Pages

Friday, January 20, 2012

எல்லாம் ஒண்ணு தான்யா. உள்ளே அதே தாங்க இருக்கு....சாலமன் பாப்பையா




எல்லாம் ஒண்ணு தான்யா.  உள்ளே அதே தாங்க இருக்கு.
தியேட்டர் வெவ்வேற படம் ஒன்னு தாங்க.
சமயங்கள் பற்றி சாலமன் பாப்பையா
பசுக்கள் வேறானாலும் பால் ஒன்றே. 
நாலடியார் சொல்கின்ற கருத்தினை நமக்குப் புரியுமாறு சொல்கின்றவர்
என்றுமே தமிழ் மக்கள் மனதிலே நிறைந்து நிற்கின்றார். 

Monday, January 16, 2012

மாடுகள் இல்லேயேல் மனிதன் இல்லை.

மாட்டு பொங்கல் பண்டிகை சிறப்புகள்.
தமிழ் மக்கள் பண்டை காலம் தொட்டே மாடுகளுக்கு மனிதனின் நன்றி உணர்வினை வெளிப்படுத்தும் வகையிலே இந்த சிறப்பான பண்டிகையை ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு மறு நாள் கொண்டாடுகின்றனர்.

மாடுகள் இல்லேயேல் மனிதன் இல்லை. மனித வாழ்வு மகிழ்ச்சியாக இருப்பதில் மாடுகளின் அங்கம் சிறப்புடைத்து. அயர்ச்சி அடையாது வயல்களில் உழைக்கும் அந்த ஐந்தறிவு படைத்ததாக நாம் சொல்லும் மாடுகள் தான் நாம் வயிறார உணவு தின்பதற்கு காரணம்.
மழையை படைத்த இறைவன், வெய்யிலை கொடுக்கும் சூரியன் இவர்களை நாம் வணங்குவது போல, மாடுகளையும் வணங்கி தொழுகிறோம். பசு மாடுகளை கோ மாதா என்றும் மகா லக்ஷ்மி என்றும் வர்ணித்து அவற்றை பூசை செய்கிறோம்.  இடையறாது பால் வழங்கும் அந்த வாயில்லா ஜீவன்களை காம தேனு என்றும் சொல்லி வணங்குகிறோம்.

மாடுகளுக்கிடையே போட்டியும் வைத்து அவைகளையும் உற்சாகப்படுதுவதே ஜல்லிக்கட்டின் துவக்க லட்சியம். மாடுகளை அலங்கரித்து, அவற்றினை நம் வீட்டு முக்கிய விருந்தினராக வரவழைத்து பூசை செய்து அவற்றிக்கு பொங்கல் அளித்து மகிழ்வது இந்த மாட்டு பொங்கல் வைபவத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.
மறைகளில் சொல்லப்பட்ட முறைப்படி இங்கு மாடுகளுக்கு பூசை செய்யப்படுகிறது.


மாடுகள் வயதாகிவிடினும் அவைகள் காக்கப்படவேண்டும். நமது அம்மா அப்பா வயதாகிவிட்டதே என்று அவர்களை  வெளியே அனுப்புவது நமது பண்பு அல்ல. வயதான அன்னையை நடு  இரவில் வெளியே துரத்தி விட்டு போகச் சொல்லிவிட்டு அவர்களை வெகு தூரம்  அனுப்பி விட்டு, ( அண்மையில் ஜீ தமிழ் டி.வி. யில் பார்த்த அதிர்ச்சி தந்த நிகழ்ச்சி ) ஏழைகளுக்கு அன்ன தானம் செய்கிறேன் என்று சொல்வது எத்துனை சிறுமைச் செயலோ அது போலவே தான், தனது வாழ் நாள் முழுவதும் மனித இனத்துக்காக உழைத்து பாடுபட்ட மாடுகளை காட்டுக்கு அனுப்புவதும் ஆகும்.  வயதான தாய் வீட்டிலே இருந்தால் மொன மொன என்றோ தொனோ தொனோ என்று தான் ஏதேனும் சொல்லிக்கொண்டு இருப்பது போல கிழ மாடுகளும் அவ்வப்போது குரல் கொடுக்கத்தான் செய்யும். அன்பாக அவைகளிடம் சென்று தோல் பட்டையை, முதுகை தடவி கொடுங்கள். கோடி புண்ணியம்.
மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு இன்றி அமையாத இரும்பு பாலம் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் ஆதாரம்.
நமது பரம்பரையில் மாட்டு பூசை செய்யும் வழி முறைகளை இங்கு பார்க்கலாம். இன்றும் பல கிராமங்களில் இது நடக்கிறது.  உண்மை இது.



நன்றி: ஆமந்த.

அது சரி.  இது தேவைதானா !! இப்படித்தான் நமது வீரம் வெளிப்பட வேண்டுமா !!


ஜல்லிக்கட்டு

MATTU PONGAL IS THE THANKS GIVING DAY BY THE FAMILY IN OFFERING POOJA TO COW ( GHO MATHA) AS OUR MOTHER GIVING US WITH AN ENDLESS SUPPLY OF MILK, YEAR AROUND. HINDU SOCIETY WORSHIP THE COW AS DIVINE MOTHER MAHALAKSHMI SHOWERING HAPPINESS & PROSPERITY TO THE FAMILIES. THIS IS THE DAY WE GET TO SEE ALL THE COWS & BULLS DECORATED AND WE GET TO THANK THE BULLS FOR THEIR HARD WORK IN THE FARM. THERE USED TO BE A BULL FIGHTING SESSION ON THIS MATTU PONGAL DAY




Category:


Indian epic and legends symbolise the reverence for animals, particularly cows & bulls, inherent in Indian philosophy. Religious symbolism stress animal welfare, animal protection and even worship. The man-animal bond has always been very strong because animals are being treated as close companions for his need and greed. This is the background of MATTU PONGAL in India.

ammaitha 11 months ago

Running through the events of my younger day's life in a rural hamlet, Maraiyur village, near Mayiladuthurai, toiling at the paddy fields in the process of ploughing, water in-let & outlet management, Nadavu in the wet lands, weed removal, fertilizing protecting from rats and such other tricky operations finally we reach the harvesting level. Many such tedious tasks are encountered in the premetive stage of cultivation in 1930s and 1940s without significant econnomic return.

ammaitha 11 months ago

All through the process of cultivation, transportation and human living, we are gifted with the most dutiful, endlessly hardworking companions the bull & cows. Their tioling labour, work and service to the humanity is un-parallel, amazing and astonishing without expecting anything in return.

ammaitha 11 months ago

The farmer community had attained Divine values to these silent companions and worship them on Mattu Pongal day over the past ages. Mattu Pongal festival had been unheard of in modern days and we seem to be gradually drifting towards Tractor pongal celebration. ammaitha finds great pleasure in finding an opportunity to run on this ancient festival in traditional pattern.

ammaitha 11 months ago

Saturday, January 14, 2012

பொங்கலோ பொங்கல்




நன்றி: தமிழ் கூடல்.

பொங்கலோ பொங்கல்.  பொங்கும் மங்களம்
எங்கும் தருக. என்றும் தருக.
எங்களது இனிய பொங்கல் வாழ்த்துக்களை எங்கள் பதிவுக்கு வரும் அனைத்து
நண்பர்களுக்கும், நாங்கள் அடிக்கடி சென்று மகிழும் பதிவுகளின் ஒன்றா இரண்டா இதுவரை ஓராயிரம் பதிவு ஆசிரியர்களுக்கும் எனது உற்றார் சுற்றார் அனைவருக்கும் 1961 முதல் 2001 வரை என்னுடன் பணி புரிந்த  எனது காப்பீட்டுத்துறையைச் சேர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் பொதுவாகவும், குறிப்பாக வும் சொல்லி மகிழ்கிறோம்.


தமிழ் வலை நண்பர்கள் என்றவுடன் இனிய நம் தாய் மொழியாம்  தமிழிலே வலை என்று நான் துவங்கிய நாள் முதலாய் உடனேயே அறிமுகம் ஆன திரு  ரம்னேஷ் ராஜகோபால் , அறிவு ஜீவி, பெரும் ஆற்றல் ஜீவி, இசையின் வழியே ஈசனிடம் இட்டுச்செல்லும் ஞானி   ஜீவா வெங்கடராமன், அமர கவி கபீரின் தத்துவங்களை விளக்கிச் சொல்லும் கபீரன்பன், குமரன்,  மௌலி, திகழ், மதுரையம்பதி, துளசி மேடம்,  தன மேலே பாட்டு எழுதவே அம்மனே இப்புவிக்கு அனுப்பி இருக்கும்  கவிநயா மேடம், சித்ரா , காயத்ரி, நிழற் படங்களை நிஜப்படங்கள் போல் எடுக்கும்   ராம லக்ஷ்மி, கீதா சாம்பசிவம்,ஒவ்வொரு நாளும் நமக்கு ஆலய தரிசனம் செய்ய மனமுவந்து அருள் தரும்  ராஜராஜேஸ்வரி, ஷிர்டி சாய் புகழ் பாடும் ஸ்ரீ கலா, லலிதா மிட்டல்,சோதிட நிபுணர், நகைச்சுவை வல்லுநர்  சுப்.பையா வாத்தியார், அருணை அடி, தி.ஆர். எஸ்.  கே ஆர் எஸ் , ஹரிணி,குறை ஒன்றும் இல்லை என்று சொல்லும்  லக்ஷ்மி, ஹ ர ணி , எனது பிறந்த கிராமத்து ஆங்கரை அன்பர் அரண்ய வாஸ் ராம முர்த்தி, ஈழத்தில் பிறந்தவர,  தமிழ் உணர்வு என்றால் என்னச் சொல்லிடும்  ஹேமா, அருட்கவி சிவகுமாரன், அவ்வப்போது என் வலைக்கு வந்து இக்கிழவனை உற்சாகப்படுத்தும் அபி அப்பா,அண்மைய காலத்து இலக்கிய வாதிகளை நமக்கு மறுமுறை அறிமுகம் செய்து வைக்கும் சிறந்த சிறுகதை ஆசிரியர்  பூவனம் வலை ஆசிரியர் ஜீவி, வலைச்சரத்தில் இந்த வார ஆசிரியர் சென்னை பித்தன், கவிதை துளிகள் என பெயரிட்டு மரபு சார் கவிதைகள் எழுதும் தங்க மணி, ராகவன்,சங்ககுரல் பத்திரிகை ஆசிரியர் அறிவுக்கடல், தேனம்மை லக்ஷ்மணன்,சித்தர்களையும் அவர்களது பாடல்களையும் கலைகளையும் விளக்கிசொல்லும்  தோழி, ஆதி மனிதன், தமிழ், அருணா , கான பிரபா, சுப்பு , கணினியில் புதுப்புது உக்திகளைப் பகிர்ந்துகொள்ளும்  சசி குமார், கர்நாடக இசையிலே தானும் மயங்கி விருந்தினரையும் மயங்க வைக்கும், வைத்யா, முத்து லக்ஷ்மி . ரம்யா , அனன்யா
ஹிமான்ஷு பாட்டில், வித்யா சூரி, சாதிக்க வேண்டும் என நினைக்கும் சாதாரணமானவன் என சொல்லும்  வை.கோபால கிருஷ்ணன் , வாசு, சமூக சிந்தனை ஆளர்  நந்தினி கிருஷ்ணன், டோஹாவிலே பார்த்த அதிசய மனிதர்  தக்குடு, ஹரணி, ஸ்ரீனிவாச கோபாலன், கட்டிட நிபுணர் வடுவூர் குமார், வேதங்கள் பொருள் தரும்  வாசுதேவன் திருமூர்த்தி, திருக் கயிலாதுக்கு நமை எல்லாம் அழைத்துச் சென்ற கோமதி அரசு, சீனா.கோபி ராம முர்த்தி, மா தேவி, அனந்த நாராயணன், ராம், என். கணேசன்,    பிரமிக்கச் செய்யும் கோலங்கள் போடும் வாணி முத்துக்ருஷ்ணன்    சின்னு கேசரி ,  டோண்டு , மற்றும் இட்லி வடை ஆசிரியர், மற்றும் இந்த பட்டியலில்   உடன் நினைவில் இல்லாது மறந்து போன பல நூற்றுக் கணக்கான தமிழ்ப் பதிவர்களுக்கும், இவர்கள் பதிவுகளுக்கு வரும் ஆயிரக்கணக்கான விருந்தினர்க்கும்,

சுப்பு தாத்தாவின் பொங்கல் வாழ்த்துக்கள்.

உங்களின் பொன்னான வாழ்த்துகளைப் பெற உங்கள் பெயரை க்ளிக்கினாலே போதும். உங்களது வாழ்த்துக்களும் பெறலாமே !!

தொடர்ந்து தமிழ் வலை தனை சிறப்பித்துக்கொண்டே இருங்கள்.

அடிக்கரும்பு இனிக்கும் வரை, தமிழ் வலைக்கு அடித் தளமாய் இருங்கள்.
தமிழுக்கு காவலனாய் இருங்கள்.

தமிழ்க் கடவுளாம் கந்தன் புகழ் பாடகனாய் இருங்கள்.