Pages

Friday, November 23, 2012

சந்தியில்......!!!!



    நீங்கள் சிரியுங்கள்.
    உங்களோடு சிரிக்க
    உலகத்தில் ஒரு நூறு பேர் இருப்பர்.

    ஒரு தடவை அழுது பாருங்கள்.
    ஒருவனுமே
   அடுத்த முறை
    அணுகமாட்டான்.

    தோழமையுடனும் ஏழைமை பேசேல்

    ஏழைமை என்பது பொருள் இல்லாமை மட்டுமா ?

    பொருள் குவித்திருப்பான் ஒருவன்.
    பாய்க்கு பதிலாக அவனிடம் பஞ்சு மெத்தைகள் ஏராளம்.
    மெத்தென படுத்தாலும்
    நித்தமுமே தூக்கமில்லை.,
    நிம்மதி இல்லை.

   நட்புகள் எனக்கு ஆழி
அலைகள் போல என‌
  ஆரவாரித்தான் அடுத்தவன்., 
 
   பொருள் இழந்தான் ஒரு நாள்.
   புன்னகையும் இழந்தான்.
   இருளோ இது என மருண்டான்.
   இனிய நண்பர்களை அழைத்தான்.
   இருக்குமிடம் தெரியவில்லை.

  அருள் இருப்பதாகச் சொல்லி அடுத்தவன்
  அனைவரையும் கவர்ந்தான்.
  அவனியில் உள்ள சுகம்
  அனைத்தையுமே பெற்றான்.

   அகலக்கால் வைத்தான்.
   அடுத்த படியிலே
   தடுக்கி விழுந்தான். 

    அறிந்தவனோ ...

   இருப்பதே இன்பமென
   இல்லாதது வேண்டேன் என
   இல்லத்து அரசியுடன்
    இருப்பதை நுகர்ந்தான்.
    இனிமையைக் கண்டான்.

    உலகத்து நியதி இது.
    உண்மையும் இதுவே ஆம்.

    சற்றே
    சிரிக்க,
    சிந்திக்கவும் செய்ய,
    சந்தியில் நடந்த ஒரு காட்சி இதோ.
   
 
   

Wednesday, November 21, 2012

யார் திருடர்கள் ?

    யார் திருடர்கள் ?

    வலைச்சர வாயில் வழியே
    வீதி வழி சென்றவனை
    வழி மறித்தது

  மஞ்சள் நகரின்
    மாலை மயக்கத்திலே
    மயங்கி "

     உள்ளே சென்றால்.....................;
  
     மருண்டேன்.  திகைத்தேன்  திடுக்கிட்டேன்.

    ஒரு அறிவிப்பு பலகை.   
  (  காண இதனை கிளிக்கிடுங்கள்.    )

//   வங்கிகளும் ஏடீஎம்களும்
 நிறைந்திருந்த சாலையில்
 "திருடர்கள் ஜாக்கிறதை"//


   திருடர்கள் எங்கு தான் இல்லை ?

     ஆடித் தள்ளுபடி என
   ஆசை பல காட்டி
     ஏமாந்தவர் தலையிலே
    எதைஎதையெல்லாமோ கட்டும்
    நிறுவனங்கள் !!

 
    இல்லாத வியாதிக்கு
   ஈரேழு சோதனைகள்
    இரவொன்று பகலொன்று என
    இருபத்தைந்து  மருந்துகள்.
    மருந்திலே கலப்படம் செய்யும்
    மனச்சாட்சியிலா வியாபாரிகள்.

     மருண்டவனை
     மயானத்தை நினைக்கவைக்கும்
     மருத்துவர்கள் !!

      வைத்தியன் பின்னே வரும்
      வைதீகன் கூத்துக்கள்.
    
      
      வாய்தா கேட்பது தவிர
      வேறெதுவும் தெரியாத‌
      வக்கீல்கள்.

      வானத்து கோள்களையும்
      பூமிக்கு இழுத்து வந்து
      வையத்தில் உள்ளோரை
      பயமுறுத்தும் சோதிடர்கள்.

             
      வாடகைக்கு இருப்பதையே
      விற்பனை செய்துவிடும்
      வாய்ச்சொல் வீரர்கள்.
       தரகர்கள் !!

      இவர்கள் எல்லாம் யார் ?
      இவர்களும் ........   ?

      இல்லை , இல்லை...!  

    உள்ளதைத் திருடுபவர் ஒரு பக்கம்.
    உள்ளத்தைத் திருடுபவர் இன்னொரு பக்கம்.
    உலகமே திருடுபவரின் கூடாரம்.

     
      இன்னொரு கோணத்தில் பார்த்தால்,
    
      அம்பது வருசம்  முன்னே
       அம்மா சொல் கேட்காமல்
     
      இவள் இல்லேல்
      இனி நான் இல்லை என
      இன்ச் இன்சாய் நம்ப வைத்த என்
      இல்லத்தரசியுமே
      திருடிதான்.

      அழகு தமிழ்ச் சொற்கள் கூட்டி
       அமுதான  கவிதை ஈந்து,  எமை
       சிந்தனையில் சிறைப்படுத்தி
       விந்தைகள் பலசெய்யும்
       வலை வித்தகருமே எம்
       உள்ளங்கவர்
       திருடர்கள் தானோ !!!

      யானறியேன் பராபரமே !!''

     

    
    
    
   
      
    
    

   

    

            .
    
 

Sunday, November 11, 2012

தீபாவளி வாழ்த்துக்கள்.

Deepavali Greetings
Add caption
Deepavali Kolam
greetings from the bond girl pictures

தமிழ் வலை உலக அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் 
    தமிழுக்கு புகழ் சேர்க்கும் வகையிலே எழுதும் அனைவருக்கும்
    நெஞ்சுக்கினிய சுற்றத்திற்கும்  
    எங்களது இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள். 

     கவி நயா , லலிதா மிட்டல், கவிஞர் தங்கமணி அவர்கள், 
    Thenammai Lakshmanan, Geetha Sambasivam                                             deepavali pictures
     முத்துலக்ஷ்மி, இராமலக்குமி, ஹேமா, மஞ்சு பாஷிணி, 
      மாதங்கி,   வீணை காயத்ரி, ரஞ்சனி,  வலைச்சர ஆசிரியர் சீனா, 
      சசிகலா, கோவை சரளா, புலவர் இராமானுசம், 
      திண்டுக்கல் , பால கணேஷ், மோஹன் , வெங்கட நாகராஜ்,
      கோவை2தில்லி,  இராமமூர்த்தி, ரிஷபன், ஜெயமோஹன், 
      லக்ஷ்மி, கோலங்கள் போடும் பதிவர் வாணி முத்துகிருஷ்ணன்,
      ஜீவி, ஜீவா, dondu sir, idli vadai sir, amaidhichaaral sir, dindugal dhanabalan, 
      குமரன், கே.ஆர்.எஸ் என்னும் கண்ணபிரான், வாத்தியார்,
      தக்குடு, ஜீவா, ரமனேஷ்,  மதுரையம்பதி வலைப்பதிவாளர்,
      அப்பாதுரை, Raja Rajeswari, Vasudevan tirumurthy, meenakshi, vai.gopalakrishnan,gnb sir,
      parvathy ramachandran, venkatakrishnan, sankara narayanan, umesh sir, sudha , 
      shylaja, sivakumaran,raji, mahendran, RAMANI, GANAPATHI, 
      thamarai madurai, chandra vamsam 

       இதில் நான் குறிப்பிட மறந்துபோன எனது இனிய நண்பர் யாவருக்கும்
       மறுமுறையும் வாழ்த்துக்கள். 

       

       
    
    Courtesy: Kolam drawing : Smt.Vani Muthukrishnan.