Pages

Tuesday, February 23, 2016

கோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா !

கோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா !
கோரும் வரம்  ஒன்று தா.

குறைகளைச் சொல்லியே காலத்தைக் கழித்துவிட்டேன்.
நிறை எது ? நிலை எது? நினையாதிருந்து விட்டேன்.
மறை சொல்லும் மாதவா நின் நாமம் அனுதினமும்
உரைத்திட வழி ஒன்று சொல்லித்தா...எனக்கின்று
கோரும் வரம் ஒன்று தா.

பஞ்ச புலன் தந்ததெல்லாம்  நஞ்சென ஆயிற்றே !
அஞ்சிட வேண்டியவை  அறியாது போயிற்றே !1
எஞ்சி நிற்கும் எண்ணம் எல்லாம் நின் பாதங்கள் ஒன்றே.
கெஞ்சி நிற்குமெனை காத்திடவே இன்றெனக்கு
கோரும் வரம் ஒன்று தா.. கோவிந்தா..

 நாராயணா ! நான் "நான்" ல் நிலைத்திருந்தேன்.
நாரணன் நின் நாமம் நாவில் நில்லா நின்றேன். 
கார்மேனியான் நின்னடிகள் சரணம் 
வா என்னை உய்த்திடு விடுதலை தந்திடு 

கோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா !
கோரும் வரம்  ஒன்று தா.




4 comments:

  1. நிறை எது...? நிலை எது...? தெரிந்தால் பிறகு ஏது வாழ்க்கை....?

    ReplyDelete
  2. அருமை தாத்தா

    ReplyDelete
  3. 1. குறைகளைச் சொல்லியே காலத்தைக் கழித்துவிட்டேன்.
    நிறை எது ? நிலை எது? நினையாதிருந்து விட்டேன்.

    2. பஞ்ச புலன் தந்ததெல்லாம் நஞ்சென ஆயிற்றே !
    அஞ்சிட வேண்டியவை அறியாது போயிற்றே !

    3. நாராயணா ! நான் "நான்" ல் நிலைத்திருந்தேன்.

    -- நிமிர்த்த முடியாது தான்; இருந்தும் முயற்சிக்கிறேன்.

    நன்றி, சூரி சார்!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்
    http://thaenmaduratamil.blogspot.com/2016/03/blog-post.html
    நன்றி

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி