Pages

Saturday, September 26, 2009

இன்றைக்கு சனிப்பெயர்ச்சி !!!



இன்றைக்கு சனிப்பெயர்ச்சி. ஆம். தமிழ்கம் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் நம்புபவர்கள்
நன்மைக்காக, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலோ, அல்லது, எச்சரிக்கும் விதத்திலோ பல்வேறு பலன்கள் பல வலைப்பதிவுகளில், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் ,சனிப்பெயர்ச்சியின் பலன்கள், மேட ராசி முதல் மீன ராசி முடிய பிறந்தவர்களுக்காக‌ தரப்பட்டுள்ளது.

சூரிய மணடலத்தில் இருக்கும் கோள்கள் புதன், சுக்ரன், செவ்வாய், பூமி, குரு, சனி இவையெல்லாமே தாம் பாதையில் சுற்றிக்கொண்டே தான் இருக்கின்றன. சூரியன் ஒரு ந்ட்சத்திரம். இதுபோன்று லட்சக்கணக்கான நட்சத்திரங்களும், அவற்றின் மண்டலங்களிலே அவற்றின் ஈர்ப்புச் சக்தியினால் உந்தப்பட்டு சுற்றும் கோள்களும் கோடிக்கணக்கானவை.

நாம் நமது சூரிய மண்டலத்தில் பூமி என்னும் ஒரு கோளில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். பிரமிக்கத்தக்கவாறு இந்த கிரகங்கள் சுற்றுவதை நாம் வானில் காண இயல்கிறது. சுக்ரன், செவ்வாய், புதன்,
குரு நம் கண்களுக்கே தெரியும். சனி கிரகத்தை வானியல் ஸ்டெல்லார் ஸ்கோப் வழியே பார்க்கலாம்.

புதன் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால் பார்ப்பது கடினம். இருப்பினும் அதை ஸ்டெல்லார்ஸ்கோப் வழியே பார்க்க இயலும்.

இந்த கிரகங்கள் எல்லாம் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கின்றன என்ற ஒரு நம்பிக்கை மனிதன் தோன்றிய காலம் முதல் இருந்து வருகிறது. மேடராசி முதல் மீன ராசிவரை அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடுத்த இரண்டரை வருடங்கள் ( அதுதான் சனி கன்னி ராசியில் இருக்கப்போகும் காலம்) எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

காலம் என்னவோ ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. புதியன தோன்றுவதும் பழையன மறைவதும் இயற்கையே. நல்லவையும் தீதும் சக்கரம் போல் சுழன்று கொண்டே தான் வருகின்றன.

அருணகிரி நாதர் "நாள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், எனை நாடிவந்த கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும்" என்கிறார்

மனித‌ வாழ்வில் பிச்சையெடுப்பவனும் மனம் விட்டு ஒரு நாள் சிரிக்கிறான். கோடியதிபதியும், மன உளைச்சல் தாங்காமல், மருந்துகள் சாப்பிடுகிறான்.

இவற்றிற்கெல்லாம் கிரகங்களைக் காரணமாக்கிக்கொள்வது அறிவு பூர்வமானதா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல துவங்கவில்லை. எனது கோட்பாடு, நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும் என்பதே.

இருப்பினும், சனி பிடிப்பது, இருப்பது, விடுவது எல்லாமே நமது மனத்தில் தான் இருக்கிறது.

இறைவனை இதயத்தில் நிறுத்தி, தான், தனது என்ற எண்ணங்களைத் துறந்து, உலகில் வாழும் எல்லா உயிரினங்களையும் தாமாகவே நினைத்து அன்பு பூண்டவருக்கு எந்த தீமையும் அணுகுவதில்லை.

இது திண்ணம்.

ஆக, சனிப்பெயர்ச்சி நாளன்று ஒரு உறுதி எடுப்போமா !

தீய எண்ணங்களைத் தொலைப்போம்.

அவை தொலைந்தாலே சனி விட்டவாறு தான்.

வாழ்க நலமுடன்.

Friday, September 11, 2009

இங்கே யார் சொல்வார்கள் ?




courtesy: images.google.co.in


யார் சொல்வார்கள் ?

இவ்வாண்டு அமெரிக்க நாட்டில் பல ஆண்டுகளுக்குப்பின் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அமெரிக்க பள்ளிகள் எல்லாம்
துவங்கும் நாளான 9 செப்டம்பர் 2009 அன்று தாமே பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே நேரடியே
விடியோ மூலமாக பேசுவது என முடிவெடுத்தார் பிரசிடென்ட் ஓபாமா அவர்கள்.

இவர் மாணவர்களுக்கு என்ன பேசப்போகிறார் எனத் தெரிந்து கொள்வதற்கு முன்னமேயே அதற்கு பல்வேறு விதமான‌ எதிர்ப்புகள், எதிர்கட்சியிடமிருந்து, சில பல கல்வி நிறுவனங்கள் உரிமையாளர்களிடமிருந்து, அம்பு போல் வீறிப்பாய்ந்தன.

ஒரு சில மானிலங்கள் அவரது நேரடிப் பேச்சினை ஒலிபரப்ப, அல்லது ஓளிபரப்ப இயலாது எனவும் தெரிவித்தன.

அவர் பேசினார்.

நாடெங்கிலும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கோ, அல்லது அவர்களின் ஆசிரியர்களுக்கோ தெரியாதது இல்லை. மாணவர்களின் கடமைகள் என்ன என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது சொல்லவும் செய்கிறார்கள்.

இருப்பினும், ஒரு நாட்டின் முதற்குடிமகன் நேரடியாக மாணவ சமுதாயத்தை நோக்கி, மாணவர்களே ! உங்கள் கடமை என்ன ? பொறுப்பு என்ன ? எனத் தெளிவாகப் பேசும்பொழுது கேட்கும் இளம் இதயங்கள் பூரிப்படைகின்றன. தங்கள் எதிர்காலம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலம் எல்லாமே அவர்கள் படிப்பின் பெருமையை உணர்ந்து தமது பொன்னான‌ காலத்தை வீணாக்காது படிப்பினையே இலக்காகக் கொண்டு நடப்பதே, அவர்களது கடமை என உணர்த்துகிறார் பிரசிடென்ட் ஓபாமா.

அவரது ஆங்கில பேச்சின் தொகுப்பினை இங்கே காணலாம்.
Please click below:



ப்ரசிடென்ட் ஓபாமா சொல்வது போல,

நாடெங்கிலும் கல்விக்கூடங்க்ள் பிரும்மாண்டமாக அமைக்கலாம். அவற்றில் பணிபுரியும் பேராசிரியர்கள் தத்தம் கடமைகளை பொறுப்பினை நன்கு உணர்ந்து செயல்படலாம். மாணவர்களின் பெற்றோர்களும் தத்தம் சேய்களின் எதிர்காலத்திற்கு பொறுப்பேற்று ஆசிரியர் பெருமக்கள் பணிக்கு உறு துணையாய் நிற்கலாம்.

இத்தனை இருப்பினும் படிக்கும் மாணவனின் எண்ணங்கள் படிப்பினில் இருக்கவேண்டும். எத்துறை ஆயினும் அவனது தேர்ச்சி முழுமையாக இருக்கவேண்டும்.

அறிவு, திறன், ஈடுபாடு மூன்றிலுமே மாணவர்கள் கண்ணையும் கருத்தையும் வைத்திடல் வேண்டும்.

கல்வி கற்போர் வழியெங்கிலும் தடைக்கற்கள் பல.அவற்றினை மனம் தளராது கடந்து இலக்கு ஒன்றை மட்டிலுமே சிந்தையில் வைத்து முன்னேறுவது மாணவர் கடமை.

அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா அமெரிக்க மாணவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் அவர் பேச்சு ஒரு அறை கூவலாக அமைந்திருக்கிறது.
PLEASE CUT AND PASTE THE URL THAT FOLLOWS TO LISTEN TO PRESIDENT OBAMA.
http://www.youtube.com/watch?v=3iqsxCWjCvI&feature=popular


கல்விக் கூடங்களில் பல்வேறு கட்டங்களில் படிக்கும் மாணவர்கள் இன்று திசை திரும்பிப்போய், பின் பல காலத்திற்குப்பின்னே நொந்து நூலாகிப்போவது இன்றைய இந்திய சூழ்னிலை.
அரசியலுக்கும் சினிமாவுக்கும் அடிமையாகி, தம் பெற்றோரையும் நோகவைக்கும் மாணவர்கள் கணிசமான விழுக்காட்டிலே இன்று இருப்பது வெள்ளிடைமலை.

திடீர் புகழுக்கும் பணத்துக்கும் பேராசைப்படும் இன்றைய சமூக சூழ்னிலையில் மாணவர்களை சரியான நேர் கோட்டில் நடத்திடும் பொறுப்பு யாரைச்சேர்ந்தது ? ஆட்சியாளர்களையா ? ஆன்மீகவாதிகளையா ? கல்வி போதிக்கும் ஆசிரியர்களையா?
பெற்றோர்களையா ?

இவர்களெல்லாம் உண்டு. ஆனால், இந்தப்பொறுப்பு முழுக்க முழுக்க, மாணவர்களுக்கே உள்ளது. ஒவ்வொரு மாணவனும் இதை உணரும்போது, அவனும் உயர்வான், அவன் சார்ந்த குடியும் உயரும், நாடும் உயரும்.

நீர் உயர, வரப்புயரும். வரப்புயர நெல் உயரும் என்பதுண்டு.

இவர்களுக்கு இன்னதான் இன்றைக்கு நீ செய்யவேண்டும் என்பதை இங்கே யார் சொல்வார்கள் ?