Pages

Wednesday, May 04, 2016

921 முதல் 930 வரை.

தினமும் ஒரு குறள் அதிகாரம் முழுவதும் படித்து அதன் பொருளை உள்வாங்கும் தினசரிப் பழக்கம்  என்னிடம் பல வருடங்களாக இருக்கிறது. 
நான் வரிசையாக போவதில்லை.
புத்தகத்தைத் திறப்பேன். 
எந்த அதிகாரம் கண்களுக்கு எதிரே வருகிறதோ அதில் கவனம் சேர்ப்பேன். 
பொதுவாக, அதே அதிகாரம் மறுபடி மறுபடி பெரும்பாலும் வருவதில்லை. 

இந்த அதிகாரம் கடந்த ஒரு ஆண்டில் முதல் தடவையாக வருகிறது. 
அதுவும் இந்தச் சமயத்தில் !!  எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. 

இது தற்செயலாகத் தான் நடக்கிறது என்று நினைத்தேன். 

நீங்கள் நினைப்பது என்ன ?

என்னைப் பொறுத்த அளவில் ஒரு நல்ல காலம் வருகிறது என்றே  
நம்புகிறேன். 

நீங்கள் ?

****************************************************
#####################################
921 முதல் 930 வரை.  குறட்பாக்களும் அவற்றின் பொருளும். 
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் 
கட்காதல் கொண்டொழுகு வார்.
கலைஞர் உரை:
போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.

குறள் 922:
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் 
எண்ணப் படவேண்டா தார்.
கலைஞர் உரை:
மது அருந்தக் கூடாது; 
சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.


ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
சான்றோர் முகத்துக் களி.
கலைஞர் உரை:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்  கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
 குறள் 924:
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் 
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
கலைஞர் உரை:
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.


குறள் 925:
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து 
மெய்யறி யாமை கொளல்.
கலைஞர் உரை:
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.
றியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

குறள் 926:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
கலைஞர் உரை:
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.


குறள் 927:
அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் 
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
கலைஞர் உரை:
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

குறள் 928:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து 
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
கலைஞர் உரை:
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.

குறள் 929:
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
கலைஞர் உரை:
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
.
குறள் 930:
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் 
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
கலைஞர் உரை:
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.

நல்லதோர் எதிர்காலம் வருமென நம்புவோம். 

இன்று மக்கள் மனம் திரும்பி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. 

அடுத்த தலைமுறைகள் நல் வாழ்வு வாழ வழி தோன்றும் .



ஒன்று முதல் 234 வரை. 

2 comments:

  1. 929-ம் குறளின் பொருள் தான் மனத்தைக் கலங்கடிக்கிறது.

    ReplyDelete
  2. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு டாஸ்மாகிலும் இந்தக் குறட்பாக்களை எழுதித் தொங்கவிட ஆவன செய்வாரா?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி