என்னென்ன உணர்வுகள் மனதில் பொங்கும் ?
புதியதோர் உலகம் காண்போம் - மனச்
சக்திகள் களைவோம் மாசுகளை வெல்வோம் . =
புதியதோர் உலகம் காண்போம் .
நேரம் இது நல்ல நேரம்
நேசக்கரம் நீட்டி நல உறவு கொள்வோம்.
நேயமிகு சொற்கள் சொல்வோம் = நம்
நெஞ்சிலே கங்கை நீர் பெருகச் செய்வோம்.
புதியதோர் உலகம் காண்போம் = இப்
புவியனைத்தும் பூக்கள் இனி மலரச் செய்வோம்.
பெறுகின்ற தனங்கள் எல்லாம் - அவ்
விறைவனின் புகழெனவே சொல்லி மகிழ்வோம்.
அண்ணல் காந்தி அவர் அன்று சொன்ன
உண்மையும் அஹிம்சையும் உளமார கொள்வோம்.
அன்புசார் அறவழியில் அமைதி காண்போம் , இங்கு
ஆயிரம் இடர் வரினும் நேயமதை நீங்கோம்.
புதியதோர் உலகம் காண்போம்
ரகுபதி ராகவா ராஜா ராம். பாடுவதற்கு ஒரு சரியான தருணம் இதுவே.
இசை உலகின் மா மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் அவர்களின் ஷெனாய் இசையை கேட்டு மகிழுங்கள்.
No comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி