Pages

Thursday, January 29, 2009

எனது எனது என்றிருப்பவன் பொருளை யானும் ......




இன்றைக்கு துளசி டீச்சரின் வலைப்பதிவினில் படித்தேன்.
பழைய பழமொழிதான். இருப்பினும் அதை ஒரு கட்டுரையின் முடிவாக‌
எல்லோரும் உணரக்கூடிய வகையில் எடுத்துச் சொல்லியிருக்கிறாகள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது தான் அந்த முது மொழி.


உலகத்திலே பார்க்கப்படும், கேட்கப்படும், நுகரப்படும், உணரப்படும், சுவைக்கப்படும் சுருக்கமாகச் சொல்லப்போனால் ஐம்புலனகளால் அனுபவிக்கப்படும் எல்லாவற்றிற்குமே இது பொருந்தும்.

இனிப்பு பிடிக்கும் என்று ஒருவன் இனிப்பாகவே சாப்பிட்டுக்கொண்டே இருக்க இயலுமா? ஒரு அளவுக்கு மேல் திகட்டி விடுகிறது. இதை பொருளாதார ஆரம்ப பாடங்களில் தியரி ஆஃப் மார்ஜினல் யுடிலிடி என்கிறார்கள். எனக்கு அவல் பாயசம் பிடிக்கும் என்றால் ( நாரதாவின் பின்னூட்டம் நினைவுக்கு வருகிறது) ஒரு இரண்டு கப் சாப்பிடுகிறோம். மூன்றாவது ஓ.கே. நான்காவது ஏதோ வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக சாப்பிடலாம். ஐந்தாவது கப் : ஐயா ! என்னை விட்டு விடுங்கள். நாளை வந்து சாப்பிடுகிறேன். இப்போதைக்கு போதும் என்கிறோம்.

எந்த ஒரு பொருளுமே ஒரு அளவிற்கு மேலே அதன் முதற்கண் தந்திட்ட‌ அனுபவத்தைத்தருவதில்லை. திகட்டிப்போய் விடுகிறது. அலுத்துப்போய் போதும், என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி விடுகிறோம். இதற்கு விதிவிலக்கு ஒன்றே ஒன்று தான் என்கிறார்கள். அது பணம். ஹார்டு கரன்சி. எத்தனை வந்தாலும், சேர்த்தாலும்,மேலும் மேலும் என்றோ ஒன்று மனதை அரித்திக் கொண்டே இருக்கிறது. ஒரு அளவிற்கு மேல் அப்பணத்தினால் எந்த வித அதிக லாபமோ பிரயோசனமோ இல்லை எனினும் அதை மேன்மேலும் சேகரிக்க வேண்டும் என்கிற பேராசை அதிகரிக்கிறது.

ப‌ழைய‌ த‌மிழ்ப்பாட‌ல் ஒன்று ப‌ள்ளிக்கால‌த்தில் ப‌டித்தேன். வ‌ட்டிக்கு ப‌ண‌ம் கொடுத்து பொருள் ஈட்டும் ஒரு வ‌ணிக‌ன் த‌ன‌து க‌டையில் க‌ல்ல‌ப்பெட்டி முன் அம‌ர் ந்து இருக்கிறான். அப்பொழுது வ‌ழிப்போக்க‌ன் ஒருவ‌ன் அக்க‌டை முன் வ‌ ந்து நிற்கிறான். க‌ல்ல‌ப்பெட்டியைப் பார்க்கிறான். பார்த்துக் கொண்டே நிற்கிறான். உன‌க்கு என்ன‌ வேண்டும் ? ஏன் என் கல்லாப்பெட்டியைப் பார்க்கிறாய் ? என‌ வ‌ணிக‌ன் கேட்கிறான்.
வ‌ழிப்போக்க‌ன் ப‌தில‌ளிக்காது சென்று விடுகிறான். அடுத்த‌ நாள் அதே நேர‌ம் அதே வ‌ழிப்போக்க‌ன் அதே போல் அக்க‌டைக்கு முன் வ‌ ந்து ச‌ற்று நேர‌ம் க‌ல்லாப்பெட்டியை பார்க்கிறான். வ‌ணிக‌ன் வ‌யிற்றில் ஏதோ ப‌ய‌ம் பீரிடுகிற‌து. வ‌ழிப்போக்க‌ன் போய்விடுகிறான். அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறான் வ‌ணிக‌ன். இத்த‌னைக்கும் அவ்வ‌ழிப்போக்க‌ன் அப்பெட்டி ப‌க்க‌ம் வ‌ர‌க்கூட‌ இல்லை. க‌டைக்கு வெளியே நின்றுதான் க‌வ‌னிக்கிறான்.

மூன்றாவ‌து நாள். அ ந்த‌ வ‌ழிப்போக்க‌ன் எங்கே வ‌ ந்து விடுவானோ என்று அஞ்சி அஞ்சி சாகிறான் வ‌ணிக‌ன். ச‌ற்று தாம‌தமானாலும் வ‌ழிப்போக்க‌ன் வ‌ருகிறான். அதே இட‌த்தில் அதே போல் க‌ல்லாப்பெட்டியைக் குறி வைத்தாற் போல் பார்க்கிறான். வ‌ணிக‌னால் வாளா இருக்க‌ இய‌ல‌வில்லை.

என்ன‌ இது ! இது என்னுடைய‌ க‌ல்லாப்பெட்டி. இதில் இருப்ப‌து என்னுடைய‌ ப‌ண‌ம். நீ ஏன் தின‌மும் இதை உற்று உற்று பார்க்கிறாய் என்கிறான் வ‌ணிக‌ன்.
அத‌ற்கு வ‌ழிப்போக்க‌ன், " ஐயா ! இது உங்க‌ள் ப‌ண‌மா ! என் ப‌ண‌மென்று அல்ல‌வா நினைத்தேன் !" என்றான். வணிகன் திடுக்கிட்டான். " என்ன உன் பணமா ! உன் பெட்டியா ? என்ன உளறுகிறாய் ! " என கோபமுற்று இரைகிறான். அப்பொழுது அமைதியாக அந்த வழிப்போக்கன் சொல்லுவான்: " ஐயா ! நானும் மூன்று நாட்களாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இது உங்கள் பணமாக இருந்தால், ஒன்று அதை உங்களுக்காக செலவிடவேண்டும், இல்லை, பிறருக்கு தானமாகத்தரவேண்டும்.இரண்டுமே நீங்கள் செய்ய வில்லை. நானும் இந்த ப்பெட்டியிலுள்ள பணத்தை எனக்காகவும் செலவிடவில்லை. தானமும் செய்ய ல்லை.அப்படியிருக்கையில் இது உங்கள் பணமாக இருந்தால் என்ன , என் பணமாக இருந்தால் என்ன ! இரண்டும் ஒன்று தானே என்றான். " எனது எனது என்றிருப்பவன் பொருளை யானும் எனது எனது என்றிருப்பேன் " என்று துவங்குகிறது அப்பாடல். நாலே வரிகள் தான். இருப்பினும் நாள் முழுவதும் அமைதியுடன் வாழ ஒரு வகை, வழி, சொல்கிறது.




Wednesday, January 14, 2009

யாவருக்கும் இயலும்



சற்று நேரத்திற்கு முன் ( 10.30 இரவு ) விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி கண்டேன்.
பொங்கல் நல் நாளன்று இது போன்ற நிகழ்ச்சிகள் கிடைப்பது அவ்வளவாக கிடையாது.
ஒரு புத்தக விழா அது. ஈரோடு என நினைக்கிறேன்.

நான் டி.வி. பக்கம் வந்து பார்த்தபோது, உரத்த குரலில் பேசுவது அதுவும் தூய இனிய தமிழில்
பேசுவது கண்டு ஈர்க்கப்பட்டு செவி மடுத்துக்கேட்டேன். ( எனது காதுகள் சற்று மந்தம் )

தமிழ் திரையுலகத்து பிரபல நடிகர் திரு. சிவ குமார் அவர்கள் பேசுக்கொண்டிருந்தார். அவர் நடிப்புத்
திறன் மட்டுமன்றி ஓவியத்திறனும் பெற்றவர் என்பர். இன்றோ அவர் அழகிய அருவி ஊற்று நீர்
சல சல வென ப்பெருக்கெடுத்து ஓடும் புனல் போன்று உரையாற்றிக்கொண்டிருந்தார்.

நூறாண்டு காலம் எல்லோரும் வாழ்ந்திட ஒரு சில கருத்துக்களை எடுத்துக் கூறியபோது
மெய் சிலிர்த்தேன். காரணம். தமிழ் மக்களாகிய நாம் யாவரும் அவசியம் 100 ஆண்டுகள் வாழ்ந்திட‌
ஒன்று செய்தால் போதுமென்றார்.

அந்த ஒன்று திருமூலரில் உள்ளதென்று அந்தப்பாடலை மேற்கோளிட்டு நம் முன்னே நிறுத்தினார்.

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை.
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே. (252)

காலையில் எழுந்தவுடன் இறைவனைத் தொழ ஒரு பசும் இலைதனை அவன் காலடியில் வையுங்கள். ஒரு நிமிடம்
இறைவனை நினையுங்கள். நீங்கள் நாத்திகவாதியாயிருப்பினும்
உங்கள் முன்னோரின் படத்தின் முன் ஒரு பசும் இலைதனை வைத்து அவரை நினைவும் கூறுங்கள்.
அடுத்து, பசுமாடு ஒன்றுக்கு ஒரு வாய் சோறு அல்லது ஏதேனும் உணவு தாருங்கள். பசுவைப்போல் மனிதகுலத்திற்கு உதவிடும் விலங்கினம் ஏதும் இல்லை என்றார் திரு சிவகுமார் அவர்கள். பசுமாடு நமக்கு பால் தருகிறது. அது மட்டுமல்ல, மாடு போடும் சாணம் உரமாகிறது. மாடு ஈன்றும் காளை நிலத்தை உழுகிறது. வண்டி இழுக்கிறது. இதுவெல்லாம் போதாது என்று அதன் கொம்புகளும் உபயோகிக்கப்படுகின்றன. இறந்தபின்னும் அதன் தோல் நமக்குப் பயன்படுகிறது.
ஆகவே மாட்டிற்கு அதுவும் பசுமாட்டிற்கு ஒரு கவளம் தருவது அடுத்த நற்செயல் என்றார்.

மூன்றாவதாக, நாம் உண்கையில் ஒரு கைப்பிடி பிறர்க்கும் (வறியோருக்கும், அண்டியோருக்கும்) தருதல் வேண்டும் என்றார்.

நான்காவதாக, பிறரிடம் பேசும்போது இனிய சொற்களையே பேசுங்கள் என்றார்.

இந்த நான்கினையும் தினசரி பழக்கமாக, வழக்கமாகக் கொண்டவன் நீடூழி வாழ்வான், நூறாண்டு வாழ்வான் என்பதில் ஏதேனும் ஐயமுண்டோ ?

தைப்பொங்கல் திரு நாளன்று நல்வார்த்தைகள் கூறி எல்லோரும் இன்புற்றிருக்கவும் நூறாண்டு வாழ்ந்திடவும் வாழ்த்திய திரு சிவகுமார் அவர்கட்கு தமிழ் வலையுலகம் சார்பாக நன்றி கூறுவோம்.

வாழ்க நுமது நற்பணி.


திரு.சிவகுமார் அவர்கள் சங்க காலத்தில் காணப்பட்ட அத்தனைப் பூக்களின் பெயர்களையும் ஒருமித்து சொன்ன செய்தி என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இன்று காலை, அப்பூக்கள் என்னென்ன என்று கூகுளில் தேடிப்பார்த்தேன். ஒரு தமிழன்பர் தனது வலையில் குறிஞ்சிப்பாடல் ஒன்றில் இப்பூக்களின் பெயர்கள் இருப்பதைச் சொல்லியிருக்கிறார்.

http://www.tamiloviam.com/unicode/09220503.asp

இந்நூலின் 61வது வரியில் தொடங்கி, 95வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் வருகிறது :

  • உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்
  • ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
  • தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
  • செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,
  • உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம்,
  • எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
  • வடவனம், வாகை, வான்பூங்குடகம்,
  • எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம்,
  • பயினி, வானி, பல்இனர்க் குரவம்,
  • பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,
  • விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
  • குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
  • குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம்,
  • போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,
  • செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
  • கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
  • தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
  • குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
  • வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
  • தாழை, தளவம், முள்தாட் தாமரை,
  • ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,
  • சேடல், செம்மல், சிறுசெங்குழலி,
  • கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
  • காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
  • பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,
  • ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
  • அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
  • பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
  • வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
  • தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,
  • நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
  • பாரம், பீரம், பைங்குருங்கத்தி,
  • ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
  • நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
  • மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ...."

ஒன்றை அறிய இன்னொன்று ஊக்குவிப்பானாக ( trigger )
இருக்குமென்று நானறிவேன்.

இத்தனை பூக்களுடன் ' சிரிப்பு ' எனும் பூவையும் சேருங்கள் எனச்சொன்னது
சிவகுமாரது மனித நேய உணர்வுகளைப் பிரதிபலிக்க ஒரு சான்று.







Thursday, January 08, 2009

நெஞ்சு என்பதில் ஒற்றைக் கொம்பு எழுத்தை நீக்கிவிட்டால் ?




நஞ்சு இல்லாத நெஞ்சம்

வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளார் உலகில் தோன்றிய மனித குல மக்களுக்கு நெஞ்சகத்தின் உயர்ந்த பண்பு, நன்மைகள் பற்றி எடுத்துக்கூறுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனின் பெருமைப்பாடும் அவரவரது நெஞ்சத்தில் எழும் நல்ல எண்ணம் செயல் இவைகளைப் பொருத்தே அமைகிறது என்று சொல்கிறார்கள்.

உதாரணமாக,

" நன்று செய்வதற்கு உடன் படுவீரேல் நல்ல நெஞ்சம் பெற்றவர் ஆவீர்."

" மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல். "

" வஞ்சமற நெஞ்சினிடை எஞ்சலற விஞ்சுதிறன் மஞ்சுற விளங்கும் புகழ்."

என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள்.

இத்தகைய நல்லதையே நினைப்பதற்கான நெஞ்சகம் நல்லதை விடுத்து அல்லதை = தீயதை, கெடுதலை நினைக்குமேயானால், அது " நெஞ்சு " அல்ல " நஞ்சு " என்கிறார்கள்.

நெஞ்சு என்பதில் ஒற்றைக் கொம்பு எழுத்தை நீக்கிவிட்டால் அது எப்படி நஞ்சாகிறதோ, அதுபோல், நல்லதை நினைக்கும்போது நெஞ்சு. அல்லதை நினைக்கும்போது அது ' நஞ்சு ' ஆகிவிடுகிறது.

எனவே ஒவ்வொரு ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் அமைந்த நெஞ்சு நன்மையான எண்ணங்களை நினைப்பதற்காகத்தானே அன்றி, தீயதை நினைப்பதற்கு அல்ல. எனவே நல்ல நெஞ்சகம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் அதன் இயல்பான, இயற்கையான குணமாகிய சத்துவ‌ குணத்தையே தழுவி, நல்லதை நினைத்து நல்லதையே சொல்லி, நல்லதையே செய்து நன்மைகளைப் பெற்று நலமும் வளமும் மேலோங்கி வாழவேண்டும்.

== குரு பக்கிரிசுவாமி " அருட்சுடர்" மாத இதழ்.

நன்றி: மஞ்சரி மாத இதழ்.

Posted by Picasa

Sunday, January 04, 2009

" இன்று " " இப்பொழுது "


" இன்று "
" இப்பொழுது "
எனச்சொல்லும்போதே இவ்வார்த்தைகளில் இருக்கும் இ, ப், ஆகிய எல்லாமே இறந்த காலம் ஆகிவிடுகிறது.
ஒவ்வொரு கணமும் புதியதாகத் தோன்றுகிறது. தோன்றும் கணத்திலே வளர்கிறது. பின் மறைகிறது.
மறைந்த அக்கணமும் புதிதெனத் தோன்றும் புது கணத்திற்கும் உள்ள கால வித்தியாசம் மிக மிகக்குறைவானதால்
நம்முடைய சிந்தையிலே நிற்பதில்லை.

ஒவ்வொரு கணமும் நம் உடலில் ஆயிரமாயிரம் புதிய உயிரணுக்கள் ( செல்கள் ) பிறக்கின்றன. அது போல் ஆயிரமாயிரம் செல்கள் மரிக்கின்றன.
கணத்துக் கணம் நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். இந்த மாற்றத்திற்கு எதுவும் விதிவிலக்கு இல்லை.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வெள்ளிடைமலை. ஆயினும் மனம் மட்டும் இறந்தகாலத்திலே வசித்திட விரும்புகிறது. இறந்தகாலத்தில்
ஏற்பட்ட சுக துக்கங்கள், ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், பெற்றவை பெறாதவை, நின்றவை, நில்லாதவை என பலவில் நின்று
நம்மை நிகழ்காலத்தில் வாழ விடாமல் தடுத்து நிறுத்துகிறது.

ஒவ்வொரு கணத்திலும் நாம் புது மனிதனாகி, நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றினையும் முதன் முறையாகப் பார்ப்பது போல் பார்க்கவேண்டும்.
அதாவது நமது புது நோக்கு சென்ற காலத்தில் மனதில் ஏற்பட்ட கரைகள் ( விரும்பியது, விரும்பாதது எல்லா) நீங்கியதாக இருப்பின்
நிகழ் காலத்தை நிம்மதியாக மன மகிழ்வுடன் வாழ இயலுமில்லையா ?

சென்ற காலத்தில் வாழ்வோரை இனியேனும் புதிதாய்ப் பிறந்தோமென எண்ணுங்கள் எனச் சொல்கிறார் பாரதி.

கவிதையைப் பார்ப்போமா ?

" சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
நின்று விளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம். திரும்பி வாரா. "