Pages

Friday, December 31, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்.




புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Saturday, December 25, 2010

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.




Happy Christmas Song


எல்லோருக்கும் எங்கள் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். பிரபல இசை வித்தகர் யேசுதாஸ் பாடும் பாட்டு கேட்க சொடுக்குங்கள்.
 அன்னை வேளாங்கண்ணி தாயின் புகழ் பாடும் கிருஸ்துமஸ் பாடல். 
திரு யேசுதாஸ் அவர்கள்.










Friday, December 24, 2010

இன்று அந்த நல்லவரின் நினைவு நாள். 24 December





இன்று அந்த நல்லவரின் நினைவு நாள்.

Wednesday, December 22, 2010

மூன்று அன்புச் செய்திகள்.

மூன்று அன்புச் செய்திகள். 

   அன்பின் வழியது உயிர் நிலை
   அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு

   என்னும் வள்ளுவப்பெருந்தகையின் குரலை 25 ம் தேதியன்று  கிறிஸ்துமஸ் திருவிழா அன்று    மேற்கோள் காட்டி எழுதுவோம் என்றிருந்த என் கண்களில் பட்டது:

   மூன்று செய்திகள்.  முத்தான கருத்துக்கள்.
   மூவுலகக்கிற்கும் பொதுவான கருத்துக்கள்.
   முனைப்புடன் படியுங்கள்.
    முன்னிருந்து செய்லபடுங்கள்.

    நன்றி: கல்கி வார இதழ்.
          
   பால் தினகரன் அவர்கள் .

   "......அன்பின் மூலம் அனைத்தையும் அடையும் சாத்தியம் உண்டு என்பதை நம்புங்கள் ......"
   " .....தேவன் ஒருவனே. ...."
   "......இறைவன் மீதான் வைராக்கியமான் பயபக்தி, நமது பிரார்த்தனையில் நேர்மையும், உண்மையும்   இருந்தால் இறைவன் செவி கொடுப்பார்.   .......அகம்பாவம் தவிர்......உன் மூலமாக தேவன் இதைச் சாதித்தார் என்று உணர்.  ....."
   ".......இந்தியாவைக் காப்பாற்றியது கூட இந்திய மக்களின் இறைபக்தி தான். அது கிறிஸ்துவாக இருக்கட்டும்,         கிருஷ்ணனாக இருக்கட்டும், இந்த இறை பக்தி, பயபக்திதான், நம்மை உலக நாடுகளுக்கான கருணை தரும்  நாடாக மாற்றும்.  அனைத்துக்குமான அரிய மருந்து பிரார்த்தனை தான்."

    " .....அகந்தை அழித்து அன்பைக்கூட்டி, விட்டுகொடுக்கும்  பண்பை
வளர்த்துக்கொள்ளவேண்டும். இது நம் நாட்டின்  கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் நல்லது.."
 *************************************************************************************


அருள் வாக்கு: ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி
சங்கராச்சாரியார் ஸ்வாமிகள்.

    "... நம் அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால்,
பரமேஸ்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்..."

   ".....கல்லுக்குள் ஜலம் ஊறாத மாதிரி, ஈஸ்வர அனுக்ரஹத்தை, நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதுவே  ஒரு துணியை வெள்ளத்தில் போட்டால், அது தானே விரிந்து ஜலத்தை இழுத்துக்கொள்கிறது.  துணியை வெளியே
இழுத்துப் பிழிந்தால் ஜலம் கொடுக்கிறது.  கல் மனஸைப் பரோபகாரத்தில் இப்படி
இலேசாகத் துணி மாதிரி ஆக்கிக்கொண்டால், எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிற ( ஈஸ்வர ) அனுக்ரஹத்தை நன்றாக உறிஞ்சிக்கொள்ளலாம். "
********************************************************************************

திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் தமிழ் வலை உலகில் ஒரு தனித்துவம் uniqueness
   கொண்டவர். அவரது கவிதை ஒன்றை படிக்கும் வாய்ப்பு இன்று காலை கிடைத்தது.
   அது இதுவே:

http://tamilamudam.blogspot.com/2010/12/blog-post_22.html
“கருணை வைத்து உன்னோடு நீ
இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

அனுசரணையாய் அளவளாவ
ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

இருந்து பார் பேசிப் பார்
கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்

காட்டித் தரும் அதுவே
ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
உன்னை உனக்கு அடையாளம்

அந்நொடி கசியத் தொடங்கும்
சிறுதுளியன்பு போதும்

பெருவெள்ளப் பிரவாகமாகி
பூமிப் பந்தை ஈரத்துடன் காக்க  "

 ******************************************************************** 

அன்புச்செய்தி வேறென்ன வேண்டும் !!
 
கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
இதோ கிருஸ்துமஸ் மரம். அலங்கரித்து மகிழுங்கள்.  
எல்லோருக்கும் சுப்பு தாத்தாவின் வாழ்த்துக்கள்.

 எல்லோரும் எல்லாம் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.
 ஆண்டவனை பிரார்த்திப்போம்.  
http://llerrah.com/decoratetree.htm






Saturday, December 18, 2010

இது கதை அல்ல.

இது கதை அல்ல.
நாற்பது வருடங்கட்குமுன் தஞ்சையில் நடந்த நிகழ்வு.     அன்று காலை. எழுந்து என் மனைவி கொடுத்த காபியைக் குடித்து கொண்டிருந்தேன்.  அன்றைய  ஹிந்து நாளிதழை  என் கையில் கொடுத்து விட்டு,  என் மனைவி பேசாமல் சென்றாள். அதற்கு  பொருள் என்ன என்று எனக்கு தெரிந்ததுதான். " எனக்கு ஏகப்பட்ட காரியம் இருக்கிறது.  உங்கள் சோலியைப் பார்த்துக்கொண்டு, சிவனே என்றிருங்கள் "   
   ஹிந்து நாளிதழின் தலையங்கத்தைத் திறந்தேன்.  அதற்குள்  வீட்டு வாசற்கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது.   அழைப்பு மணி அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் இல்லை. அழையாது வருபவர்களும் அதிகம். கதவை பெரும்பாலும் பகற்பொழுதில் மூடுவது கிடையாது. அப்படி மூடி இருந்தாலும், தெரிந்தவர்கள்  வாசல்  கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்துவிடுவார்கள்.    அதை சுதந்திரம் என்று சொல்ல முடியாது.  என் மேல் என் நண்பர்களுக்கு இருந்த உரிமை.  வருவது   யாராக இருக்கும்?  என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, என் முன்னே வந்து நின்றவர்களைக் கண்டு திக்கிட்டேன். ஒரு பக்தி, பயம், பரவசம ஆகிய மூன்றும் தோன்ற எழுந்து நின்றேன்.  வாருங்கள், என்ன இந்த அதிகாலையில் !!  என்று கேட்டேன்.
    ஒன்று மில்லை, என்றார்கள்.  அப்போதெல்லாம், பேச்சு துவங்கும்பொழுதெல்லாம் ஒன்றுமில்லை என்று தான்    ஆரம்பிப்பார்கள். 
    வந்தவர்கள், அந்த ஊர் கல்லூரியில் பேராசிரியர்கள். .  கணிதப்பேராசிரியர் ஒருவர்.இன்னொருவர் வேதியல்.   ஒரு கணம் திகைப்பு.     இருப்பினும் ஆவலை அடக்கியவண்ணம் ' என்ன?' என்று கேட்டேன்.
      காபி பாதி குடித்தவண்ணம் இருந்தது.  'நீங்கள் குடியுங்கள். பிறகு பேசுவோம் ' என்றார்கள்.  நான் புரிந்துகொண்டேன்.  கொஞ்சம் பெரிய விஷயம் தான் ( விடயம் என்று சொல்லவேண்டுமோ ? ) உட்பக்கம் திரும்பி, " இங்கு யார்    வந்திருக்கிறார் என்று பார். "  குரல் கொடுத்தேன். .      வந்த விருந்தினருக்குக் காபி கூட கொடுக்காமல், கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தால் கூட,  என் மனைவி, அவர்கள் சென்ற பின்னே என்னை கடிவாள் என்பது தெரியும். .   தஞ்சை விருந்தோம்பலுக்கு அவள் உதாரணம். அதை விட, அவள் போடும் காபிக்காகவே என் நண்பர்கள் என்னைத் தேடி வருகிறார்கள் என்றும் அவள் நினப்பு. ( தப்பு என சொல்லவும் முடியாது.)
     காபி வந்தது.   பிரமாதம் என்றார்கள்.
     என்ன விஷயம் ! சொல்லுங்கள் ! என்றேன்.
     ஒன்றுமில்லை என்றார்கள், திரும்பவும். தொடர்ந்து,
     " இன்று எங்கள் கல்லூரியில் ஒரு  கூட்டம். அதில் நீங்கள்  பேச்சாளராக
இருக்கவேண்டும்" என   நாங்கள் எல்லோரும் ஒருமித்து முடிவு செய்தோம். "
      என் மனதிற்குள் ஒரு முறை ஆகாயத்தைத் தொட்டு வந்தேன்.  மடை திறந்து .  தாவும் நதி அலை தான் என அந்த நிழல்கள் படத்தில் வந்ததே !! நினைவு இருக்கிறதா !! என் மனம் பாடியது.    சரி என்று என் வாய் சொல்லவில்லை. சர்வ அங்கமும் சேர்ந்தே சொன்னது. " மாலை, சரியாக‌  ஒரு நான்கு மணிக்கு வர இயலுமா !  கார் அனுப்பட்டுமா !! "'என்றார்கள். அவர்களிடம் கார் கிடையாது. எனக்குத் தெரியும். இது ஒரு உபசாரம். தஞ்சை வாசிகளுக்குத் தெரியும். 
"  வேண்டாம், வேண்டாம், அருகில் தானே இருக்கிறது. நடக்கிற தூரம் தானே , நானே வந்துவிடுகிறேன்."
   "உங்கள் அலுவலகம் ஐந்து மணிக்குத் தானே முடிகிறது.?"
  " இல்லை, நான் மதியம் லீவு போட்டுவிட்டு வந்துவிடுகிறேன். நீங்கள்
கவலைப்படாதீர்கள்"
  ' அது சரி, என்ன தலைப்பு, ?" நான்.
   ஒரு தினுசான புன்னகையுடன், " நீங்கள் அதை ரசிப்பீர்கள் " அந்த நேரத்தில், கூட்ட துவக்கத்தில் சொல்லலாம் என்று இருந்தோம். ஒரு எக்ஸ் டேம்போர் ஆக இருந்தால் நல்லதல்லவா " என்றார்கள்.  இருப்பினும் தொடர்ந்து,
   ' பரவாயில்லை. இப்போதே சொல்லிவிடுகிறோம் !"
      " ஜீரோ "  (zero ) !!
   பலவிதமான உணர்வுகள்  ஓரே நேரத்தில்.   கஷ்டப்பட்டு வெளிக்காட்டாது,   'செய்துவிடுகிறேன்'. என்றேன்.     அவர்கள் நன்றி தெரிவித்துவிட்டபின் சென்றார்கள். 
   மனைவி பிரசன்னம் ஆனாள்.
   ' அடடா!  என்ன அப்படி உங்களை வைச்சே , உங்களுக்காகவே ஒரு தலைப்பு !! என் தம்பி கோபு அப்பவே சொன்னான். " என்றாள்.  . அவள்  தம்பி பி.ஹெச். எல்லில் மெகானிகல் எஞ்சினீர்.   ஒரு நிமிஷத்திற்கு பத்து தடவை சொல்வாள். ' எல்லாம் தெரியும். ஆனால் பேசவே மாட்டான்" என்பாள்
மனமே சினம் கொள்ளாதே.  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

செல்லிடத்துக் காப்பான் சினங் காப்பான்,
அல்லிடத்து காக்கின் என் காவாக்கால் என்.
      இப்பொழுது கோபப்பட்டு நேரத்தை வீண்டிக்கக்கூடாது. இன்னும் ஒரு நாலு மணி நேரத்திற்குள் மனதிலே    "ஜீரோ " தலைப்பிற்கான பேச்சு வடிவத்தைத் தயார் செய்துகொள்ளவேண்டும்.  அலுவலகத்தில் மற்ற வேலை எதுவுமே ஓடவில்லை.

    மாலை மூணரை மணிக்கே கிளம்பினேன். கல்லூரியை அடைந்தேன். இன்றைக்கு மீட்டிங் என்று வாசலில் கூட்டமாக இருக்கும்.மனம் அசை போட்டது.   நான் பேச்சாளர் என்று தெரியுமோ தெரியாதோ ? நேராக கூட்ட அறைக்குச் சென்றேன்.    ஒருவருமே இல்லை. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. நேரமாகவில்லை போல் இருக்கிறது !  பேராசிரியர் அறைக்குச் சென்றேன். அவர் இருந்தார்.     ' வாருங்கள். சரியாக ஐந்து மணிக்கு நிகழ்ச்சி துவங்கி விடுவோம்  ! என்றார். மனதில் பேச வேண்டியதை அசை
போட்டுக்கொண்டேன்.  அவர் சொன்னாற்போல், கூட்டம் துவங்கியது. மேடையில என்னையும் சேர்த்து இருவர்.   கூட்டத்தில் ஒரு பதினைந்து பேர் இருந்தார்கள்.  நேரம் போகப்போக ஆடியன்ஸ் வரும் போலிருக்கறது என நினைத்துக்கொண்டேன். பேராசிரியர் என்னைப்பற்றி அறிமுகம் தேவையில்லை எனச்சொல்லிவிட்டுத் தன்னைப்பற்றி ஒரு பத்து நிமிடம் பேசினார்.
    இப்பொழுது சூரிய நாராயணன் ஸார் அவர்கள்,
    zero  என்னும் தலைப்பில் பேசுவார்கள், என்று அறிவித்தார்கள்.
    " நான் ஒரு zero.   எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பும்  zero " என்றேன். சன்னமாகக் கை தட்டினார்கள்.
   நான் அசரவில்லை. போகப்போக பெரிய கை தட்டுக்கள் வரும் என்று மனதிற்குள் சொல்லிகொண்டேன். , ஜீரோ எப்போது கண்டுபிடிக்கப்பட்டது, யார் கண்டுபிடித்தார்கள் என்று கணிதத்தில் துவங்கி, பிறகு புவி இயல், வேதியல் போன்ற வற்றில் சைபரின் ஆதிக்கத்தை உணர்த்தி, இறுதியில் தத்துவத்தில் "இல்லை" என்பது இருக்கிறதா இல்லையா ? என கேள்வி கேட்டு, அதற்கு பதிலாக நானே கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை, நானும் நீயும்  சேர்த்துவைப்பது எல்லாமே ஒன்றுமில்லை, உலகமே ஒரு சைபர் தான். வெங்காயம் போல். உரித்துப்பார்த்தால், பிரித்துபார்த்தால் ஒன்றும் இல்லையே எனவும் சைபரை மாயையுடன் ஒப்பிட்டுச்  சொல்லி,    zero  இல்லாது உலகமே , ஏன் ! அண்டமே இயங்காது என்று விவரித்தேன். கணினி உலகத்திற்குள் நுழைந்தால், எல்லாமே 0 அல்லது 1   ,  ஆக எல்லாவற்றையுமே பைனரி மொழி 0 மற்றும் 1 ல் அடக்கி விடுகிறதே.  0 அதாவது சைபர்  இல்லையேல் கணினி இல்லை.  ஆன்மீகத்திற்கு செல்வோம் என்றேன். .உண்மையிலே பார்க்கப்போனால், அந்த ஒரு   பூஜியதுக்குள்ளே ஒரு ராஜ்யமே இருக்கிறது இல்லையா என்றேன்.பூஜியதுக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆள வந்து புரியாமலே இருப்பான் ஒருவன். அவனை புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன் என்று பாடினேன்.  கூட்டம்  நிமிர்ந்து உட்கார்ந்தது.  இப்படியும் அப்படியுமாக  ஒரு இருபது நிமிடம் பேசியிருப்பேன்.  ( நாம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஆடியன்ஸ் தூங்குவது போல் இருந்தால் ஒரு பாட்டு அல்லது ஜோக் சொல்லணும். இது ஒரு டெக்னிக். தூங்காத பத்து பேர் கை தட்டும் சத்தத்தில் தூங்கி வழிபவர்கள் முழித்துக்கொள்வார். ஆனா இப்ப பட்டி மன்றம் எல்லாமே இப்படிதான் இருக்கிறது.)    


கூட்டம் ஒரு சுவாரசியமான கட்டத்திற்கு வரும்போல இருக்கையிலே ..
ஒரு சோதனை வந்தது. 
    திடீரென், தட, தட, தட என்று ஒரு கூட்டமாக ஒரு ஐம்பது அறுபது பேர் கூட்டத்திற்குள்
நுழைந்தார்கள்.      ஆஹா !  லேட்டாக இருந்தாலும் லேட்டஸ்டாக எனது ரசிகர்கள் இவரே என என் மனம் ஆர்ப்பரித்தது.  இன்னமும் ஒரு ஐம்பது பேர் வந்தார்கள்.  லேசாக ஒரு சந்தேகம். நமக்காகவா ? இல்லை வேறு     யாரோ ஒரு கனவான் வருகிறார் என நினைத்தேன். சரிதான். என் அருகில் இருந்த பேராசிரியர்,  ஒரு நிமிடம், நீங்கள் உங்கள் பேச்சைத் தொடருங்கள். நான் வந்துவிட்டேன்  என்று சொல்லிவிட்டு கூட்டம்  நடக்கும் ஹாலின்  வாசலுக்குச் சென்று ஒருவரை அழைத்து வந்தார். அவர் அருகில் வந்தார்.     நான் அயர்ந்து போனேன். 
    அவர் நான் படித்த  கல்லூரியில், எனக்கு கணித விரிவுரையாளராக இருந்தவர்.
    கணித மேதை.      அவருக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை, பெயர் ஒன்று தான்.
    அவரை மேடைக்கு அழைத்து உட்கார வைத்தார் பேராசிரியர்.
    எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் துவங்கியது.
    கூட்டத்தின் பிரதான முக்கிய பேச்சாளர் அவரே.  அவர் வரும் வரைக்கு கூட்டத்தை நிறுத்தி வைக்க ஒருவர் வேண்டும்.     அது நான். எனக்குப்புரியாமல் இல்லை. இப்போது கூட்டத்தின் எண்ணிக்கை இரு நூற்றுக்குமேல் இருந்தது.  அரங்கத்தில் இருப்பவர் யாவருமே வந்த பெரியவர் என்ன பேசப்போகிறார் என்றே நினைக்கிறார்கள் எனப்பட்டது.   ஒருவாறாக  நான் பேசி முடித்தேன்.
    கை தட்டுக்கள் விழாமல் இல்லை.  இருந்தாலும்,  அடுத்து, இவர் பேசுவார் என்று வந்தவரை அறிமுகப்படுத்தியபொழுது கேட்ட ஒலி   பல மடங்கு அதிகம்.
 அவைத் தலைவர்,  திருவாளர் பேராசிரியர் ............அவர்கள் இப்பொழுது  பேசுவார்கள் என்று அறிவித்தார்.      என்ன தலைப்பு என்று கவனித்தேன்.       infinity !! எதைப் பெரிதாக எண்ணுகிறோமோ அதைவிடப் பெரியது இன்பினிட்டி.
ஆளுக்குத் தகுந்தாற்போலத்தானே தலைப்பும் இருக்கும் என்று முதற்கண்
நினைக்கதோன்றியது.      என்னைச் சமாதானப்படுத்திக்கொள்ளவும் முடிந்தது.
அடுத்த கணம் தோன்றியது.      இந்த  zero  என்ற ஒன்றின் தெளிவு இல்லை என்றால்,   infinity  என்றதை ப்புரியவும் முடியுமோ ?
 நான் zero  இல்லை.  அதே சமயம்  infinity  யும் இல்லை.
இரண்டிற்கும் மத்தியில் ஏதோ ஒரு இடத்தில் !!
 நான் ஒரு கிணற்று தவளை அல்ல.     இருந்தாலும் கடலின் பரிமாணம் எனக்குத் தெரியாது.

 குறுந்தொகையில் பாட்டு ஒன்று வருகிறது.

"  கூவல் ஆமை குரைகடல் ஆமையை,
கூவலோடு ஒக்குமோ, கடல்? என்றல் போல்,
பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்,
தேவதேவன்சிவன் பெருந்தன்மையே. "

     ஒரு கிணற்று ஆமை கடல் ஆமையைப்பார்த்து,  நீ இருக்கும் கடல், இந்த
கிண்ற்றினைப்போல்  இருக்குமோ என்று கேட்டதாம்.

          இன்ஃபினிடி பற்றி அவர் பேசியது உண்மையிலேயே இன்ஃபினிடியாக,
அண்டத்தினை மனக்கண்களை விரித்துப் பார்ப்பது போல் இருந்தது.  அதன் முன் நான் ஒன்று மில்லை. நான் என்பதும் இல்லை.  இன்னொரு கோணத்தில் பார்க்கப்போனால், அந்தமும் ஆதியும் இல்லாதது சைபர்.  எங்கே துவங்குகிறது ? எங்கே முடிகிறது? ஒரு பிரும்மாண்டமான சைபரை கற்பனை செய்துகொள்ளுங்கள், அந்த கட்டத்தில் cipher ,cyber ஆகிவிடுகிறது.   அந்த அந்தமும் ஆதியும் இல்லாத அருட்பெருஞ்சோதி இன்பினிட்டி.

     இதுவும்  கதை அல்ல.  
   
     கபீர் எனும் இலக்கிய ஆன்மீக சிந்தனையாளர். கவிஞர். சில நூற்றாண்டுகளுக்கு முன் நமது நாட்டில் அவதரித்து, மத நல்லிணக்கத்தை மக்களிடையே பரப்பினார்.   தேவன் ஒருவனே அது அன்புதான் என்றார்.  அவரது  சிந்தனைகளை, ஆன்மீக உணர்வுகளை  ஒரு ஒப்புதலுக்குச் சொல்லப்போனால், நமது வள்ளல் இராமலிங்க அடிகளார் அவர்களின் சிந்தனைகளை கிட்டத்தட்ட கண் முன்னே வந்து நிறுத்தும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர். சமூக சீர்திருத்த வாதி. வெவ்வேறு மதங்கள், சாதிகள், இவையிடையே துண்டு பட்டிருந்த சமூகத்தை ஒன்று படுத்த அவர் மிகவும் பாடு பட்டார். 

அவரது கருத்துக்களை தொட்டனைத்து ஊறும் மணற்கேணி போல், உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துச் சொல்பவர் என் நண்பர் கபீரன்பன் அவர்கள்.
     கபீரன்பன் தனது வலையில் கபீர் பற்றி  என்னை எழுதச்சொன்னார். இதுவும் தேவ தேவன் சிவன் பெருந்தன்மை என உணர்ந்தேன்.  கபீர்  ஒரு கடல் . நான் கிணற்று வாசி. இருப்பினும்   நான் அங்கு சென்றேன். எழுதவும் செய்தேன்.
     இந்த எழுபது வயதில், மற்றவர்க்குத் தெரியாதது எதுவும்  எனக்குத் தெரிவதாகத் தெரியவில்லை.
     எழுதியது எதுவோ, அதுவும் புதிதும் அல்ல.  ஒரு வேளை நான்  ஒரு ஜீரோ என்பதையும் அது காட்டலாம். 
     நானறியேன்.
     நீங்களே சென்று வாருங்கள் அவரது வலைக்கு.

   


Thursday, December 09, 2010

இது ஒரு கதை.

    ஏதோ கெட்டுப்போகி விட்டதான உணர்வு.  பல நாட்களாக‌ ஒரு வாடை. ஏதோ வாடை அடிக்கிறதே என என் மனைவியிடம் கேட்டேன். ஒரு வாடையுமில்லை. உங்கள் மூக்கு தான் வாடை . அதை முதலில்மருத்துவரிடம் போய் என்ன என்று பாருங்கள் என்றாள்.  இருந்தாலும், எனக்கு காது அவ்வளவு கேட்காதே தவிர, மூக்கு வாசனை நன்றாகவே தெரியும். எங்கு எது நடந்தாலும், அதை என் மூக்காலேயே தெரிந்துகொண்டுவிடுவேன்.
உண்மையாக சொல்லப்போனால், மூக்கு ஒன்று தான் என் உடம்பில் உருப்படியாக இருக்கிறது.

    ஒரு நாள், இதை துர் நாற்றத்தை,  இன்னமும் விட்டுவைக்கமுடியாது என்ற அளவுக்கு, அந்த நாற்றம்  மூக்கைத் துளைக்க  ஆரம்பித்தபின், இனி என் மனைவியையோ, அல்லது வீட்டு வேலை செய்யும் உதவியையோ நம்ப முடியாது, நானே செய்வோம், என்று மதியம், ஒரு துடப்பத்தைக் கையில் எடுத்து வீட்டு ச்சுவர்கள் ஓரங்கள், அலமாரி இடுக்குகள், பீரோக்கள் கால்கள் இவையெல்லாம் வேர்க்க வேர்க்க செய்ய  ஆரம்பித்தேன். 

    ஒரு மூலையில் சுத்தம் செய்யும்பொழுது நாற்றம் பலமாக அடித்தது.  பொறி தட்டினால் போல் மனைவியைக்கூப்பிட்டுக் காண்பித்தேன்.  ஆமாம், வாடை பலமாகத்தான் இருக்கிறது என்றாள்.  அந்த இடத்தை நன்றாகக் கழுவும்பொழுது, ஏதோ ஒரு ஓட்டை தெரிந்தது.  என்னது ஒரு ஓட்டை நம் வீட்டில் சுவரில் என்று ஆச்சரியம், பயம் கலந்த உணர்வுகளுடன், அதை இன்னும் நன்றாக சுரண்டினேன்.  ஒரு பெரிய ஓட்டை தெரிந்தது.  சுவரில் கீழ் பாகத்தில் ஒரு பெரிய ஓட்டை பொலிவானது. என்ன என்றுகுனிந்து பார்த்தேன்.  அது அடுத்த வீட்டுக்கும் ஒரு பாதாள் குகை வழியே செல்கிறது என்று தெரிந்தது. 

     வீடு கட்டி 35 வருஷங்கள் ஆகிவிட்டது. அப்பப்ப மராமத்து செய்யவேண்டாம் என்று யார் சொன்னார்கள் ? அப்படியே  வைத்துவிட்டால், இந்த கதி தான் என்று என் மனைவி அலுத்துக்கொண்டாள்.

    இப்பொழுது தான் நினைவு வந்தது.  அடுத்த வீடு வெகு நாட்களாகப் பூட்டி இருக்கிறதே !  அதிலிருந்து  தான் வருகிறதோ என்று நினைத்து அந்த நபர் ஊரில் இல்லை அவருடைய ஸெல் நம்பரைக்கண்டு பிடித்து விஷயத்தைச் சொன்னேன். அலறி  அடித்துக்கொண்டு சென்னையிலிருந்து அடுத்த நாள் ஓடிவந்தார்.  வந்து எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, எனக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.  அப்படி ஏதாவது பொந்துகள் இருந்தால், அதை அடைக்கும் ஆள் நான் தான் முதலில் இருப்பேன் என்று உஷ்ணமாகச் சொல்லிவிட்டு, இனிமேல் தேவையில்லாமல் என்னைத் தொந்தரவு செய்யாதீர், இல்லையேல், நீர் காலி செய்யவேண்டி இருக்கும் என்று மறைமுகமாக உணர்த்திவிட்டுச் சென்றார்.

    வாடை நின்றபாடில்லை.  பொந்துக்குள் இருந்து தான் வருகிறது.  ஆனால், அந்த பொந்தின் மூலம் எங்கு இருக்கிறது ? நகராட்சி அலுவலகம் சென்று முறையிடுங்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். அங்கு சென்று முறையிட்டேன். உடனே ஒருநகராட்சி அலுவலர் வந்து பார்வையிட்டார்.  ஒருவேளை பாதாளச்சாக்கடையிலிருந்து வருகின்றதோ என்னவோ ?  என்றார்.அதை கொஞ்சம் பார்க்கக்கூடாதா என்று பரிதாபமாகக் கேட்டேன். குரல் கெஞ்சினது போல் இருந்திருக்குமோ என்னவோ, என் மனைவி மறைவில் இருந்து என்னை முறைத்தாள்.  நீங்கள் அந்த செலவுக்கு ஒத்துக்கொள்ளவேண்டும் , ஏன் என்றால், உங்கள் வீட்டு ட்ரைனேஜிலிருந்து தான் வாடை வருகிறது. நகராட்சியில் இந்த வருஷம் பட்ஜெட்மிச்சம்  இல்லை. மேலும் அதற்கு அரசாங்கத்திடம் இருந்து நகராட்சி ஒப்புதல் பெற வேண்டும் இதெல்லாம் நடந்து முடிய ஒரு இரண்டு வருடம் ஆனாலும் ஆகலாம்  என்றார்.  எத்தனை ஆகும் என்று கேட்டேன். கிட்டத்தட்ட  ஒரு லட்சம் வரை ஆகலாம். என்றார்.  வாயைப் பொத்திக்கொண்டேன்.  ஒரு இரண்டு  வருடம் பென்ஷன் ஆ !

என் பென்ஷன் இப்போது  இப்போதைக்கு கறிகாய் வாங்குவதற்கே மாத பென்ஷன் போதவில்லையே! இதற்கு எங்கே போவது என நினைத்துக்கொண்டேன்.

     இதற்கிடையில் என் வீட்டு வாசலில் ஏதோ நாற்றம் வருகிறது என்ற செய்தி பரவியது.  தெருவில் போகிறவர்கள் எல்லோரும் வீட்டைக்கடக்கும்பொழுது வாயை நன்றாகப்பொத்திக்கொண்டு சென்றார்கள்.    பால்காரன் காலையில் சொன்னார்:  ஐயா ! நீங்கள் பூத்தில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்.  இங்கே என்னமோ என்று எங்க வீட்டு அம்ம சொல்றாங்க.  வழக்கமாக சைக்கிளில் வரும் காய் கறி விற்பனைக்காரரும் வருவதில்லை.

      சென்னையிலிருந்த எனது நண்பர் சொன்னார்:  இந்த வீட்டை வைத்துக்கொண்டு ஏன் கஷ்டப்படுகிறீர்கள் !! யாரேனும் அகப்பட்டால் அவர்கள் தலையில் கட்டிவிட்டு சுகமாக சென்னைக்கு வந்து விடக்கூடாதா ?    என் மனைவி அதைக்கேட்டுவிட்டு, இந்த மனுஷனுக்கு நல்ல புத்தி எப்ப வந்தது என்று அவரிடம் கேட்டார்.

    நான் இருக்கும் நகரில் ஒரு அசோஷியேஷன். பெயர் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது. திடீரென் அதில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.  என்ன செய்தி எனக் கேட்டு வரச் சென்றேன்.  " என்ன இது ? உங்கள வீட்டில் நாற்றம் வருகிறதாமே !
எங்களிடம் நீங்கள் சொல்லவில்லையே ! என்று ஆதங்கமாக சொன்னார்களா அல்லது வேறுவிதமாகவா என்று உடன் புரியவில்லை.  ஆஹா ! நமக்கு உதவிக்கு பகவான் வந்து விட்டார் என ஒரு கணம் நினைத்தேன்.  அந்த நினைப்பு ஒரு கணம் தான் இருந்தது. " நீங்கள் உடன் அதை சரி செய்யாவிட்டால், மேற்கொண்டு உங்களை பகிஷ்கரிப்போம் என்று சொன்னார்கள்.  அதற்கு என்ன பொருள் என்று புரியவில்லை.   எல்லாம் நீங்கள் அனாவசியமாக அந்த சுவரைச் சுரண்டுவானேன் ! வேலில போற ஓணான மிதிப்பானேன் ! இப்படி அவஸ்தை படுவானேன் ! என்று என் மனைவி அங்கலாய்த்தாள்.

     திடீரென்று ஒரு பெரிய தொடர் மழை.  தொடர்ந்து பத்து நாட்களுக்கு பிரளயம் போல.  ஊர் முழுவதும் தண்ணீர், வெள்ளம். வீதிகளில் ஆறாகப் பெருகியது.  குடிசை வாழ் மக்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் குடியேற்றப்பட்டனர்.வெள்ள நிவாரணம் தரப்பட்டது.    வீட்டின் நாலா பக்கங்களிலும் மூன்று அடி தண்ணீர் தேங்கி இருந்தது.  எப்ப வடியும் என்று தெரியவில்லை.

     என் விதியை நொந்துகொண்டு இருந்தேன். புத்தருக்கு ஞானம் பிறந்தது போல் எனக்கும் ஒன்று தோன்றியது. வாழ்க்கையில் பல விஷயங்கள் விடவும் முடியாது. வைத்துக்கொண்டும் இருக்க முடியாது.  பந்தங்கள் என்று வந்துவிட்டால், அதில் லாபமோ நஷ்டமோ எல்லோருக்கும் தான்.  எனக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது என்று உதறி விடமுடியாது.

    இந்த தெரு சாக்கடை, அதை வீட்டோடு இணைக்கும் இற்றுப்போன குழாய், அந்தப்பொந்து , வீட்டுச்சுவர், நாற்றம் எல்லாம் நான் இருக்கும்வரையிலும் இருக்கும். 

   உலகமே நாற்றம் .ஒரு தினுசான சாக்கடை தான்.   என் வீடு மட்டும் மணக்கவேண்டுமென்றால் முடியுமா என்ன ? மனதைத் தேற்றிக்கொண்டேன்.

    தெருவில் ஏதோ சத்தம் கேட்கிறதே என்று பார்த்தேன்.  ஒரு மின்சார பம்ப் வைத்து தேங்கி இருந்த தண்ணீரை இறைத்துக்கொண்டிருந்தார்கள். ஓயாது மூன்று மணி நேரமாக ஓடிக்கொண்டிருந்த பம்ப் திடிரென நின்று போனது.பக்கத்தில் இருந்த தொழிலாளிகள் எல்லோரும் ஒரு மணி நேரம் அந்த பம்ப் ஸெட், தண்ணீர் வருகின்ற வழி எல்லா இடத்திலேயும் போராடினார்கள்.  என்ன என்று புரியவில்லையே என்று திகைத்து இருக்கும் வேளையிலே,

     திடிரென் ஒரு பெருச்சாளி நீருக்குள் இருந்து குதித்து ஓடிச்சென்றது.  திரும்பவும் தண்ணீர் பம்ப் செட் ஓட ஆரம்பித்தது.கொஞ்சம் கொஞசமாக தரை தெரிய ஆரம்பித்தது.  சாக்க்டை சுத்தமானது.

    மறு நாள் வெயில் சுள் என அடிக்கத் துவங்கியது.  தெரு மண் ஈரமெல்லாம் காய்ந்து போய் இருந்தது. இன்னும்  இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன.  பொழுது போகாமல்     வாசலுக்கு வந்து நின்றேன். ஏதோ அந்த நாற்றம்  நினைவுக்கு வர, மனைவியைக் கூப்பிட்டு கேட்டேன், இங்க வந்து பாரேன்.அந்த‌ நாற்றம் வருகிறதோ !

    மனைவி வந்தாள். சொன்னாள்:   நாற்றம் சுத்தமாக இல்லையே  !  எல்லாம் மழை வந்து அடித்துக்கொண்டு போய்விட்டது போல் இருக்கிறது.  "நான் நினைத்தேன். ஒரு பிரள்யம் வந்தால் தான் சரியாக இருக்கும்."  என்றாள்.

   ரொம்ப காலம் கழித்து, மனைவி சொல்லுக்கு ஆம் போட்டேன்.
































































































































































Wednesday, November 17, 2010

இறைவனிடம் கை ஏந்துங்கள்

இறைவனிடம் கை ஏந்துங்கள் .




எனது இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.
குறிப்பாக என்னுடன் திருச்சியில் 1957 - 1961  செயின்ட் ஜோசப் கல்லூரியில் கணிதம் படித்த திரு பிச்சை முகம்மது, திருச்சி பெரிய கடை தெருவில் 1960  - 1965  ல்  ஒரு தனியார் பள்ளியில் உருது ஆசிரியராக பணியாற்றிகொண்டிருந்த அப்துல் , என்னுடன் எல். ஐ. சி. கிளை நாகையில் உறு துணையாக இருந்த ஜபருல்லா , அவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.




Sunday, November 07, 2010

ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்



ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்
நீ நில் என்றால் நிற்கவா போகிறாய் !

அருகிலே வந்துவிட்டேன் என
அடிக்கடி சொல்லி எங்களை
அஞ்சவைக்க வேண்டாம்.

வா . சென்னைக்கு மழையைத்
தா. அதிக துன்பம் கொடுக்காது
போ.

புயல் எங்கிருக்கிறது என அறிய இங்கே சொடுக்குங்கள்.

Friday, November 05, 2010

நாதஸ்வர இசை தீபாவளித் திரு நாளில்



இந்த தீபாவளித் திரு நாளில் நமது தமிழ் நாட்டின் சிறப்பு வாத்தியமான நாதஸ்வர  இசைதனை கேட்டு களியுங்கள். 
உலகத் தமிழர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Sunday, October 10, 2010

நவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும்

 உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என வலியுறித்தினார்  வள்ளுவர்.

எதை நினைத்தாலும், சொன்னாலும், செய்தாலும், ஒவ்வொரு நிமிடமும், கடந்த நிமிடத்தைவிட உயர்ந்த தாகவே நமது எண்ணமும், சொல்லும், செயலும்  இருப்பது நன்று. முன்னேற்ற பாதையிலே நாம் வலுவாக இருக்கின்றோம் என்பதற்கு இதுவே ஆதாரம்.

மாணிக்க வாசகரின்" யாத்திரை பத்து"  மனிதனின் பரிணாம  வளர்ச்சியை ஏறத்தாழ டார்வின் தத்துவத்திற்கு மிக அருகே கொண்டு செல்வதை கவனிப்போமா?

"புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்..:"  

    இதததுவத்தை நவராத்திரி கொலுப்படிகள் சொல்லாது சொல்கின்றனவோ என நினைத்த பொழுது எனக்கு இந்த வலையிலே ஒரு பதிவு கிடைத்தது.  நீங்கள் எல்லோரும் அதை படித்து இருக்கலாம் எனினும் திரும்பவும் படிப்பது சரியே .
 நவராத்திரி கொலு

நன்றி:
கொலு‌வி‌ல் ஒன்பது படிகள் அமை‌ப்பத‌ன் நோ‌க்க‌ம்
இங்கே கிளிக்குங்கள்.
    http://tamil.webdunia.com/miscellaneous/webduniaspecial08/navarathiri/0809/30/1080930052_1.htm
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.


* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.

* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.
  
     படி என்பது பெயர்ச்சொல் .  அப்போது அது ஒரு ஏணியின் அல்லது மலைக்குச் செல்லும் வழியின் படிகளை குறிக்கும்.  
    படி என்பது வினைச்சொல். நாம் கற்று உணரவேண்டும் எனும் பொருள் அதற்கு. 
எனைத்தானும் நல்லவை கேட்க என்பார் வள்ளுவர்.  படி எனும் சொல் இதனை பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் ஒரே நேரத்தில் புரிதல் நல்லது.





Thursday, September 30, 2010

இன்று மட்டும் அல்ல இனி எல்லா நாளுமே காந்தி பிறந்த நாள் !!!


இன்று மட்டும் அல்ல , இனி வருகின்ற எல்லா நாளுமே அண்ணல் காந்தி பிறந்த நாள் என மனதில் கொள்வோமா !!
என்னென்ன உணர்வுகள் மனதில் பொங்கும் ?

புதியதோர் உலகம் காண்போம் - மனச்
சக்திகள் களைவோம் மாசுகளை வெல்வோம் . =
புதியதோர் உலகம் காண்போம் .

நேரம் இது நல்ல நேரம்
நேசக்கரம் நீட்டி நல உறவு கொள்வோம்.
நேயமிகு சொற்கள் சொல்வோம் = நம்
நெஞ்சிலே கங்கை நீர் பெருகச் செய்வோம்.


புதியதோர் உலகம் காண்போம் = இப்

புவியனைத்தும் பூக்கள் இனி மலரச் செய்வோம்.
பெறுகின்ற தனங்கள் எல்லாம் - அவ்
விறைவனின் புகழெனவே சொல்லி மகிழ்வோம்.

அண்ணல் காந்தி அவர் அன்று சொன்ன
உண்மையும் அஹிம்சையும் உளமார கொள்வோம்.
அன்புசார் அறவழியில் அமைதி காண்போம் ,   இங்கு
ஆயிரம் இடர் வரினும் நேயமதை நீங்கோம்.

புதியதோர் உலகம் காண்போம்
கார்டூன் படம் நன்றி:  நாளிதழ். ஹிந்து

ரகுபதி ராகவா ராஜா ராம். பாடுவதற்கு ஒரு சரியான தருணம் இதுவே.
இசை உலகின் மா மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் அவர்களின் ஷெனாய் இசையை கேட்டு மகிழுங்கள். 





Sunday, September 19, 2010

நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

      சென்னையை அடுத்துள்ள திருனின்றவூர் அருகில் கசுவா என்னும் கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனம்  கடந்த பதினைந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.   அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஏழை எளியவர்,  அனாதைகள், முதியோர் இவர்களுக்காக ஒரு இலவச பள்ளியும் ( ப்ளஸ் டூ வரை) , ஒரு மருத்துவ முகாமும்,  முதியவர்களுக்காக இடம், உணவு, உடை போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் மருத்துவ வசதியும் தருகிறது.

      இது பரவி இருக்கும் உலகின்  நல்ல உள்ளங்களால் பொருள் ஆதரவு தரப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்திற்கு    நாம் தரும் நன்கொடைக்கு வருவாய் வரியிலிருந்தும் ஐம்பது விழுக்காடு விலக்கு பெற ஒரு சான்றிதழ் தருகிறது.

      இவர்களின் தன்னலமற்ற தொண்டை பாராட்டுவோர் பலர், பொருள் உதவி செய்வோரும் பலர். 

      கடந்த சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இவர்களில் ஒரு சிலருக்கு மேற்படிப்பு,  தொழில் நுட்பம் மற்றும் மருத்துவ கல்விக்கான உதவியும் செய்யப்படுகிறது.

      இதன் மேல் விவரங்களை இங்கே காண்க.

      இப்பொழுது தலைப்புக்கு வருவோம்.

      அண்மையில், இவர்களிடமிருந்து எனக்கு மாதந்தோறும் வரும் பத்திரிகை   (  LOVE ALL SERVE ALL )
       ஏப்ரல் 2010    இதழில் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றல்ல, இரண்டினை ஒரு மன வருத்தத்துடன் குறிப்பிட்டு    இருக்கிறார்கள்.   அதன் சிற்றுரை இங்கே:

      இவர்கள் நடத்தும் முதியோர் இல்லத்தில் அனாதைகளும், மிகவும் வயதானவர்களுமே அனுமதிக்கப்படுவர்.
      என்னதான் உணவு, உடை, இருக்க இடம் இருப்பினும், அவ்வப்பொழுது மருத்துவ வசதிகளும் போதிய அளவிற்கு     இருந்தாலும்,  மனிதனின் வயதுக்கு ஒரு உச்ச வரம்பு இருக்கிறதல்லவா ?

      மிகவும் முதியவர்களில் அவ்வப்போது இறப்புகள் ஏற்படுவதும் இயற்கையாகவே இருக்கிறது.  இதற்கும் இந்த‌   நிறுவனம் ஆயத்தமாகி இருப்பதால், யார் இறந்தாலும், தங்களுடைய கோப்புகளை உடன் கவனித்து, அவர்களை  கொண்டு சேர்த்தவர்கள் சொந்தக்காரர், நண்பர் எவரேனும் இருப்பின் அவர்களுக்கு உடனடியாக தகவலைச்   சேர்த்து விடுகிறார்கள். 

       அது போலவே ஒரு இறப்பு  ஒரு நாள் காலை 11.30க்கு ஏற்பட, உடனேயே,   இறந்தவரது உற்ற்ம், சுற்றத்தாரின்  விலாசம், தொலைபேசி எண் இவற்றை தேடியதில், இறந்தவருக்கு சொந்தத்தில் பிள்ளையோ, பெண்ணோ இல்லை     எனினும் சில உறவினர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்தனர், எனத் தெரியவர , .  அவர்களுக்கு உடனடியாக தொலைபேசி    மூலமாகச் சொல்லியதுடன், நிறுவன ஊழியர் ஒருவரையும் அனுப்பி செய்தி சொல்லப்பட்டதாம். அவர்கள்  வருவதாக வாக்களித்திருந்தபோதிலும்,  மாலை நான்கு மணியான போதிலும் யாரும் வரவில்லை. ஒவ்வொரு  மணிக்கும் ஒரு அழைப்பு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் வருவதாகத் தெரியவில்லை. வந்து விடுகிறோம் என்றார்களே தவிர வருகிற வழியாய் காணோம்.
    இத்தனைக்கும் அவர்களது இருப்பிடத்திற்கு இந்த முதியவர் இல்லம் கால் நடையாய் நடந்தாலும் ஒரு சில நிமிட தூரத்தில் தான் இருக்கிறது . 

     இல்லத்தில் மற்ற முதியவர்கள் இருப்பதாலும், சவத்தை இராப்பொழுதுக்கும்  இல்லத்தில் வைத்திருப்பது சரியல்ல‌  என்பதால், ஈமக்கடன்களைச் செய்ய, நிறுவனத்தார் அந்த முதியோனின் உடலை, கிராமத்தின் வழியே எடுத்துச் சென்றபொழுது ,  அந்த உறவினர் ஏன் நாங்கள் வரும்வரை காத்திருக்கவில்லை என்று ஊழியர்களுடன் சண்டை     போட்டனராம். ஒரு ஐந்து நிமிட நேரத்தில் வரக்கூடியவர்கள் ஐந்து மணி காலத்திருகுப்பிறகும் வரவில்லை என்றால் என்ன காரணம் இருக்கக்கூடும்? அவர்கள் அந்த ஈமச்சடங்களுக்கு தங்களிடம் பணம் கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தின்   காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.  அதே சமயம், ஈமச்சடங்களுகளில் கலந்துகொள்ளவில்லை என்றால்,   உள்ளூர் வாசிகள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என நினைத்தார்களோ என்னவோ ? 

      நிறுவனப் பத்திரிகை சொல்கிறது:  நாங்கள் தகவல் கொடுப்பது , உயிர் பிரிந்த ஆன்மாவுக்கான ஒரு மரியாதை   செய்யவே அன்றி , ஈமச்சடங்குகளுக்கான பணத்திற்காக அல்ல. 

       யாருமே வராத நிலையில், நிறுவன ஊழியர் ஒருவர் கடைசி காரியங்களை, இறந்தவரின் மகனாக தன்னை  நியமித்துக்கொண்டு, கருத்தாகச் செய்கிறார்.  அது மட்டுமல்ல, இறந்தவரது மதக்கோட்பாடுகளைக் கவனித்து    அதன் படியே செய்கிறோம் என்றும் சொல்கிறார்கள். 

      இந்த நிகழ்வினை ஒரு மன வருத்தத்துடன் எழுதியிருக்கிறார்கள் அந்த இதழின்   ஆசிரியர் எனது அக்கால முதல்  நண்பர்.  இப்பொழுது அவருக்கு 75 வயதிருக்கலாம். 

      'நாம் இவ்வளவு செய்கிறோமே !  யாருக்காக செய்கிறோமோ , அவர்கள் உறவினர்கள், அல்லது சுற்றத்தார்  போற்றவேண்டும் என எதிர்பார்ப்புடன் செய்யவில்லை. இருந்தாலும் தூற்றாமல, சண்டை போடாமல் இருக்கலாமே !!'

      என்ற ஆதங்கம் இவரது எழுத்தில் தெரிகிறது.

      அவருக்கு ஒரு சிறிய செய்தி சொல்ல அவாவுற்றேன்.

      அவருக்குத் தெரியாத வள்ளுவம் இல்லை.   உண்மையிலே அவரது பள்ளியின் கொள்கைகளும், கோட்பாடுகளுமே  மனித நேய வழியில் அமைந்தவை.  வள்ளுவர், அண்ணல் காந்தி, பாரதி, விவேகானந்தர் இவர்களின் வழிகாட்டுதலில்
இயங்குகிறது இ ந் நிறுவனம்( www. sevalaya. org )

       இருப்பினும் ஒரு குறள் மேற்கோள் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

       ஒருவர் செய்த உதவியை நாம் எக்காலத்தும் மறப்பது நன்றன்று.  அது அறிந்ததே .
       இரண்டாவதாக, நன்று அல்லது எதுவோ அதை அன்றே மறப்பது நன்று.

       மனித வாழ்வியலில்  ethics      என்ன  என்பதை ஒரு ஒண்ணே முக்கால் அடியில் தருகிறார் வள்ளுவப்பெருந்தகை.

       நன்றி மறப்பது நன்றன்று   =   நன்றல்லது
       அன்றே மறப்பது நன்று.

      மக்களுக்குத் தொண்டு செய்யும்பொழுது,  அதை நாம் செய்கிறோம் என்ற எண்ணம் வரும்பொழுது தான்  உண்மையான, தன்னலமற்ற தொண்டிற்குக் கூட நன்றி இல்லையே என வருத்தம் மேலிடுகிறது.

      தொண்டை நான் செய்யவேண்டும் என்பது இறைவன் விதித்த கட்டளை.  அதை நான் நிறைவேற்றுகின்றேன்.  இன்று நான்/ நாம் செய்கின்ற பணிகள் உதவிகள் எல்லாமே நாம் செய்வதல்ல.இவை அனைத்துமே ஆண்டவன் செய்வது. நான் ஒரு மீடியம் அல்லது கருவி என்ற மனப் பாங்கு வரின் இந்த வருத்தம் மேலோங்கிடாதோ ?

      கீதையிலும் இதுதான் சொல்லப்படுவதாக சொல்கிறார்கள்.
      நடப்பன எல்லாமே நடக்கும். நடந்தே தீரும்.
      நாம் ஒரு சாட்சிதான்.
      நம்மால் எதும நடக்கவில்லை. நாமும் ஏதும் செய்வதில்லை. 
     நாம் ஒரு கருவிதான்.
      இறைவன் நம் பெயரிலே செய்கிறான்.
      அவனை வாழ்த்துவோம்.வணங்குவோம்.
   இவர்கள் தம்  நற்பணிகளை தொடர்ந்து சோர்விலாது தொய்விலாது  செய்ய இந்த நிறுவனத்திற்கு வித்திட்ட இறைவன் என்றும் அருள் புரிவான்.அது அவன் செயல் .



Friday, September 10, 2010

தமிழ் மறைகள் வழி காட்டும் விநாயக வழிபாட்டு முறை 11 September 2010

முழுமுதற் கடவுளாம் விநாயகப்பெருமானை துதிக்காத பண்டைய தமிழ்ப் புலவர்கள் இல்லை எனச் சொன்னால் மிகையாகுமோ? . மனித வாழ்விலே ஏற்படும் இன்னல்கள்,  இடையூறுகள் எல்லாவற்றையும் களைந்து நம் வினைப்பயன்கள் அறுத்து நம் யாவரையும் உய்வித்து நல்வழிப்படுத்தும்  விநாயகன், கணபதி, பிள்ளையார் எனப் பலவிதமாக பெயர் சூடிக்கொண்டு ஒவ்வொரு தெருக்கோடியிலும் அமர்ந்து ஆட்சி புரியும் யானை முகத்தோனை புகழ் பாடும் தமிழ் பாடல்களைக் காண்க. யானை முகத்தோனுக்கு பேழை வயிரனுக்கு தமிழில் அர்ச்சனை ( வழிபாடு ) இப்பதிவின் இறுதியில் காண்க. விநாயகனை வீர கணபதியை விநாயக சதுர்த்தி அன்று இருபத்தி ஆறு வகை பூக்களாலும் இலைகளாலும் பூசிக்கலாம். 


தல புராணம்
    எழுத்தும் சொல்லும் பொருளும் இணக்குற
        வழுத்துஞ் சீர்செயந்திப்பதி மானியம்
    விழுந்தகு ந்தமிழாற் சொல் வேதமே
        பழுத்த குஞ்சரன் பாதங்கள் போற்றுவோம்.

     முருகன் அடியார்:
      தும்பி முகத்தோனே ! துணையாய் வந்தெனக்குத்
           தம்பியின் புகழதுவே தளர்வின்ட்றிப்பாடிடவே
       நம்பியேன் பணிந்திட்டேன் ! நலமாக அருள் தந்து
            வம்பெதும் வாராது வழியளித்துக் காத்திடுவாய் !!

      காணாபத்யம்
      ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
       இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
       நந்தி மகன் தனை ஞானக்கொழுந்தினைப்
       புந்தியில் வைத்து போற்றுகின்றேனே  ...    திருமூலர்.

     வாரணத்தனை அயனை விண்ணோரை மலர்க்கரத்து
              மகத்துவென்  றேன்மைந்தனைத்துவஜ‌
               த்துணை நயந்தானை வயல் அருணை
               த்திறை கொண்ட யானையை வாழ்த்துவனே ... கந்தரந்தாதி.

கந்தர் அனுபூதி
    நெஞ்சக்கனகல்லு நெகிந்துருகத்
        தஞ்சத்தருள்ஷண்முகனுக் கியல்சேர்
     செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
        பஞ்சக் கர ஆனை பதம் பணிவாம்.     ....   

    புண்ணியம் கோடி வரும் பொய்வாழ்க்கை ஓடிவிடும்
        எண்ணியது கைகூடும் ஏற்ற துணை நண்ணிடவே
    வாழ்வில் வளர் ஒளியாம் வள்ளல் வி நாயகனை
        நாளெல்லாம் வாழ்த்திடுவோம் நன்று   ..  பெருந்தேவனார்.

    கணபதி என்றிடக்  கலங்கும் வல்வினை
    கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
    கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
    கணபதி என்றிடக் கருமம் இல்லையே     ...   திருமூலர்


    வானுலகும் மண்ணுலகும் வாழ்மறை வாழப்
    பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
     ஞான மத ஐந்துகர மூன்று விழி நால்வாய்
      ஆனைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்.   ...சேக்கிழார் புராணம்

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
    கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
     பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
     பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம் .   ...விருத்தாசல புராணம்.

     சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர‌
     முத்தி யான முதலைத் துதிசெயச்
      சுத்தி யாகிய சொற்பொருள் நல்குவ‌
      சித்தியானை தன் செய்ய பொற்பாதமே      ...  திருவிளையாடற் புராணம். 

 வி நாயகரைப் பூசிக்க உரிய பத்திர புஷ்பங்கள்.

    மேற்கு மாசிப்பச்சை நதுங்கை யாந்தகரை
    வில்வமுடன் ஊமத்தை நொச்சி நாயுருவி
    யேதமில் கத்தரி வன்னி அலரி காட்டாத்தி
    யெருக்கு மருதுடன் மால்பேரி யம்புகாந்தி
    மாதுளையே உயர்தேவதாரும் அரு நெல்லி
    மன்னு சிறு சண்பகமே கெந்தளி பாதரியே
    ஓதரி யவ நுகு இவையோர் இருபத்தொன்று
     முயர்வி நாயக சதுர்த்திக் குரைத்த திருபத்திரமே.