Pages

Tuesday, February 23, 2016

கோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா !

கோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா !
கோரும் வரம்  ஒன்று தா.

குறைகளைச் சொல்லியே காலத்தைக் கழித்துவிட்டேன்.
நிறை எது ? நிலை எது? நினையாதிருந்து விட்டேன்.
மறை சொல்லும் மாதவா நின் நாமம் அனுதினமும்
உரைத்திட வழி ஒன்று சொல்லித்தா...எனக்கின்று
கோரும் வரம் ஒன்று தா.

பஞ்ச புலன் தந்ததெல்லாம்  நஞ்சென ஆயிற்றே !
அஞ்சிட வேண்டியவை  அறியாது போயிற்றே !1
எஞ்சி நிற்கும் எண்ணம் எல்லாம் நின் பாதங்கள் ஒன்றே.
கெஞ்சி நிற்குமெனை காத்திடவே இன்றெனக்கு
கோரும் வரம் ஒன்று தா.. கோவிந்தா..

 நாராயணா ! நான் "நான்" ல் நிலைத்திருந்தேன்.
நாரணன் நின் நாமம் நாவில் நில்லா நின்றேன். 
கார்மேனியான் நின்னடிகள் சரணம் 
வா என்னை உய்த்திடு விடுதலை தந்திடு 

கோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா !
கோரும் வரம்  ஒன்று தா.