"மக்களது பணம் மக்கள் நல வாழ்வுக்கே "
(People's money for People's welfare)
எனச சொல்வது மட்டுமல்ல செய்வதிலும் காட்டும் நிறுவனம் எல்.ஐ. சி. ஆகும். பொதுத் துறை நிறுவனமான இந்த இன்சூரன்சு நிறுவனம் மக்களிடம் இருந்து பெறும் பிரிமியத் தொகைகளை நாட்டின் நல்ல திட்டங்களுக்கு ஆக்க பூர்வமான முதலீடுகள் செய்து அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும் செயல் பட்டு வருகிறது.

மண்டல மேலாளர் திரு எம். ஆர். குமார் அவர்கள் எல்.ஐ.சி. யின் உதவியால் கட்டப்பெற்ற இந்த ஜி. எல். எப். (GOLDEN JUBILEE BLOCK) கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார்கள்.
நான் நாற்பது ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனமும், எனது நாற்பது ஆண்டுகட்கு மேலே எனது நண்பர் திரு ரமணி அவர்களை தொடர்பு அலுவலர் ஆக கொண்ட சேவாலயா நிறுவனமும் சேர்ந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு நல்லிதயம் கொண்ட எல்லோரும் வாழ்த்துவர் .
பள்ளித தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்ற பாரதியின் வாக்கு பலித்திருக்கிறது.
சேவாலயா நிறுவனர்களுக்கும் அதில் தொண்டாற்றும் எல்லா ஊழியர்க்கும் எனது வாழ்த்துக்கள்.
ஒரு நல்ல செயலை வெளிக்கொணர்ந்தமைக்குநன்றி1
ReplyDelete