Pages

Sunday, March 06, 2016

வாடினேன்.




மணிராஜ் ஜகமணி வலைத் தளத்தின் பதிவாசிரியர் 
திருமதி ராஜேஸ்வரி அவர்கள் 

இறைவனடி சேர்ந்தார் என்னும் செய்தி கேட்டு வாடினேன். 

கடந்த பல ஆண்டுகளாக, ஒவ்வொரு நாள் அதி காலையிலும் அவரது தளத்திற்குச் சென்று அங்குள்ள செய்திகளைப் படிப்பதும் 
பாடல்களைப் பாடுவதுமே எனது வழக்கமாக இருந்தது. சில மாதங்களாக அவரது தளத்தில் இடுகை ஒன்றும் இல்லையே என்று நினைப்பு இருந்து வந்த நேரத்தில், இப்படி ஒரு செய்தி எனது நெஞ்சினை கனக்கச் செய்தது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. 

ஆன்மீக உலகில் அவர் அன்னை எனத் திகழ்ந்தார். 

அவர் செய்த பணியினை அவரது செல்வங்கள் தொடர அன்னை அருளட்டும்.

சுப்பு தாத்தா.

5 comments:

  1. எனது இரங்கல்களும்....

    அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  2. அவருக்கு அவர் தான் ஈடு. அவர் வாசிப்பு உலகுக்காக விட்டுச் சென்ற பதிவுகள் அவருக்காக வாழும்.

    அன்னாருக்கு மனம் நெகிழ்ந்த அஞ்சலிகள்.

    ReplyDelete
  3. நமக்கெல்லாம் வருத்தமான செய்திதான். ஆன்மீகப் பதிவர் திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுதல் செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
  4. திருமதி. ராஜராஜேஸ்வரி அம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  5. ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி