Pages

Tuesday, September 08, 2015

ஒரே பாடலில் நாலு வெண்பாக்கள்.


இன்றைய கவிதை உலகம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கவில்லை. 
வீறு நடை போட்டு விண்ணைத் தொட்டு விட்டு அதற்கு மேலும் அண்டத்திற்கே ஒளி சேர்க்கிறது என்றால் மிகை அல்ல. 

நான் இசை அமைத்திட்டு பாடும் பாடல்கள் கவிதைகள் பலவற்றின் ஆசிரியர்கள் இன்றைய முன்னணி கவிஞர் ஆவர். இவர்கள் அண்மைய காலமாக, மரபு சாராக் கவிதைகளை சற்று நேரம் மறந்து விட்டு, 

மரபு ஒத்த, தொல்காப்பியம் காட்டிடும் வழியில் பாடல்கள் பல இயற்றுகின்றனர்.  சந்தம் எதுகை மோனை எல்லாமே இவர்கள் அங்குசத்திற்குக் கட்டுப்பட்ட யானை போல் இருப்பதைப் பார்த்து வியக்கும் வண்ணம் உள்ளது. 

பாவலர் பட்டம் பெற்ற பலர் இனியா, இளமதி, சசிகலா, கிரேஸ் , சீராளன் போன்றோர் எழுதும் கவிதைகள் மிக்க சிறப்புடைத்ததாக இருக்கின்றன.

 இன்று நான் பார்த்த ஒரு கவிதையில் ஒரு இலக்கணக் குறிப்பு காணப்பட்டது. 

பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசை வெண்பா வர வேண்டும்!
நேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் !
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
குறள் வெண்பா வர வேண்டும் !


காவியக்கவி அவர்களின் கவிதை இங்கே காண்க. 
என் நாவில் வந்து குடி ஏறு
ஒரே பாடலில் நாலு வெண்பாக்கள். 
இனியா அவர்கள் செய்திட்ட அற்புதம்.

அதைப் பாராட்ட சுப்பு தாத்தா என்ன செய்வார் ?
வாழ்க வளர்க.
என வாழ்த்து சொல்வதோடு மட்டும் நில்லாது
பாடலை நான்கு ராகங்களில் பாடி மகிழ்ந்திருக்கிறார். 
புன்னாக வராளி, கானடா, மத்யமாவதி ராகங்கள் கேட்கலாம்.

காவியக்கவி அவர்கள் மேன்மேலும் சிற்ப்பு பெற்று, தமிழகத்தின் இலக்கிய வானில் ஒளி மிகு விண் மீன் என வலம் வருவார்.

Friday, September 04, 2015

நாத்து நட போறவளே



பாவலர் இளமதி  அவர்கள் எழுதிய வயற்காட்டு பாடல் இது. 
பெரும்புலவர் பாரிஸ்  நகரத்தைச் சார்ந்த புலவர் பாரதி தாசன் அவர்களால் பாவலர் எனப் போற்றப்பட்டு, பட்டம் வாங்கிய பின் எழுதிய முதற் பாட்டு என்பதாலும் சிறப்புடைத்து. 

படம் கூகிளாருக்கு நன்றி. 

பாடல் வரிகள் பார்க்க பாவலர் இளமதி அவர்கள் வலைக்கு செல்ல இங்கே 
சொடுக்கவும். 

புதுகை தமிழ்ப் பதிவாளர் மாநாட்டுக் குச்செல்ல , தங்கள் பெயரை பதிவு செய்து சிறப்பு மிக்க நூல் ஒன்றைப் பெற இங்கே சொடுக்கவும். 


தாத்தா வை இன்னொரு தாத்தா எப்படி வர்ணிப்பார், பாடுவார் என்பதை
பார்க்க இங்கே செல்லவும். 



Wednesday, September 02, 2015

புதுகைக்கு வாருங்கள்.

புதுவையிலே அக்டோபர் திங்கள் 11ம நாள் நடக்க இருக்கும் பதிவர் மா நாட்டினை ஒட்டி, பதிவாளர் கீதா துளசிதரன் அவர்கள் இயற்றி, தமது வழிதனிலே இட்டு இருக்கும் பாடல் இது.

+Thulasidharan thillaiakathu
+Muthu Nilavan
+Dindigul Dhanabalan
+கவிஞா் கி. பாரதிதாசன்
+Chellappa Yagyaswamy
+yathavan nambi
+அன்பின் சீனா
+r.v.saravanan Kudanthai


கும்மிப் பாடல்.

எல்லோரையும் வருக வருக என்று வரவேற்கும் பாணி சிறப்புடைத்து.

புதுகைக்கு வாருங்கள்.