Pages

Tuesday, January 01, 2013

புத்தாண்டு தினம்





     புத்தாண்டு தினம் இன்று.   

     ஆங்கிலம் பேசுவார் மட்டுமன்றி அனைத்து நாட்டு மக்களுமே கொண்டாடும் உலகப்பொது புத்தாண்டு தினம் இன்றே. 

     இந்த நல் நாளில் எல்லோருமே புத்தாண்டுக்கான உறுதி மொழி ஒன்று எடுத்துக்கொள்வர். 

     மற்றும் எதெல்லாம் வேண்டும் எதெல்லாம் தவிர்க்கவேண்டும் எனவும் பட்டியலிடுவர். 

    அந்த வகையிலே நானும் சிந்திக்கத்துவங்கியபோது திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் வலையில்     புத்தாண்டு வாழ்த்தாக அருட்பிரகாச வள்ளலாரின் பாடல்கள் பதிவாக்கப்பட்டிருந்தன. 

     வேண்டும் வேண்டும் எனத் துவங்கும் நீளும் முடியும் இந்தச் சாலச் சிறந்த சீரிய விருத்தத்திற்கு அப்பாலே      வேறு என்ன வேண்டுவது எனும் நினைப்பிலே 

     அப்பாடலை எனது குரலிலே பாடி மகிழ்ந்தேன்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
        உத்தமர்தம் உறவு வேண்டும்
        உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
        உறவு கலவாமை வேண்டும்
    பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
        பேசா திருக்க வேண்டும்
        பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
        பிடியா திருக்க வேண்டும்
    மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
        மறவா திருக்க வேண்டும்
        மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
        வாழ்வுனான் வாழ வேண்டும்
    தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.



     இருபது வயதிலே வேண்டியன எல்லாம் எழுபது வயதிலே வேண்டா வெறுப்பாக போகிறது.

      முப்பதிலே முகர்ந்தது எல்லாமே மூப்பு வரின் மறந்து போகிறது. 

      நாற்பதிலே நாடியதெல்லாம் நாடி தளர்ந்து ஓடி விடுகிறது. 

      ஐம்பது அறுப‌தில் சேகரித்த ஐச்வரியங்கள் எல்லாமே கிட்டத்தட்ட அறுபது முடியுமுன்னே 
       நம் பிள்ளைகள் நல்வாழ்வுக்காக செல்வழிந்து போயிற்று. 

      அறுபது முடிந்தபின்னே  ஆறுதல் வார்த்தைகளுடன் துணை நிற்கும் ஒரே ஜீவன் , அந்தக்கலப்பையில்   பூட்டப்பட்ட இன்னொரு மாடு எனவும் புரிகிறது. 

       எழுபதிலோ தேவை ஒன்று இருக்கிறது என்றால் அது நிம்மதி . 

       அந்த நிம்மதியைத் தேடித் தேடித்தான் மனித வர்க்கம் என்றுமே உழைஞிறது .  

       வள்ளலார் கண்ட பெரு வாழ்வு அத்தகைய நிம்மதியை த்தரும் என்பதிலும் ஐயம் உண்டோ ?


 தாயுமானவர் விருப்பத்துடன் இப்பதிவை நிறைவு செய்வோம்

       எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் 
        வேறொன்றுமறியேன் பராபரமே .

     

8 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. சூரி சார்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்புடையீர் வணக்கம்! எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இனிய பகிர்விற்கு நன்றி!
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. தங்கள் இனிய குரலில் இந்தப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் அருமையாக இருக்கிறது. தங்களது வலைப்பூவில் என்னைப்பற்றியும் குறிப்பிட்ட தங்கள் பெருந்தன்மைக்கு, தங்களுக்கு என்ன சொல்லி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. மிக மிக மிக நன்றி ஐயா. தங்கள் ஆசிகளையும் ஆலோசனைகளையும் எப்போதும் வேண்டுகிறேன்.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  6. திருமதி இராம லக்ஷ்மி
    திரு ஜீவி
    திரு தி.தமிழ் இளங்கோ
    திரு க்ருஷ்ணா ரவி
    திருமதி பார்வதி இராமச்சந்திரன்

    உங்கள் எல்லோர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    2013 வருடம் முழுவதும் தங்கள் எல்லோரின் வலைப்பதிவுகளிலும்
    அன்பும் அறமும் ஒலிக்கட்டும். ஜொலிக்கட்டும்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. ரொம்பவும் இனிமையாக பாடியிருக்கிறீர்கள் சுப்பு ஸார்.

    ஒவ்வொருவரும் இதேபோல பிரார்த்தனை செய்துகொண்டு அதன்படியே நடந்தால் பூமியே சுவர்க்கம் ஆகாதா?

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. உங்கள் புத்தாண்டு வாழ்த்து மிக அருமையாக இருக்கிறது.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    2013 வருடம் முழுவதும் தங்கள் எல்லோரின் வலைப்பதிவுகளிலும்
    அன்பும் அறமும் ஒலிக்கட்டும். ஜொலிக்கட்டும். //

    வாழ்த்து மிக அருமை.
    உங்கள் பாடலும் மணியின் ஒலியும் அருமை.
    உங்களுக்கும்,மாமிக்கும் புத்தாண்டு வணக்கங்கள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி