Pages

Saturday, May 21, 2011

அந்த நாளும் வந்திடாதோ !!!


காலமும் காலனும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.


அந்த நாளும் வந்திடாதோ !!! 

இங்கே மூன்று வித்தியாசமான காட்சிகள்.

முதலில்,  இள வயதில்,   சின்னஞ்சிறு வயதில் எந்தக்கவலையுமின்றி விளையாடியே பொழுதைக்கழித்த நாட்கள் .

அவற்றை   நினைத்து ஏங்குகிறார் கவிஞர் சிவகுமாரன் அவர்கள்.



    அவை மீண்டும் வருமா ?  என அவர் ஏங்கும் அதே வேளையில்

    இன்னொரு காட்சி.   வாலிப வயது இது.

    இள வயதில் காதலித்த ஒரு பெண்ணை கடுகி மணம் புரிந்து
    ஏதோ ஒரு நாள் சாலை விபத்தில் அவள் நடைப்பிணம் போல ஆன நிலை.
    
    ஐ.ஐ.டி. மாணவர் ஒருவர் எடுத்த குறும்படம் இது. முழுதும் பாருங்கள். 
   




    கடந்த நாட்கள் மணல் தரையில் சிந்திய பால் போலல்லவோ ?
    திரும்பப்பெறுதலும் இயலுமோ ?

    பிறிதொரு காட்சி.
    அவனை நினைத்து அவள் பாடும் பாடல்
    கண்ணனை ஏங்கி மீரா பாடும் பாடல் இங்கே.
 
     அந்த நாளும் வந்திடாதோ என எம்.எஸ். சுப்பு லட்சுமி பாடுகிறார்.
     இது இன்னொரு கோணம். இன்னொரு பார்வை.

Saturday, May 14, 2011

புதிய வானம்

 
 

pudhiya vaanam pudhiya boomi
புதிய வானம் புதிய பூமி 

Thursday, May 05, 2011

இந்த குட்டி பயல் எங்கே இருக்கிறான் ?


நடிகர் திலகம் சிவாஜி தோளிலும் நடிகையர் திலகம் சாவித்திரி யின் மடியில் தவழும் இந்த குட்டி பயல் எங்கே இருக்கிறான் ?  என்ன செய்கிறான்  ? யானை படை கொண்டு சேனை பல வென்று வாழ பிறந்தாயடா , என புகழப்பட்ட இச்சிறுவன் இன்று என்ன செய்கிறான் ?அரசியல் வாதியா அல்லது அறிவியல் மேதையா ? சினிமா ஸ்டாரா அல்லது சின்ன திரை டைரக்டரா ?  யார் அறிவார் ? 
என்ன தவம் செய்தனை ? என்று கண்ணனைக் கொஞ்சிய யசோதையை உயர்த்தி பாடும் பாடல் நாம் எல்லோருமே அறிவோமே !!  அது போலவே இமயத்திற்கு மேலான சிவாஜி , அவருக்கு நடிப்பிலே சவால் விடுமளவுக்கு நடித்த சாவித்ரிக்கும் செல்வனாக ( செல்வியோ !!) நடித்த இப்பயலை, நோக்கி நாம் சொல்வதெல்லாம் என்ன தவம் செய்தனை ? இந்த அதிருஷ்டம் (தமிழ்ச் சொல் என்ன என்பதை அறிந்துகொள்ள ஆவல்.)  யாருக்கு கிடைக்கும் !!


இந்த குட்டி பயல் எங்கே இருக்கிறான் ?