4. திருப்பல்லாண்டு
 சேந்தனார்.
பண்: பஞ்சமம் 
9ம் திருமுறை 


குழல் ஒலி , யாழ் ஒலி , கூத்து ஒலி , ஏத்து ஒலி
எங்கும் குழாம் பெருகி,
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி,
மிகு திரு ஆரூரின்
மழவிடையாற்கு வழி வழி ஆளாய்
மனம் செய் குடிப்பிறந்த
பழ அடியாரோடும் கூடி எம்மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

5. பெரிய புராணம்.
  சேக்கிழார் 
 12ம் திருமுறை.

மண்ணினில் பிறந்தார் பெறும் பயன்,மதி ஆடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வத்தல்
கண்ணிணாம் அவர்  நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்,
உண்மையாம் எண்ணி உலகர் முன் வருக.

திருச்சிற்றம்பலம். 


No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி