Pages

Tuesday, September 15, 2015

முருகா

 முருகா நீ தானே தமிழ்க் கடவுள் . அவ்வை முதலாய் அனைத்து புலவரும் சங்க காலம் தொடங்கி இன்று வரை உன்னை வணங்காது கவி படைத்தோர் இல்லை. ஆறு படை வீடு எங்கிலும் உனது படை. உன்னை வணங்குவோர் எண்ணுக்கு எல்லை இல்லை.
தமிழ்க் கடவுளாம் நீ.
தமிழ்ப் பதிவாளர் மாநாட்டுக்கும் நீயே தலைவன்.
பதிவர் மாநாட்டினை முன் நின்று நடத்தும் முத்து நிலவன் அவர்களும்  அவருக்கு உறு துணையாய் நிற்கும் ஆயிரம் ஆயிரம் தமிழ் பதிவாளரும் புதுகையிலே ஒன்று கூடுகின்றனர்
அவர்கள் வெற்றி பெற உனது அருள் வேலை அனுப்பி வைப்பாய்.
புதுக்கோட்டையிலே அக்டோபர் 11ம் தேதி.ஞாயிறு அன்று 
அந்த மாநாடு சரித்திரம் படைத்திட அருள் புரிவாய்.


சுப்பு தாத்தா இன்று தான் ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரெஸ் ல் ரயில் பயணம் டிக்கட் பதிவு செய்ய முனைகிறார்.
அவருக்கு,
லோயர் பெர்த்தில் ஒரு இடம் வாங்கிக் கொடு. முடிந்தால்,
அப்பர் பெருமானுடன் ஒரு வார்த்தை சொல்லிவிடு.  அன்று சிவனுக்கும் உகந்த நாள்.

சொல்லிவிட்டேன்.

விழாவை இனிதே நடத்தி வைப்பது இனி உன் பொறுப்பு.

கண்டு களிப்பது உண்டு மகிழ்வது மட்டுமே என் சிறப்பு.

3 comments:

  1. ஐயா! தாங்கள் வேண்டும் வேலன் கட்டாயம்
    வேண்டுகோளை நிறைவேற்றுவான்!
    அவனுக்குகந்த நாளிலேயே உங்கள் வேண்டலை கூறியுள்ளீர்கள்!
    எல்லாம் கிடைக்கும்! நலமுடன் போய்க் கண்டு களித்து வந்து பதிவிடுங்கள்
    படிக்க ஆவலுடன் இருக்கின்றேன்!

    ReplyDelete
  2. அருமை தாத்தா வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அருமை.

    விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி