Pages

Sunday, December 23, 2007

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் ‍ மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து ......திருவள்ளுவர்.

எதை எண்ணிடினும் உயர்வாகவே நினை என்றார் வள்ளுவர். மற்ற எண்ணம் எதனை விட்டபோதிலும்
உயர்வாகவே எண்ணவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விடாது இரு என்பார்.

இது எப்படி சாத்தியம் ? உயர்வாக எண்ணுதல் மனத்தின்பாற் பட்டது. மனம் தெளிவுற, மாசற்றதாக‌
இருப்பின் மட்டுமே ஒருவன் உயர்வாக எண்ணுதல் சாத்தியம்.


எண்ணங்கள் தாம் எல்லாவற்றிற்கும் அடிப்படை. இந்த எண்ணங்கள் மாசற்று இருப்பின் நமது சொற்களும் செயல்களும் தாமாகவே மாசற்றதாக மட்டுமன்றி நமக்கும் மற்றோருக்கும் நன்மை பயக்க வல்லதாக அமையும்.

ஆகவே, வள்ளூவர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் = அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

என ஒருவனுடைய மனம் மாசற்று தூய்மையாய் இருப்பின் அதுவே எல்லா அறமும்.
மற்றவை எல்லா அறவெழிக் கருமங்கள் என சொல்லப்படும் அனைத்துமே மனத்தூய்மைக்கு
எதிரில் நீர்த்துப் போனவை ஆகும் என்பார்.


மனம் தூய்மையாவதற்கு என்ன செய்தல் வேண்டும்?
முதல் வழி வாய்மை.

"வாய்மை எனப்படுவது யாதெனின் = யாதொன்றும்
தீமை இலாத சொலல் " என்றார்.

மறுபடியும் "சொலல்" எனச்சொல்லி சொற்களின் சிறப்பை நினைவூட்டுகிறார்.
ஆக, நம் வாய் வழி வரும் வார்த்தைகள் மீது மிக கவனமாக இருத்தல் வேண்டும்.
ஏன், எனின் சொல்லாத சொல்லுக்கு நாம் எஜமான்.
சொல்லை சொல்லிவிட்டாலோ, சொல்லிய சொல் நமக்கு எஜமான்.
அப்போது, ஒரு சொல்லை சொல்ல முயல்கையில் என்ன செய்தல் வேண்டும் ?

"தன்னெஞ்சு அறிவது பொய்யற்க " என்றார்.

எதை நாம் பொய் அன்று நமது மனச்சாட்சி உணர்கிறதோ அதை சொல்லாதே ! என்றார்.
அறவழிக்கு அடிப்படையே நமது மனச்சாட்சிக்கு முதன்மை கொடுப்பது தான்.
அப்படிப்பட்ட மனதை தீய வழிகள் பால் செல்லவிடாது, நன்றின் பால் உய்ப்பது முதல் வழி.

"சென்ற விடத்தாற் செலவிடாது தீதொறி
நன்றின் பால் உய்ப்பது அறிவு."

இந்த நுண்ணிய அறிவு, (தீது எது நன்மை பயப்பது எது என சீர்தூக்கி ப்பார்த்து நன்மைபால் மனதை ஒழுங்குபடுத்துவது) மானிட வர்க்கத்திற்கு இன்றியமையாததாகும்.
இந்த அறிவு தான் அற நெறியில் மனிதனை நடத்திச் செல்ல இயல்புடையதாகும்.
இந்த அறிவினைக் கொண்டவன் புகழைத் தேடிச் செல்ல அவசியமில்லை.
அவனை புகழ் தானே வந்தடையும்.
இந்த அறிவினைப் பெற நாம் கடைபிடிக்கவேண்டிய ஒரே வழி:

எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

என்ற வள்ளுவரின் பொய்யாமொழிதனை
நாள் தோறும் நினைவில் நிலை நிறுத்துவோம்.

Sunday, December 16, 2007

த‌வ‌ம்

தாயுமானவர் பாடல்கள் அற்புதமானவை.


"மாயா விகார மலமொழிகத் தாவத்தை
தோயா அருளைத் தொடரு நாள் எந்நாளோ?"

"தான்" என்பதை மறந்து "அவன்" தான் நான் என மன நிலை ஏற்படுவது எளியது அல்ல. எப்பொழுதுமே தனது சொத்துக்கள், தன்னைச் சேர்ந்தவர், தன்னுடைய உடல் இவற்றினைப்பற்றியே எணணுகின்ற மனிதன், இறைவன் தன்னுள்ளே இருப்பதையும் தனது இதயத்தில் அவனை நிலை நிறுத்தி தியானிப்போர் அவனை தம்முள் காணுவர் என்ற உண்மையும் எளிதாக உணர்வதில்லை. உலக மாயையின் காரணத்தினால் மட்டுமன்றி மனிதனுக்கு சுபாவத்தினால் உள்ள காம க்ரோத மத மாத்சர்ய ஆகிய‌
மலங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்

இத‌ற்கென‌ ஒரு கால‌ கட்ட‌ம் இருக்கிற‌தா என்ன‌? த‌ன்னை உண‌ர்ந்து த‌ன் ம‌ய‌மாவ‌து
அஸ்ப‌ர்ஸ‌ யோக‌ம் என்ப‌ர்.

இத‌ற்கான பெருமுய‌ற்சி தான் த‌வ‌ம். த‌வ‌த்தினை மேற்கொண்ட‌வ‌ர் த‌ன்னை புதுப்பித்துக்கொள்ள‌ இய‌லும். த‌ன்னை மாற்றிக்கொள்ள‌ இய‌லும். ஒன்றிலிருந்து
ம‌ற்றொன்றாக‌ ஆக‌ இய‌லும்.

தான் இறைவ‌னிட‌மிருந்து வேறு என நிலை அழிந்து இறைவன் தன்னிடத்தே தான்
உள்ளான் என்ற நிலை ஏற்படும்.

வள்ளுவர் தவத்தின் பெருமையைப் பற்றி கூறுகையில்:

"வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப்படும் "

Saturday, November 24, 2007

வெளிச்சம் ஏதேனும் தெரிகிறதா ?

எனது வலைப்பதிவில் சூர சம்ஹாரம் பற்றிய தகவலைப் படித்த ஒரு நண்பர்
உங்கள் வலைப்பதிவின் தலைப்புக்கும் ( தமிழ் மறை, தமிழர் நெறி ) இந்த ப்பதிவிற்கும்
என்ன பொருத்தம் என கேள்வி கேட்டிருக்கிறார்.

இதை விளக்கவே எழுதுகிறேன்.

விளம்பரம் ஒன்று ( இந்தியா ‍ பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் போது) காட்ட ப்படுகிறது.
மனிதனின் பொருளாதார வாழ்வினை அறத்தே நோக்குகையில் உள்ளங்கனி நெல்லிக்கனி போல விளக்குகிறது.
இறக்கும் தருவாயில் உள்ளவரிடம் அவரது வாரிசு ஒருவன் அவரது உயிலில் மன்றாடி 10000 என்பதை இன்னொரு ஸைபர் சேர்க்கசொல்லி, 100000 ஆக்கச்செய்கிறான்.
அவன் அப்பாடி என்று மகிழ்வுறும் வேளையில், அந்தோ பரிதாபம், கூரையிலிருந்து ஓர் நீர்த்துளி அந்த உயிலின் மேல் சொட்டுகிறது.. 100000 என்னும் எண்ணில் உள்ள 1 அழிந்து போகிறது. வாரிசு திரும்பவும் முதியவரை நோக்க அவர் இறந்து போயிருக்கிறார்.
தன் தலை விதியை நொந்து அழும் காட்சிதனை, தத்ரூபமாக தந்திருக்கிறார்கள்.

இந்த காட்சியிலிருந்து நாம் பெறும் பாடம் என்ன?
வள்ளுவர் சொன்ன குறட்பா தான்.

" பரியினும் ஆகாவாம் பால அல்ல ; உய்த்துச்
சொரியினும் போகா தம. " ( அறம் ‍ 38 ‍ 6 )

நமக்கு (ஊழினால்) உரிமை இல்லாதவற்றினை எத்தனைதான் வருந்திக்காத்தாலும், அவை
நம்மைவிட்டு நீங்கும். (அதே சமயம்) நமக்கு எவை நமக்கு உரியதோ அவை நாம் வேண்டாம் என த்தள்ளி விடினும் நம்மை விட்டு நீங்கா.

நீதி என்ன? எது நாம் நமது அறிவு, உடல் முயற்சியினால் ஈட்டுகின்றோமோ, அது நம்மிடம் நிலைத்து நிற்கும். மற்றவை நம்மை விட்டு நீங்கிவிடும்.

நம்மிடம் நிலைத்து நிற்பதாகக் காணப்படும் செல்வத்தையே நாம் ஊழ்வினைகளுக்குட் பட்டுத்தான் அனுபவிக்க இயலும்.

வள்ளுவர் கூறுவார்:

" வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது " ( அறம் 38 7 )

எவ்வளவு தான் ஒருவன் கோடிக்கணக்கில் செல்வத்தைச் சேர்த்து வைப்பினும், இறைவன்
நமக்கு எவ்வளவு என வகுத்து வைத்துள்ளானோ அந்த அளவு தான் அந்த செல்வத்தினை
அனுபவிக்க இயலும்.

வள்ளுவப்பெருந்தகை நியாயமான வழிகளில் பொருள் ஈட்டவேண்டிய அவசியத்தை
வற்புறுத்திக் கூறுகிறார்.

இன்றைய உலக வணிக சந்தையிலே வள்ளுவனின் நீதிக்குரல் கேட்கப்படுகிறதா? எல்லாத்துறைகளுமே வணிகமாகிவிட்டன. உலகத்தில், ஏன் ? புண்ணிய பூமி என நாம் சொல்லிக்கொள்ளும் பாரத நாட்டிலேயே, எல்லாவற்றிலேயும், அதர்ம வியாபார வழிகள் நுழை ந்து விட்டன என்பதைச் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

இதிலிருந்து வெளிவர வழி இருக்கிறதா ? வெளிச்சம் ஏதேனும் தெரிகிறதா ?


நமது மனதிலே ஏற்படும் அறவழிக்கு அப்பாற்பட்ட எண்ணங்கள், அந்த எண்ணங்களால்
உந்தப்படும் பேச்சுக்கள், செயல்கள் தான் அசுரர் ஆவர்.

சூரபத்மன் வேலனால் கொல்லப்படுவது போல, மனதின் பாற்‌எழும் தீய‌ எண்ணங்கள்
முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும்.

Thursday, November 15, 2007

சூர சம்ஹாரம்.


ஆறு படை வீடுகளிலும் இன்று மக்கள் வெள்ளம்.

கடலோரத்தில் திருச்செந்தூர்.
மதுரையிலே திருப்பரங்குன்றம்.
பழமுதிர்ச்சோலை
பழனியிலே பழனியாண்டவன்.
சுவாமிமலையிலே தந்தைக்கு உபதேசம் செய்தவன் சுவாமினாதன்.
திருத்தணிகையிலே,
கண்டியிலே கதிர்காமத்திலே...

எல்லா முருகன் கோவில்களிலும் இன்று
சூர சம்ஹாரம்.


தமிழ் மக்கள் யாவரும் சட்டி கவசம் உரைக்கவேண்டும்.
முருகனின் எல்லாப்பெருமைகளையும் எடுத்துச்சொல்கிறது.
அன்பர் குமரன் அவர்களின் வலைப்பதிவு. இது தமிழ்மக்களுக்கோர் பொக்கிஷம்.
அப்பதிவுக்கு எல்லோரும் சென்று முருகப்பெருமானின்
திருவருள் பெற்றிட வேண்டுகிறேன்.




Muruga


Way leading to Lord Muruga
Immediately below Lord Ganapathy
on your left. Please click there.

Saturday, October 13, 2007

ஏதாவது ஒரு அடைக்கலம்

மனிதராய்ப்பிறந்த எல்லோருக்குமே ஏதோ ஒரு தருணத்தில் ஏதாவது ஓர் பயம் ஏற்படுகிறது. அந்த பயத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டி எதையாவது மனிதன் நாடுகிறான். சிறிது நாள் சென்ற பின்னே மற்றோர் பயம் பற்றுகிறது. முன்னைய அடைக்கலம் இப்போதைய பயத்தினை அகற்றுவதில்லை. புதியதென ஒரு அடைக்கலத்தைத் தேடி நிற்கிறான்.

இவ்வாறாக வாழ் நாள் முழுதுமே ஏதாவதொரு பயம், ஏதாவது ஒரு அடைக்கலம் என்ற சக்கரத்தில் சுழன்று கொண்டே இருக்கிறான். இவனுடைய பயங்களுக்கு என்றுதான் நிரந்தர தீர்வு வருமோ ?

இது என்னுடையது என்ற மன உணர்வு உள்ளவரை, பயம் நீங்காது. இந்த பொருள் நமதல்ல, இந்த உறவு நிலைத்ததல்ல, இந்த தேகம் நிரந்தரமல்ல என்ற உணர்வு ஓங்கி நிலைகொள்ளூம்போதுதான், மனிதன் கவலை ஒழிந்து, பயம் நீங்கி, உண்மையான மெய்யறிவினைப் பெறுகிறான்.

மாணிக்கவாசகர் சொல்லுவார்:

" அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே....."
உடல், பொருள், ஆவி எல்லாமே அந்த ஈசனிடம் அர்ப்பணித்தோருக்கு வேறேதும் அடைக்கலம்தான் தேவையோ ?

Wednesday, June 20, 2007

உளதன்றி இலதன்று Being While not Presenting.

இன்று "திருமந்திரத்தில்" உள்ள 2335 வது பாட்டினைப் படிப்போமா?

" இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லது உள்ளது மாயன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடில் தூராத் தூரமென்
றெல்லை யுணர்ந்தால் உயிர்க்குயிராமே...."


உளதன்றி இலதன்று

இறைவன் எல்லா இடங்களிலும் எப்பொருள்களிலும் நீக்கமின்றி உள்ளவனாய் இருக்கின்றான். இன்ப துன்மங்கட்கு வேறாகி இல்லாதவனாக திகழ்கிறான்.

ஒரு நாடகம் நடக்கும் இடத்தில் விளக்கு ஒளி எங்கும் கலந்து உள்ளது. நாடகத்தை நடத்துகின்றது. அது காண்கிறது. நம்மை நாடகத்தைக் காணச்செய்கிறது.

சோகமான காட்சியில் நாம் அழுகின்றோம். நகைச்சுவைக் காட்சியில் நாம் சிரிக்கின்றோம். காதல் காட்சியில் நாம் மகிழ்கின்றோம். கொலைக்காட்சியில் நாம் அஞ்சுகின்றோம்.

விளக்கொளி அழுவதில்லை. சிரிப்பதில்லை. மகிழ்வதில்லை. அஞ்சுவதில்லை. சுக துக்கத்திற்கு அப்பாலாய் உள்ளது. உடனாகியும் இலதாகியும் விளக்கொளி இருப்பது போல இறைவன் இவ்வுலகில் இருந்தும் இல்லாதவனாகத் திகழ்கிறான்.
இவ்வுலகம் எங்கும் இறைவன் இருப்பான் எனில் உலக சுக துக்கங்கள் அவனைத் தாக்காதோ ?
தாக்காது.

உவர்க்கடலில் பிறந்து வளர்ந்து உவர் நீரைக்குடித்து வாழ்கிற கடல் மீனில் உப்பு ஏறுமோ ? ஏறாது.

அது போலவே இறைவன் ஒட்டியும் ஒட்டாமலும் உள்ளான்.

Saturday, June 02, 2007

Visual Imagery ..as Tamil Saint Periyazhwar listens to Divine Flute Music of Lord Krishna.







You are seeing the Nandhavanam of Periazhwar at Srivilliputhur.





இன்று பெரியாழ்வார் அருளிச்செய்த பாசுரம் ஒன்றினை படிப்போமா?

க்ருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான்
அவன் ஒருவன் குழல் ஊதின போது
மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும்
மலர்கள் வீழும் வள்ர்கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற‌
பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.


கண்ணன் குழல் எடுத்து இசை மழை பொழியும்போது, இயற்கை எவ்வாறு அந்த இசையோடு இணைகிறது .....

அந்த கண்ணன் பீதாம்பர உடை உடுத்தி மயிற்தோகை அணிந்து குழல் ஊதும்போது, மரங்கள்கூட அசைவற்று நின்று போம். அம்மரங்களில் பூத்திருக்கும் மலர்களிலிருந்து மது தாரையாக பெருக்கெடுத்து பாயுமாம்.

விண்ணை நோக்கி வ‌ள‌ர்ந்த் கிளைகளும் தாழ்ந்து, எவ்விட‌த்திலிருந்து
இசை வருகின்றது எனப்பார்க்கும். திருமால் எங்கு உள்ளார் என உயர்ந்திடும் பின் தாழ்ந்திடும். என்னே அற்புதம். !!!!

பெரியாழ்வார் தன் அற்புத கவித்திறன் கொண்டு, கண்ணனின் வேணு கானத்தினையே நம்மைக்கேட்கச்செய்கிறார், கண்ணன் குழல் கேட்டு மயங்கி நிற்கும் மரங்கள், அவற்றின் கிளைகள் காற்றில் மேலும் கீழும் அசைவதை உருவகப்படுத்தி , அந்தக்கிளைகள், கண்ணனின் குழலிசையைக் கேட்டு, கண்ணன் வருகிறான் என நினைத்து அப்பெருமானை வரவேற்க ஆயத்தங்கள் செய்வது போலவும், மலர்களிலிருந்து மது தாரையாக பெருக்கெடுத்து ஓடுவது போலவும், பூக்கள் எம்பெருமானை வரவேற்க, பூமாரி பொழிவது போலவும் நினைந்து நினைந்து உருகுகிறார்.

ஆஹா ! என்னே அற்புதம் ! தம் மனக்கண் முன்னே அவர் கண்ட காட்சி நம்மை எல்லாம் பரவசப்படுத்துகிறது அல்லவோ !

visual imagery
என ஆங்கிலத்தில் குறிப்புடுவார்கள். தாம் கண்ட அந்த தெய்வீக காட்சிதனை, அவர்தம் பாசுரத்தை படிப்போரும் காணுமாறு செய்கிறார், பெரியாழ்வார். அழகான காட்சிதனை, என்றும் என்றும் மனங்களிலே நிலைத்து நிற்குமாறு செய்து, அந்த அழகுக்கு ஓர் நித்தியத்துவம் அளித்துள்ளார்.

சத்தியம், சிவம், சுந்தரம்...
இதெல்லவோ அழகு, இதெல்லவோ நித்தியம், ஆகவே சத்தியம், இது தானே சிவம்.


The poetic ecstacy leading to visual imagery is just unparalleled.

I just recollect what the immortal Poet Keats wrote:

" Heard melodies are Sweet, but sweeter
Are the unheard ones.."

i also recollect Keats' Ode :

...Beauty is Truth and Truth is Beauty;
That's all Ye knew on earth, and all ye need to know.


Verily, whatever is intranscient in whatever one perceives as BEAUTY, must be TRUTH.
Truth is timeless. If Beauty is truth, then beauty should also be timeless.

But, as one proceeds on this logic, gradaully, one finds that all that appear beautiful this moment lose that lustre the next moment.

To sustain beauty, "that perceived beautiful one" should not be suceptible to ageing, and must remain unaffected by the contours of time. Is it all possible ?

Yes. The One and the only One that could be intranscient must be THE ONE, OMNIPRESENT, on which realisation, one became a Gnani meaning a knower or a realized person.

Vedhanta proudly proclaims: SATYAM SHIVAM SUNDARAM.
"What is true (SATYAM) is the Brahmam (transcending the boundaries of time)and that Shivam is (alone) beautiful (SUNDARAM)

Keats realized TRUTH in beauty. Periazhwar realised Beauty in Truth.

Wednesday, May 02, 2007

OM..How Shiva is Manifest in Pranava Manthra ..Learn this..

பிரணவமே ஐந்தெழுத்து.

அகாரம் உயிரே; உகாரம் பரமே
மகாரம் மலமாய் வரும் முப்பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமா
யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே
.

திருமந்திரத்தில் வரும் 975 வது பாடல் இதுவாம்.
This is the 975 th Song in THIRUMANDHIRAM recited by Thirumular.

பிரணவம் 'அ" உயிராயும், "உ" பரமாயும், "ம" மலமாயும், இவ்வாறு மூன்று பதங்களில் வரும். "சி" சிவமாய், "வ" வடிவுடைய சக்தியாய், "ய" உயிராயும் சொல்லலும் ஆகும்.

பிரணவம் என்பதிலும், ஐந்தெழுத்திலும், சிவன் விளங்கும் வழி முறை இதில் கூறப்பற்றிருக்கிறது.

அ , உ , ம் ....பிரணவம் இது வியட்டிப் பிரணவம்.
ஓம்...இது சமட்டிப்பிரணவம்.

Friday, April 13, 2007

Tamil New Year Day..15th April 2007


புதிய தமிழ் புத்தாண்டு ஸர்வஜித் 15 ஏப்ரல் 2007 அன்று பிறக்கிறது.


தமிழ் புத்தாண்டு தினமான அன்று உலகத்தமிழர் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று சீரும் சிறப்பாக வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வணங்குவோம்.
On the Happy Occasion of the Tamil New Year Day on 15th April 2007, let us all Pray to God Almighty to shower on All Tamils of the World all the Prosperity.
Let us recall the first stanza of Nalvazhi compiled by the Great Tamil Poetess Avvayar on this Grand Occasion.
அவ்வையார் இயற்றிய நல்வழி விநாயகக் கடவுள் துதியுடனே துவங்கும்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் ‍ கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

பொருளாவது:

அழகினை செய்கின்ற மேலான யானை முகத்தைக் கொண்ட தூய்மையுடைத்த மாணிக்கத்துக்கு ஒப்பான வினாயகனே !

நல்ல பசுவின் பாலும், தெளிந்த தேனும், வெல்லப்பாகும், பருப்பும் ஆகிய நான்கு பொருட்களையும் கலந்து நான் உனக்கு நிவேதனமாக‌ அர்ப்பிக்கிறேன். உன்னிடமிருந்து வேண்டுவது ஒன்றே. மூன்று சங்கங்கள் வளர்த்த மூன்று தமிழ் (இயல், இசை, நாடகம்) அடங்கும் யாவற்றையும் எனக்கு அருள்வாயாக.

Sunday, April 01, 2007

What is a lie? What can we call as "true" ?

பொய் என்றால் என்ன? உண்மை என்றால் என்ன?

What is a Lie? What is Truth?

நடப்பது, நடந்தது, யாவையுமே நாம் அறிந்தவாறு சொல்வது உண்மை.பார்த்த, பார்க்கின்ற எல்லாவற்றையும் நாம் உணர்ந்தவாறு சொல்வது உண்மை.
When we narrate what happened or happens in the way we understood them it would be true.

கேட்ட, கேட்கின்ற எல்லாவற்றையும் நாம் புரிந்தவாறு சொல்வது உண்மை.
When we say what we heard or hear in the way we understood them, it is true.

இவ்வாறு உண்மைக்குப் பொருள் சொல்லப்போனால், உண்மை என்று நாம் எவற்றை கருதுகிறோமோ அவை அவரவர் புலன்களின் தன்மையை ஒட்டி அமையும் என்பது புலப்படுகிறது.
So, when we attempt to seek a definition of "truth", it is apparent that both truth and falsehood depend on the perceptions which are but the end results of the effectiveness of their sensory organs.

உதாரணமாக, ஒருவருக்கு பார்வை மங்கியிருந்தால், அவர், தான் காணும் நிறங்களை சரிவர கூற முடியுமா? கரும் பச்சையை கருப்பு என்றோ பச்சை என்று அவர் சொன்னால் அவர் பொய் சொல்கிறார் எனக்கூறலாமா?
A person whose vision is blurred can describe a dark blue as black. Is it that this person lies?

அதேபோல், ஒருவருக்கு ஒரு பொருளினைப்பற்றி ஒன்றுமே தெரியாதபோது, அதை திடீரென காண்கையில், அதை அவரால் சரிவர விவரிக்க இயலாது. அப்போதும் அவர் பொய் கூறுகிறார் எனச்சொல்ல இயலாது.
In the same way, when a person does not have any apriori knowledge of a particular thing, he may not be able to describe of the thing he sees. Then also, it is not correct to say that the person lies.

ஆக, உண்மை, பொய் இரண்டுமே அவரவர் உணர்ந்து உள்வாங்கிக்கொண்ட நிலையின் அடிப்படையிலேதான் உள்ளன்.
Truth and Falsehood are therefore based on the physical and mental perceptions of the concerned individuals.

ஆனால், இவ‌ற்றைத்த‌விர‌, ம‌ற்றொரு கோண‌த்திலும் பொய், உண்மைத‌னை ஆராய‌லாம்.
Apart from this we can approach the subject of truth and falsehood from a different angle and approach
.Let us hear what Bharathi sing:

பாட்டுக்கொரு புல‌வ‌ன் பார‌தி பாடுவ‌தைக்கேட்போம்:

" நிற்ப‌துவே, ந‌ட‌ப்ப‌துவே, ப‌ற‌ப்ப‌துவே
.அத்த‌னையும் சொப்ப‌ன‌ந்தான்..

"All standing,walking flying ...all just dreams !"

சொப்ப‌ன‌ம் என்றால் க‌ன‌வு, க‌ன‌வு என்றால் அது உண்மையில்லாத‌து. நாம் நிற்கிறோம், ந‌ட‌க்கிறோம், விமான‌ங்க‌ளில் ப‌ற‌க்கிறோம், ப‌ற‌வைக‌ள் ப‌ற‌க்கின்ற‌ன. இவ‌ற்றை எல்லாவ‌ற்றையுமே உண‌ர்கிறோம். இவ‌ற்றை எப்ப‌டி உண்மை யில்லை என்று சொல்ல‌முடியும்? இருப்பினும், எது அழிய‌க்கூடிய‌தோ அது உண்மையில்லை. இது த‌த்துவ‌ அணுகுமுறை.

In the perception of Bharathi, the Tamil Poet, whatever is transient, is also not true. This is a philosophical approach.

வ‌ள்ளுவ‌ர் கூறுவார்:

த‌ன் நெஞ்சு அறிவது பொய்ய‌ற்க‌ ; பொய்த்த‌பின்
த‌ன் நெஞ்சே த‌ன்னைச்சுடும்.
Having known the truth, never say what is false (untrue), as your own mind indicts you.

மெய்த‌னை அறிந்த‌பின்னும், மெய்யில்லாவ‌ற்றைச் சொல்வ‌தே பொய். அப்ப‌டி சொல்லும்போது ந‌ம‌து ம‌ன‌மே ந‌ம்மை காய்கிற‌து. சுடுகிற‌து.

அவ்வாறு சுடுகிறதா? ந‌ம‌க்கு நாமே ப‌தில் சொல்லிக்கொள்வோம்.
Do we get indicted when we tell a lie. Let us reflect.

Sunday, March 25, 2007

If God Were to Appear Before You and Ask "What do you Want?"

இறைவன் திடீரென ஒரு நாள் உங்கள் முன்னே வருகை தந்து உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டால் என்ன கேட்பீர்கள் ?
Suppose God were to appear before you one day and ask you, "what do you want?" , what will you reply?
உண்மையைச்சொல்லப்போனால், நாம் அந்த ஒரு நிகழ்வு நடக்கும் என நினைத்து அதற்கான ஆயத்தினைச் செய்யவில்லை .
To be honest, to ourselves, most of us do not believe that such an event would ever happen. Possibly, on that pretext, we are never prepared for such an event.

ஏன் என்றால் கடவுள் நம் முன்னால் வருவார், வரக்கூடும் என நம்மில் பலர் நம்புவதில்லை.
We hardly believe that God will appear before us, when we introspect what we do.

தமிழ் நாட்டின் சிறந்த பாடகர் ஒருவர் நாகூர் அனிபா அவர்கள்.அவர் பாடுகிறார்:
One of the foremost singers of Tamil Nadu, India, Nagoor Hanifa sings:

இறைவனிடம் கையேந்துங்கள் ‍= அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை.

(Stretch your hands before God. He never says No.)

கோவிலுக்குச் செல்கிறோம். ம‌ற்ற‌ த‌வ‌த்திருத்த‌ல‌ங்க‌ளுக்குச் செல்கிறோம். க‌ட‌வுள் முன்னே நின்று க‌ண்க‌ளை மூடிக்கொண்டு ந‌ம்மில் ப‌ல‌ர் ம‌ன‌ம் உருக‌ க‌ண்க‌ளில் நீர் பெருக‌ பிரார்த்திக்கிறோம். க‌ட‌வுள் ந‌ம‌க்கு வேண்டிய‌தை த் த‌ருவார் என‌ ந‌ம்புகிறோம். அந்த ந‌ம்பிக்கையிலே வீடு திரும்புகிறோம். அந்த‌ ந‌ம்பிக்கையிலேயே வாழ்கிறோம். ஆயினும் ஏதேனும் ஒரு நாள் இறைவ‌ன் ந‌ம் முன்னே பிர‌த்ய‌க்ஷ‌மாகி என்ன‌ வேண்டும் என‌ க்கேட்பான் என‌ நாம் நினைத்துப்பார்ப்ப‌தில்லை. அந்த‌ நிக‌ழ்வுக்கு நாம் த‌யாராக‌ இல்லை. ‌(உண்மையைச்சொல்ல‌ப்போனால், நாம் ந‌ட‌ந்து கொள்ளும் விதத்தை நாமே ம‌ன‌ச்சாட்சியின் க‌ண் வ‌ழியே பார்க்கும்போது, கட‌வுள் ந‌ம‌க்கு முன் வ‌ருவான் என‌ தோன்ற‌ வில்லை.)

இருப்பினும், ஒருவேளை க‌ட‌வுள் வ‌ந்து விட்டால்,உனக்கு என்ன வேண்டும் என கேட்டுவிடின், என்ன‌ கேட்ப‌து ?

நாகூர் அனிபா அவ‌ர்கள் மிக‌வும் அழ‌காக மற்றொரு பாடலில் சொல்கிறார்.

அத‌ன் க‌ருத்து:

இறைவா ! நீ இதுவரை என‌க்கு கொடுத்த‌திற்கே ந‌ன்றி சொல்ல‌ என‌து எஞ்சிய‌ ஆயுட்கால‌ம் போதாது. அவ்வாறு இருக்க‌, இன்னும் நான் என்ன‌ கேட்ப‌து " என்று...

Oh God! For All the things you gave me so long, I do not have enough time left in my life to thank You. What else can I ask You ?

மிக‌வும் அற்புத‌மான‌ பாடல்.
உல‌கத்த‌மிழ‌ர் யாவ‌ரும் ர‌சித்து உளம்ம‌கிழ்ந்த‌ பாட‌ல்.

க‌ருத்து ஆவ‌து..
போதும் என்ற‌ ம‌ன‌ம் வ‌ர‌வேண்டும்.
இறைவ‌ன் கொடுத்த்த‌தை வைத்து ந‌ல்ல‌ வாழ்வு வாழ‌வேண்டும். அது வேண்டும், இது வேண்டும் என‌ ஆசைப்ப‌ட்டு வாழ்வின் அமைதியை இழ‌க்க‌க்கூடாது.
We must live an honest ethical life through whatever we have been given by God. To desire for more and more is just losing our own mental peace and tranquility.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோத‌ல்
அதெனின் அதெனின் இல‌ன்...

என்ப‌து வ‌ள்ளூவ‌ப்பெருந்த‌கையின் பொய்யாமொழியாம்.
One who is rid of thoughts of "what is this? what is this?" is also rid of the miseries that flow out of acquiring those things.

ஆசைப்ப‌டுவ‌த‌னால், இறைவ‌னின் கால‌டிக‌ளை அடைய‌ வேண்டும் என‌ ஆசைப்ப‌ட‌வேண்டும்.
If ever to desire for anything, desire for reaching the Bliss of the Almighty.
இறைவ‌ன் சன்ன‌தி, இறைவ‌ன‌து பாத‌ நிழ‌ல் எவ்வாறு இருக்கும்?

" மாசில் வீணையும் மாலை ம‌திய‌மும்
வீசு தென்ற‌லும் வீங்கிள‌ வேனிலும்
மூசு வ‌ண்ட‌றை பொய்கையும் போன்ற‌தே
ஈச‌ன் எந்த‌ன் இணைய‌டி நிழ‌லே"

குற்ற‌மில்லாத‌ ஸ்வ‌ர‌ங்க‌ளுட‌ன் வாசிக்க‌ப்ப‌டும் வீணை,மாலை நேர‌ம், தென்ற‌ல் வீசும அந்த‌ வேநிற்காற்றில் ஓர் த‌டாக‌ம் (குள‌ம்)அத‌ன் க‌ரையிலே அம‌ர்ந்து அங்கே வ‌ண்டுக‌ளின் ரீங்கார‌ம் கேட்டால் எப்ப‌டி உண‌ருவோமோ அது போன்ற‌தாம் இறைவ‌னின் நிழ‌ல். ‌



Sunday, March 18, 2007

The right and Just Use of one's tongue.

பொறிகள் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு ன்றியமையாதவை.
All senses of perception are essential for man, to lead his day-to-day life.

அப்பொறிகள் யாவும் நன்றாக அமைந்து நன்றாக செயல்பட்டாலொழிய மனிதன் இயல்பாக வாழ்வது கடினம். These senses of perception are to be anatomically well. They also need to perform well for anyone to live a life of quality.

ஆயினும் இப்பொறிகளை கட்டவிழ்த்து விடின் அவை மனிதனைத் தீய எண்ணங்களுக்கும், தீய சொற்களுக்கும் தீய செயல்களுக்கும் இட்டுச்சென்றுவிடும். ஆகையால் புலன்களை அடக்கி வாழ்வதே நன்னெறியாகும். However, if one does not have control over these five senses, it is quite probable that they may lead man to wicked deeds and live a unethical life. It is hence ethical to have these senses under one's control.

பொறி என்பவை ஐந்தாம். உடல், வாய், கண், மூக்கு, காது ஆகியவை.
The five senses of Perception are skin, tongue, eye, nose and ear.
இந்த பொறிகளின் தன்மைகளை புலன் எனச் சொல்கிறோம்.
உண்ர்வது, சுவைப்பது, பார்ப்பது, நுகர்வது, கேட்பது எல்லாம் பொறிகளின் தன்மை எனப்படும்.

பொறிகள் ஒன்றுக்கு மேற்பட்ட கருமங்களைச்செய்யும் இயல்புடையவை.
உதாரணமாக, சுவைப்பது நா. நா பேசுவதிற்கும் முக்கிய உறுப்பாம்.
Each sense of perception does more than one job. For instance, the tongue aids in tasting the food as well as helping speak.

நாவில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் சுவையை உண‌ரும் மொட்டுக‌ள் (buds) உள்ள‌ன‌. க‌ச‌ப்பு, உறைப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, உவ‌ர்ப்பு ஆகிய‌ ஆறு வ‌கையான‌ சுவைக‌ளையும் உடன் உண‌ர்ந்து தேவைக்கேற்றவாறு உண்ண உறு துணையாய் இருப்பது நாவே. There are taste buds in tongue which convey the right taste and aid in the intake of the right food needed for one.

ஆயினும் நாவின் மற்றோர் சிறந்த பணி பேசுவது. நற்சொற்களைப் பேசி இறைவன் நாமத்தினை என்னேறமும் போற்றிப்புகழ்ந்து பேசுவதே பாடுவதே நாவின் முக்கிய வேலை என்பார்.
Nevertheless, the more important job of the tongue would be to speak only such words as to create an environment which helps everyone around. To talk of His Greatness, to speak of His Glory and to sing songs of His glory would be the tongue's prime job.

அறனெறிச்சாறம் கூறுவதைப்பார்ப்போமா?
The epic Aranericharam summarizes the vital function of tongue as follows:

கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளி மதுரம்
உப்புஇரதம் கொள்வன நாஅல்ல ‍‍ தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டுவந்து எப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா.

Let not the function of tongue be JUST to distinguish and convey different tastes like sweet, bitter, hot etc.; for, verily, the tongue exists to extol His Glory who has won over all the five senses of perception.




Friday, March 09, 2007

What is "Righteousness"?

அறம் யாவது என்ன ?

பொறாமை, பேராசை, கோப‌ம், க‌டுஞ்சொல் ஆகிய‌ நான்கு குற்ற‌ங்க‌ளையும் நீக்கி வாழ்வ‌து அற‌மாகும் என‌ வ‌ள்ளூவ‌ர் (Valluvar) கூறுவார். (Righteousness is basically that which rids jealousy, greed, anger, loathful words)

"அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், நான்கும்
இழுக்கா இய‌ன்ற‌து அற‌ம்"

மற்றும், "ம‌ன‌த்துக்க‌ண் மாசில‌ன் ஆத‌ல், அனைத்து அற‌ன்" என‌வும் குறிப்பிடுகிறார். (Righteousness springs from a mindset rid of all dirts)

ஆக‌, அற‌ம் என்ப‌து "இதுவ‌ல்ல‌" என‌ச் சில‌ தீய‌ குண‌ங்க‌ளைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், அற‌ம் என்றால் இதுதான் என‌ எங்கே சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து ?

அற‌ நெறிச்சார‌ம் என்ற‌ ப‌ண்டைய‌ நூலில், அறத்தின் வ‌ழியாய் அமையும் ப‌த்து ப‌ண்புக‌ள் யாவை என‌ அழ‌காக‌ தொகுத்து த‌ரப்ப‌ட்டுள்ள‌து.

பார்ப்போமா?

"மெய்ம்மை, பொறையுடைமை, மேன்மை, த‌வ‌ம், அட‌க்க‌ம்,
செம்மை, ஒன்று இன்மை, துற‌வுடைமை,
‍ ந‌ன்மை,திற‌ம்பா விர‌த‌ம் த‌ரித்த‌லோடு -
இன்ன‌அற‌ம் ப‌த்தும் ஆன்ற‌ குண‌ம்."

உண்மை பேசுத‌ல்,(Truthful words) பொறுமை காத்த‌ல்,(patience) பெருமைப‌ட‌ வாழ்த‌ல் (magnanimity), த‌வ‌ம் (penance), அட‌க்க‌ம் (humility), ந‌டு நிலைமை, (unbiased judgmental level)த‌ன‌க்கென‌ ஒன்றும் வைத்துக்கொள்ளாது பொது ந‌ன்மைக்காக‌வே உழைத்து ஈட்டிய‌ பொருளை செல‌விடுத‌ல்,(not to keep even one's wealth for personal gains but to spend it for welfare of community) எதிலும் ப‌ற்று இலாது இருத்த்ல்,(detachment) ந‌ல்ல‌ன‌ எதுவோ அதை துணிந்து செய்த‌ல்,(to steer to do what one feels as right), த‌ன் நிலைகள், கொள்கைக‌ள் யாவ‌ற்றையும் காலத்திற்கேட்ப, மாற்றாது க‌டைப்பிடித்த‌ல்,(to stick to one's own principles,even during adversity), இவை தான் அறம் .

ஐநூறு ஆண்டுக‌ட்கு முன்னே சொல்ல‌ப்பட்ட‌து இது.

இன்றைய‌ கால‌ ந‌டைமுறைக்கு, அர‌சிய‌ல், பொருளாதார‌ வாழ்விற்கு ஒத்து வ‌ருமா என‌ ந‌ம‌க்கு ஐய‌ம் ஏற்ப‌டுவ‌து இய‌ற்கையே.

Saturday, February 24, 2007

Your Bodyguard is just "What Good You do to your fellowmen"

அன்புள்ளம் கொண்ட இனிய நண்பர்களே,

இந்த வலைப்பதிவு துவக்கிடும் முதல் பக்கத்திலேயே நான் குறிப்பிட்டது "அறம் செய விரும்பு " என தமிழ் மூதாட்டி அவ்வை சொன்ன ஆத்தி சூடியை .விரும்பு எனும் சொல்லுக்கு desire என பொருள் கொள்வின், அந்த விரும்புதலுக்குப்பின்னே ஒருஅழுத்தமான ஆவல், ஒரு தொலை நோக்கு இருக்கவேண்டும். மற்றோருக்கு உதவிட வேண்டும் என்ற ஆசை இருப்பினும், எத்தனை பேருக்கு அந்த ஆசையை உடன் செயல்படுத்திட வேண்டுமென முனைப்பு ஏற்ப‌டுகின்ற‌து...? ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு உத‌வ‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தையே ந‌ம்மில் ப‌ல‌ர் ஒத்திப்போடுகின்ற‌ன‌ர். ந‌ன்றே செய்க‌ அதை இன்றே செய்க‌ என்போர் சான்றோர்.வ‌ள்ளுவ‌ர் கூறுகிறார்:"

அன்று அறிவாம் என்னாது அற‌ம் செய்க‌, ம‌ற்ற‌து
பொன்றும் கால் பொன்றாத்துணை."

இறக்கும்போது ந‌ம‌க்கு ந‌ல்ல‌ ந‌ண்ப‌னாக‌ நிற்ப‌து அற‌ம் ஒன்று ம‌ட்டுமே.


அறநெறிச்சாரம் எனும் வெண்பா வடிவில் அமைந்த ஒரு அற்புதமான நீதி நூல் தமிழ் இலக்கியத்தில் ஓர் பொக்கிஷமாக உள்ளது. ஏறக்குறைய 500 ஆண்டுகட்கு முன்னே சமண மதத்தைச் சார்ந்தவராக கருதப்படும் முனைப்பாடியார் என்பவரால் ‌இயற்றப்பெற்றதாகும். நாயக்கர் மன்னர் காலம் எனச்சொல்லப்படும் 13ம் நூற்றாண்டில் சமயங்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு மக்கள் யாவருக்கும் நீதியையும் நேர்மையும் புகட்டிய தமிழ் நூல் இதுவாம்.

அறத்தினை புவியில் பிறந்தோர் யாவரும் உரிய காலத்தில் தம் உயிரோடு உள்ள காலத்திலேயே செய்யவேண்டும் அறத்தினை உடலை வருத்தி உழைத்தாகிலும் செய்யவேண்டும் . பாடலைப் பார்ப்போம்.

" மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து
பின்னை அறிவென் என்ற்ல் பேதைமை
‍‍ தன்னைத் துணித்தானும் தூங்காது அறம் செய்க ! கூற்ற‌ம்
அணித்தாய் வருதலும் உண்டு."

இளமைக்காலம் மின்னல் போலே,

அது என்றும் நிலைத்து நிற்கும் என நினைத்து பிற்காலத்தில் அறம் செய்வோம் என காலம் தாழ்த்துவது பேதைமை ஆம். யமன் வருவான் எப்போது என யாருக்குத்தெரியும் ?இளமைக்காலத்திலே அவன் வரின் அறம் செய்வது எப்போது ?

ஆகவே தன்னை வருத்திக்கொணடாவது தாமதம் ஏதும் இன்றி உடன் அறச்செயல்களைச் செய்க.

வள்ளுவர் கூறுவார்:

"நாச்செற்று விக்குள் மேல் வாராமுன்,
நல்வினை மேற்சென்று செய்யப் படும் "

பேச்சு நின்று விக்க‌ல் மேல் நோக்கி வ‌ருவ‌த‌ற்கு முன்னே ந‌ல்ல‌ க‌ரும‌ங்க‌ள் செய்ய‌ப்ப‌ட‌வேண்டும்.

Lesson:

Never delay doing good things when you are active,
since by the time,
you think of starting,
you may not be.

Sunday, February 18, 2007

Fix your Mind on "What You Want?"

மனிதனின் அன்றாற வாழ்க்கையிலே எல்லாமே எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. ஒன்றிருந்தால் இன்னொன்று இருக்காது. எல்லாமே தனக்கு வேண்டும் என ஆசைப்படுவதில் பெரிய தவறு இல்லை என சொன்னாலும் கடைசியில் எது தனக்கு மிகவும் முக்கியம் என வரையறுத்துக்கொள்வது மிக அவசியம்.

ஆங்கிலத்தில் Eat the Cake and Have it too என சொல்வார்கள்.

கையிலே கேக் வைத்துக்கொள்ளவேண்டும், அதே சமயம் அதை சாப்பிடவும் வேண்டும் என்றால் முடியுமா ?
அது போல‌ வாழ்க்கையில் ஒன்று வேண்டுமெனில் இன்னொன்றை விட்டுக்கொடுக்கவேண்டித்தான் வருகிறது.

நியாயமான ஆசைகள், விருப்பங்களுக்கே இப்படி என்றால் பேராசை பிடித்தவர் நிலை என்ன?

பொன்னிலும் பொருளிலும் மற்ற சுகங்களிலும் பேராசை கொண்டவர் எதெல்லாம் இழக்க நேரிடும் என்பதை ஒரு நீதி வெண்பா மிக துல்லியமாக எடுத்துரைக்கிறது.

" போற்று குருகிளைஙர் பொன்னசை யோர்க்கு இல்லை.
தோற்றுபசிக்கு இல்லை சுவைபாகம்... தேற்று கல்வி
நேசர்க்கு இல்லை சுகமும் நித்திரையும் காமுகர்தம்
ஆசைக்கு இலைபயம்மானம். "

பணத்தாசை கொண்ட உலோபியர்க்கு நல்ல ஆசிரியர், நல்ல உறவினர் கிடைப்பது அரிது.ப‌சி ப‌சி என‌ அலைப‌வ‌ருக்கு ந‌ல்ல‌ சுவை மிகுந்த‌ ச‌மைய‌ல் கிடைப்ப‌து அரிது.ந‌ல்ல‌ அறிவு பெற‌ விளைவோருக்கு உற‌க்க‌ம் கிடைப்ப‌து அரிது. க‌ல்வியில் சிற‌ந்து விள‌ங்க‌ முனைவோருக்கு ம‌ற்ற‌ இன்ப‌ங்க‌ள் கிடைப்ப‌துஅரிது.காமம் கொண்ட‌வ‌ர் ஆசைக்கு அவ‌மான‌ ப‌ய‌ம் இல்லை.

எத்துணைக் க‌ருத்தாழ‌ம் உள்ள‌ வெண்பா பாருங்க‌ள்.தின‌மும் ஒரு நீதி நூல் க‌ருத்தினை உள் வாங்கிக்கொள்ளுங்க‌ள்.

Monday, February 12, 2007

Unravelling the Mystery of Omnipresence of Almighty

Listen to Music Dedicated to Deity Shiva ( Thevaram by Odhuvar)
http://www.musicindiaonline.com/music/devotional/s/diety.7/language.8/
Click on the above line, and select and listen to songs by S.P.Balasubramanian

இந்த நாள் மிக்க நல்ல நாள். வருடம் முழுவதும் சிவ நாமத்தை ஜபிக்க முடியாது போனாலும் இந்த சிவராத்திரி நாள் அன்றாவது இறைவன் நாமத்தை உச்சரித்தல் வேண்டும்.

சிவாய நமஹ என்பது ஸூக்கும பஞ்சாட்சரம்.

நம சிவாய என்பது தூல பஞ்சாட்சரம்.

ஸ்தூல‌த்தின் உள்ளே ஸூக்சுமம் உள்ள‌து. ஆக‌ ந‌ம‌து உட‌லையே கோவிலாக‌க் கொண்டு, உள்ள‌த்தில் ஒளி விளக்காக‌ இறைவ‌னை நினைவு கொண்டு ம‌ன‌தை ஒரு முக‌ப்ப‌டுத்தி ஓம் ந‌ம‌ சிவாய‌ என‌ ம‌ன‌திற்குள்ளே தொட‌ர‌ உச்ச‌ரித்த‌ல் ந‌ல‌ம்.















அதுவாகி அவனவளாய் எல்லாம் ஆகி

அடி நடுவு முடிவாகிய கண்ட மாகிப்

பொதுவாகிப் பல்லுயிர்கள் அனைத்துக்கெல்லாம்

புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி

மதுவாகி வ்ண்டாகி சுவையுமாகி

மலராகி மணமாகி மதிக்கவொண்ணா

அதுவாரும் அகாரமதே மூலமாகி

அண்டம் எல்லாத் தாங்கி நின்ற அம்மூலமே

அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது.. .தாயுமானவர்.

உபனிடதம் கூறுகிறது...அவன் அங்கு இருக்கிறான். இங்கு இருக்கிறான். தூரத்தில் இருக்கிறான். அருகிலும் இருக்கிறான். பெரிதிலும் பெரிதாக இருக்கிறான். சிறியதிலும் சிறியதாகவும் இருக்கிறான்.

பாரதி தனது பாட்டுக்களிலே கூறுவான்.

ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியுந்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ..ஒன்றே ஆனாகிலுகனைதூம் சாரும்...அவை அன்றியோர் பொருளுமில்லை, அன்றி ஒன்றுமில்லை.

திருமூலர்
கூறுவார்.

உண்ணும் மருந்தும் உலப்பு இலி காலமும்
பண் உறு கேள்வியும் பாடலுமய் நிற்க்கும்
விண் நின்று அமரர் விரும்பி அடி தொழ
எண் நின்று எழுத்து அன்சும் ஆகி நின்றானே.

ஆகவே எல்லாம் ஆகி எல்லாவற்றிலும் நிறைந்து பரவி பிரகாசித்து அருள் பொழிவது பராபரமே .

பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் கடவுளை இன்னார் என்று 28ம் சூத்திரத்தில் வர்ண்ணனை செய்யப்படுவதைப் பார்ப்போம்.

" ஸ ஏஷ பூர்வேஷாம் அபி குரு காலேனாவச் சேதாத்"

அதாவது, இறைவன் கால எல்லைக்குட்படாதவன். எல்லா குருமார்களுக்கும் அவனே குரு"

அவ்வாறு குருவாக் போற்ற்ப்படும் இறைவன் "தனக்கு உவமை இல்லாதான்" எனவும் "வேண்டுதல் வேண்டாமை இலான்" என திருவள்ளுவர் முதல் அதிகாரத்தில் (கடவுள் வாழ்த்து) குறிப்பிடுதல் காண்க. ‌

குயிற்பத்து என்னும் தில்லையில் அருளிய திருவாசகத்தில் ஒரு விருத்தம் :

"கீதம் இனிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவின்
பாதாளம் ஏழினுக்கு அப்பால்
சோதி மணிமுடி சொல்லின்
சொல் இறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இல்லான்
அந்தம் இலான் வரக்கூவாய்."

புலப்படுகிற பிரபஞ்சமாகவும் புலன்களுக்கு அப்பாற் பட்டவனாகவும் இருப்பவன் பரமன் ஒருவனே. அவனுக்கு அன்னியமாக ஒன்றுமில்லை.

இதே க‌ருத்தினை க்கொண்ட‌ உப‌னிஷ‌த் மந்திர‌ம் :

ய‌ஸ்மாத் ப‌ர‌ம் ந அப‌ர‌ம் கிந்சிது ய‌ஸ்மாது அனீயோர் ந‌ ஜ்யாய‌: அஸ்திவிருக்ஷ‌ இவ‌ ஸ்த‌ப்த‌; திவி திஷ்ட‌தி ஏக‌; தேன‌ இத‌ம் பூர்ண‌ம் புருஷேண‌ ஸ‌ர்வ‌ம்.( ம‌ஹா நாராய‌ணோப‌னிஷ‌த‌ம்...12 13)

யாரைக்காட்டிலும் மேலான‌தும் வேறான‌தும் ஏதும் இல்லையோ, யாரைக்காட்டிலும் நுண்ணிய‌தோ பெரிய‌தோ ஏதுவில்லையோ, அவ‌ர் த‌னிப்பொருள். விருக்ஷ‌ம் போன்று அவ‌ர் உறுதி பெற்ற‌வ‌ர். வான் ம‌கிமையில் அவ‌ர் நிலைத்து நிற்கிறார். அந்த‌ப்ப‌ர‌ம‌ புருஷ‌ணால் இவை யாவும் நிறைந்து இருக்கின்ற‌ன‌.

ஞான சம்பந்தர் கூறுவார்.

காதலாகிக் கசி‍‍ந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

நான்கு வேதங்கள் யாவும் உன்னைப்புகழும். எல்லாம் உன்னிடத்தில்இருந்து இயங்கும் தன்மையுடையன ஆகையால் மெய்ப்பொருளான உன்னை நாதன் எனவும் நமச்சிவாய எனவும் போற்றுகின்றன.

உன் திருவடிகள் மேல் நாட்டம் கொண்டேன். உன் பணி செய்யும் ஓதுவார் மத்தியிலே மனம் உருகி கண்ணீர் மல்க நமசிவாய நமசிவாய என உன் நாமத்தை ஜபிப்பதே என் உயிரின் மேலான கடமை என உணர்ந்தேன்.

Tuesday, January 30, 2007

Let me Think of You now rather than never.

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க,
இமைப்பொழுதும் என் நெஞ்சி்ன் நீ்ஙகாதான் தாள் வாழ்க,

Sunday, January 28, 2007

Within and Yet So far Away..

Ae¡MùL]ôRT¥ GeÏm ©WLôNUôn B]kR éoj§Vô¡ ..

..G]j RôÙUô]Yo Cû\Y²u ×Lr TôÓYôo.

.AqYôß GeÏm TWkÕ ¨uß AÚs Tô­dÏm BiPYû] CpûX G]fùNôpúYôÚm HWô[m. BiPYu EiÓ , CpûX Gu\ YôReLs AkR BiPYu Øk¨ûX«úXúV SûPùTß¡u\] EiÓ GuúTôûWÙm CpûX GuúTôûWÙm, Ruû] BWô§lTYûWÙm AYU§lTYûWÙm ×LrúYôûWÙm CLrúYôûWÙm Ju\ôLúY CqÜX¡p EXô® YW, Rôu UhÓm. LôQ ØtTÓúYôÚdÏ UhÓúU., ×XlTÓm ùUnlùTôÚ[ôL Cû\Yu Es[ôu.

Cû\Yu EiÓ G]fùNôpúYôÚm, AYu, Rôu LiPYôß UhÓúU Es[RôL, RUdÏ l׬kRYôß Rôu, Es[RôLl Tû\ NôtßYÕPu ¨pXôÕ. Utú\ôo LiP LPÜ[o VôYÚm U]l©WûU G]Üm ùTôn G]Üm á±, AjÕPu ¨pXRôÕ, RjRm LPÜû[ UhÓúU ×Lr TôPÜm AYû]j Õ§dLÜm Ut\YûW Ytl×ßjÕ¡u\]o. CR]ôp Aq®û\Y]ôp TûPdLlThP CqÜX¡p AYu TûPjR UôkRo VôYÚm RUdÏsú[ NfNWÜ NiûP TX ùNnÕ, Ø¥VôR ©QdÏLÞPu JÚSôs U¥¡u\]o.

AY]u± Ko AÔÜm AûNVôÕ.

.....GuTôo RôÙUô]Yo.

DiÓ, Uô²Po, AYu Vôo? G] Yô§hÓ f NiûP «ÓYÕm

AYu ùNVúXô ? A±OúW A±Yo.

Thursday, January 04, 2007

SCRIPTURES DEFINE >>DO WE FOLLOW?

ùTÚùS±Vô] ©WQYm KokÕ

ÏÚùS±VôÛûW ᥠSôp úYRm

§ÚùS±Vô] ¡¬ûV CÚkÕ

ùNôÚTm Rôú]ôo ÕL°p TôolTôúW. .....§ÚUk§Wm 12..227

ùTÚ ùS±Vôm Øj§ ùS±Vô] ©WQYjûRj ùR°kÕ ÏÚ®Pm ETúRNm ùTt\ ©u× RjÕYU£ G]fùNôpXlTÓm Uû\ Yôd¡Vj§u EhùTôÚ°û] EQojÕm AjÕûYR ùS±«u AL Y¯Tôh¥p X«jÕ Rôu GuTûR ®ÓjR ¨ûX«p ©WU ùNôÚTm LiPYo AÕYôLúY B]Yo AkRQo BYo.

ùTônVôùUô¯l×XYo §ÚYsÞYo áßYôo.

.AkRQo GuúTôo A\úYôo

.

AkRQo G]lTÓúYôo JÝdLm RY\ôRYo Bqo.

GkSôÞm AYÚdùL] ùS±Ls Es[]..

§ÚUk§Wm áß¡\Õ.

AkRQo BúYôo AßùRô¯p éiÓú[ôo.

ARôYÕ ©\®ûV J¯dÏm ®û] ùNnRp úYiÓm.

AÕ Gu]?

ùNkRZp Km© ØlúTôÕm ¨VUm

ùNn Rm RY LÚUjÕ ¨uß

BeÏ ChÓfNk§Ùm K§f

NPeÏ AßlúTôoLú[.

êuß úYû[Ùm úYs®j¾ Y[ojÕ RUdÏ CPlThP Nk§Vô] YkR]eLû[jRY\ôÕ ùNnRp AY£Vm ©uú] Õ¬V ¨ûX«p ®[eÏYÕm úYiÓm

Õ¬V ¨ûXVôYÕ,,

,,

úYRj§u Ø¥Yô]Õ ET¨PRm.

ARu EiûUlùTôÚs..

..RjÕYU£...Guàm ùTÚ Yôd¡VUôm.

RjÕYU£ Gu\ôp AÕ ¿Vôn CÚd¡\ôn GuTRôm.

Rj ØRtùNôp.

jYm CWiPôm ùNôp

A£ êu\ôm ùNôp.

CkR 3 ùNôtLû[Ùm LPkR ¨ûX £Ym GuTRôm

AÕ úY\pX....¿úV.. G] EQWdá¥V ¨ûX.

CkR Yôd¡Vm NôUúYRj§p Es[Õ.

V_÷oúYRj§p Es[ ùTÚYôd¡Vm...Aam ©ÚmUôvª GuTRôÏm.

Sôu ©ÚmUUôL CÚd¡ú\u. GuTÕ CRu ùTôÚs.

Rôu Gut U] ¨ûXûVjÕ\kRYtdÏ R]d¡u± GÕÜm ùNnVôÕ GpXôm £qú] G] Gi¦«ÚlTYÚdÏ Cq®WiÓ Yôd¡VeL°u EhùTôÚs

®[eÏYÕ Nôj§VUôm.

ºYu úYß £Yu úYß ApX.

.Vôu ùVàm ¨ûX A¯ÙmúTôÕ EQWlTÓm ¨ûX

.ET¨PRm áß¡\Õ

...Aam N lÚmUô Au]m N lÚmUô úTôdRô N lÚmUô

..Rôu G] ¨û]VôÕ. R]dÏ úYiÓm G] ¨û]VôÕ, GpXô E«ûWÙm Ru E«o G] Gi¦, YZeÏúYôo U] ¨ûX Gu] ?

Sôu £Yu. Sôu CÓm Au]m £Yu. Sôu CÓm Au]jûR EiTYàm £Yú].

BLúY ºYu £Yú]ôÓ AjÕ®RUô¡ ¨u\úTôÕ ®û[Ùm úT¬uTjûRl úTNÜm CVÛúUô ?

Friday, December 15, 2006

na prajaya na karmana dhane na, thyagena ithi vimuchyathe.

Thursday, December 14, 2006

Live a purposeful Life . as visioned by.Sage Pathirigiriyar

TiûPjRªr ×XYoLÞs £jRo Tj§W¡¬Vôo R]Õ TôPpL°p UdL°u EsÞQoûY Rh¥ GÝl×Y§úX ANLôV YpÛ]o. CYo áßYôo. UôkR¬p TXÚm RtLôX ÑLeLÞdLôL RUÕ YôrSôû[ ÅúQ L¯d¡u\]o. A±Ü. A\U, Cq®WiûPÙm AuúTôÓ LXkÕ RôØm EiÓ ©\odÏm DkÕ ùTÚ U¡rÜ ùTßm AÚ[ô[oUhÓúU Rôm ©\kR ©\l©tÏ JÚ ùTôÚs LôiTYo BYo. Utú\ôo GpXôm Ru C[ûUdLôXùUpXôm JÚ ùTôÚÞªpXôÕ L¯jR©uú] Rm ØÕûUdLôXjúR Rm RYßdLôL YÚk§ ªfNdLôXjûRÙm L¯jÕ KnkÕ Ø¥d¡u\]o. U¥¡u\]o.

RdLôo RL®Xo GuTYo AYWYo

GfNjRôt LôQlTÓm .....GuTôo YsÞYlùTÚkRûL

RôØm YôrkÕ ©\ûWÙm YôZ ®Ó. Rôu Dh¥V ùTôÚs G²àm A§p JÚ Te¡û] Rô]m ùNnL.

¡ûPdÏm ùTôÚs VôYtû\Ùm Utú\#ôÚPu ©¬jÕ TVu ùTßL. CÕúY A\ Y¯. .

JÚYu A\Y¯ YôrkRô]ô CpûXVô GuTÕ AY]Yu ®hÓfùNu\YhPôp LôQlTÓm . Sôm ®hÓfùNpYÕs úTôt\lÓYÕ VôÕ? ùTôÚh ùNpYUô? ApX. UdLh ùNpYUô? AÕÜm AqY YôrkR YôrdûL«u RWm. GjÕûQ A[®tÏ Sôm A\ Y¯ SPkúRôúUô AkR A[®tÏjRôu Sôm ©uú] ¨û]Ü ùLôs[lÓúYôm GuTÕ ùYs°ûP UûX. .

úYRm áß¡\Õ.

...

Sôm §VôLm Gu\ A[Ü úLôXôp Rôu A[dLlTÓ¡ú\ôm.

BLúY ùTôÚs úYiÓm. B«àm AlùTôÚû[ A\ Y¯«#ó Dh¥ Au×Y¯«p ùNX®ÓL.

AÕúY AÚÞûPûU Bm.

CmU]m ùTt±P Sôu Guàm GiQjûRjÕ\k§ÓRp úYiÓm.

Tj§¬¡¬Vôo áß¡\ôo

Fu ¨û\kR LôVm E«o CÝkÕ úTôÏØu]m

Sôu C\kÕúTôL C² Sôu YÚYÕ GdLôXm.

GpúXôÚm Cu×t±ÚdL ¨û]lTÕúY ApXôUp

úYù\ôußm A±úVu TWôTWúU...