Pages

Saturday, January 14, 2012

பொங்கலோ பொங்கல்




நன்றி: தமிழ் கூடல்.

பொங்கலோ பொங்கல்.  பொங்கும் மங்களம்
எங்கும் தருக. என்றும் தருக.
எங்களது இனிய பொங்கல் வாழ்த்துக்களை எங்கள் பதிவுக்கு வரும் அனைத்து
நண்பர்களுக்கும், நாங்கள் அடிக்கடி சென்று மகிழும் பதிவுகளின் ஒன்றா இரண்டா இதுவரை ஓராயிரம் பதிவு ஆசிரியர்களுக்கும் எனது உற்றார் சுற்றார் அனைவருக்கும் 1961 முதல் 2001 வரை என்னுடன் பணி புரிந்த  எனது காப்பீட்டுத்துறையைச் சேர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் பொதுவாகவும், குறிப்பாக வும் சொல்லி மகிழ்கிறோம்.


தமிழ் வலை நண்பர்கள் என்றவுடன் இனிய நம் தாய் மொழியாம்  தமிழிலே வலை என்று நான் துவங்கிய நாள் முதலாய் உடனேயே அறிமுகம் ஆன திரு  ரம்னேஷ் ராஜகோபால் , அறிவு ஜீவி, பெரும் ஆற்றல் ஜீவி, இசையின் வழியே ஈசனிடம் இட்டுச்செல்லும் ஞானி   ஜீவா வெங்கடராமன், அமர கவி கபீரின் தத்துவங்களை விளக்கிச் சொல்லும் கபீரன்பன், குமரன்,  மௌலி, திகழ், மதுரையம்பதி, துளசி மேடம்,  தன மேலே பாட்டு எழுதவே அம்மனே இப்புவிக்கு அனுப்பி இருக்கும்  கவிநயா மேடம், சித்ரா , காயத்ரி, நிழற் படங்களை நிஜப்படங்கள் போல் எடுக்கும்   ராம லக்ஷ்மி, கீதா சாம்பசிவம்,ஒவ்வொரு நாளும் நமக்கு ஆலய தரிசனம் செய்ய மனமுவந்து அருள் தரும்  ராஜராஜேஸ்வரி, ஷிர்டி சாய் புகழ் பாடும் ஸ்ரீ கலா, லலிதா மிட்டல்,சோதிட நிபுணர், நகைச்சுவை வல்லுநர்  சுப்.பையா வாத்தியார், அருணை அடி, தி.ஆர். எஸ்.  கே ஆர் எஸ் , ஹரிணி,குறை ஒன்றும் இல்லை என்று சொல்லும்  லக்ஷ்மி, ஹ ர ணி , எனது பிறந்த கிராமத்து ஆங்கரை அன்பர் அரண்ய வாஸ் ராம முர்த்தி, ஈழத்தில் பிறந்தவர,  தமிழ் உணர்வு என்றால் என்னச் சொல்லிடும்  ஹேமா, அருட்கவி சிவகுமாரன், அவ்வப்போது என் வலைக்கு வந்து இக்கிழவனை உற்சாகப்படுத்தும் அபி அப்பா,அண்மைய காலத்து இலக்கிய வாதிகளை நமக்கு மறுமுறை அறிமுகம் செய்து வைக்கும் சிறந்த சிறுகதை ஆசிரியர்  பூவனம் வலை ஆசிரியர் ஜீவி, வலைச்சரத்தில் இந்த வார ஆசிரியர் சென்னை பித்தன், கவிதை துளிகள் என பெயரிட்டு மரபு சார் கவிதைகள் எழுதும் தங்க மணி, ராகவன்,சங்ககுரல் பத்திரிகை ஆசிரியர் அறிவுக்கடல், தேனம்மை லக்ஷ்மணன்,சித்தர்களையும் அவர்களது பாடல்களையும் கலைகளையும் விளக்கிசொல்லும்  தோழி, ஆதி மனிதன், தமிழ், அருணா , கான பிரபா, சுப்பு , கணினியில் புதுப்புது உக்திகளைப் பகிர்ந்துகொள்ளும்  சசி குமார், கர்நாடக இசையிலே தானும் மயங்கி விருந்தினரையும் மயங்க வைக்கும், வைத்யா, முத்து லக்ஷ்மி . ரம்யா , அனன்யா
ஹிமான்ஷு பாட்டில், வித்யா சூரி, சாதிக்க வேண்டும் என நினைக்கும் சாதாரணமானவன் என சொல்லும்  வை.கோபால கிருஷ்ணன் , வாசு, சமூக சிந்தனை ஆளர்  நந்தினி கிருஷ்ணன், டோஹாவிலே பார்த்த அதிசய மனிதர்  தக்குடு, ஹரணி, ஸ்ரீனிவாச கோபாலன், கட்டிட நிபுணர் வடுவூர் குமார், வேதங்கள் பொருள் தரும்  வாசுதேவன் திருமூர்த்தி, திருக் கயிலாதுக்கு நமை எல்லாம் அழைத்துச் சென்ற கோமதி அரசு, சீனா.கோபி ராம முர்த்தி, மா தேவி, அனந்த நாராயணன், ராம், என். கணேசன்,    பிரமிக்கச் செய்யும் கோலங்கள் போடும் வாணி முத்துக்ருஷ்ணன்    சின்னு கேசரி ,  டோண்டு , மற்றும் இட்லி வடை ஆசிரியர், மற்றும் இந்த பட்டியலில்   உடன் நினைவில் இல்லாது மறந்து போன பல நூற்றுக் கணக்கான தமிழ்ப் பதிவர்களுக்கும், இவர்கள் பதிவுகளுக்கு வரும் ஆயிரக்கணக்கான விருந்தினர்க்கும்,

சுப்பு தாத்தாவின் பொங்கல் வாழ்த்துக்கள்.

உங்களின் பொன்னான வாழ்த்துகளைப் பெற உங்கள் பெயரை க்ளிக்கினாலே போதும். உங்களது வாழ்த்துக்களும் பெறலாமே !!

தொடர்ந்து தமிழ் வலை தனை சிறப்பித்துக்கொண்டே இருங்கள்.

அடிக்கரும்பு இனிக்கும் வரை, தமிழ் வலைக்கு அடித் தளமாய் இருங்கள்.
தமிழுக்கு காவலனாய் இருங்கள்.

தமிழ்க் கடவுளாம் கந்தன் புகழ் பாடகனாய் இருங்கள்.







14 comments:

  1. தங்கள் அன்பான பொங்கல் வாழ்த்திற்கு நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்..

    ReplyDelete
  2. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. உங்களுக்கும்,உங்கள் இனிய குடும்பத்தினருக்கும்,
    எங்கள் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துகள்!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  5. திரு.சூரி அவர்களுக்கு
    என்னையும் ஒருபொருட்டாய் நினைத்து இங்கு
    குறிப்பிட்டதற்கு மிக்கநன்றி!

    ReplyDelete
  6. அருமையான பொங்கல் வாழ்த்து.
    என்னையும் நினைவில் வைத்து பொங்கல் வாழ்த்தில் குறிப்பிட்டதற்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அடிக்கரும்பு இனிக்கும் வரை, தமிழ் வலைக்கு அடித் தளமாய் இருங்கள்.
    தமிழுக்கு காவலனாய் இருங்கள்.


    எமது வலைத்தளத்தையும் அருமையாய் பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  8. மகிழ்ச்சியான இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. நானும் இருக்கிறேன் உங்களோடு.உங்களுக்கும் என் அன்புப் பொங்கல் வாழ்த்துகள் தாத்தா.பாட்டிக்கும்கூட !

    ReplyDelete
  10. அப்பாடியோவ்! இவ்வளவு பேரை படிக்கிறீர்களா?
    முன்பு மாதிரி இப்போதெல்லாம் பதிவிலேயே உட்காரமுடியவில்லை.

    ReplyDelete
  11. பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அவ்வளவு பேரையும் நினைவில் வைத்து வாழ்த்திய உங்கள் அன்பு கண்டு மனம் ம/நெ/கிழ்ந்தது தாத்தா. ஆசிகளுக்கு மிகவும் நன்றி. உங்களுக்கும், பாட்டிக்கும், உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் என் மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. நினைவில் நிறுத்தி வாழ்த்தியமைக்கு நன்றி நன்றி :)

    ReplyDelete
  14. நினைவில் நிறுத்தி வாழ்த்தியமைக்கு நன்றி நன்றி :)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி