Pages

Sunday, September 21, 2008

வாய்மை இதுதான் !



வாய்மை இதுதான் என்று இரண்டே வார்த்தைகளில், இல்லை, இரண்டே வாக்கியங்களில் சொல்லுங்கள், இல்லையா, இரண்டு நிமிட நேரத்திற்குள் சொல்லுங்கள் என பலரிடம் கேட்டேன்.

சத்தியம் இதுதான் என்று இரண்டே வார்த்தைகளில், இல்லை,இரண்டே
வாக்கியங்களில் சொல்லுங்கள் என்று பலரிடம் பேசிப்பார்த்தேன்.

மெய் இதுதான் என்று வரையறுத்து இரண்டே வார்த்தைகளில், இல்லை,
இரண்டு வாக்கியங்களில் சொல்லுங்கள் என பற்பல மெய்யன்பர்களிடம்
வினவினேன்.

எல்லோருமே பேசுகிறார்கள். மணிக்கணக்காக, ஏன் ! நாட்கணக்காகவும் பேசுகிறார்கள். பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்.
பற்பல மொழி இலக்கியங்கள், பற்பல நீதி நூல்கள், வேத சான்றுகள்,
மதக் கோட்பாடுகள் ஆகியன பலவற்றிலிருந்தும் கோடிட்டுக் காட்டிவிட்டு,
மெய் இதுதான் என உணர்த்துகிறார்கள். இல்லை எனச் சொல்லிட இயலாது.
இருப்பினும், எல்லோருமே மெய் என்பது, இது இல்லை, இது இல்லை என‌
பலவற்றினையும் நீக்கி மிச்சம் எது உள்ளதோ அதுவே எனச் சொல்லாமல்
சொல்கிறார்களே தவிர, மெய் இது தான் என ஒன்றைக் குறிப்பிட்டுச்சொல்வதைத் தவிர்த்துவிடுகின்றனர்.

More than a positive affirmation, truth is defined only by negating "what is not true " as perceived easily by the mind through the senses, and understood by the intellect.


வள்ளுவர் சொல்வார்:

ஒருவன் " மனத்தொடு வாய்மை மொழியின் " அவன் தானம் தருமம் செய்கின்றவனை விட மேலானவன். அவனது " அகம் தூய்மை, வாய்மையால் காணப்படும்" என்றும் சொல்வார். மற்றும் "வாய்மை எனப்படுவது யாது ? எனின் " யாது ஒன்றும் "தீமை இலாத‌ சொலல் " எனவும் விளக்குவார்.

கடைசிப்பாவாக அமைகிறது ஒரு முத்தான குறள்.

" யாம் மெய்யாக் கண்டவற்றுள், இல்லை, எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற "

யோசித்துப் பார்த்தால், எது நமது வார்த்தைகளுக்கப்பால், புலன்களுக்கப்பால், மனதிற்கப்பால், புத்திக்கு அப்பால் இருந்து, இவை அத்தனையும் நீங்கும்போது உணரப்படுமோ அதுவே மெய்.

அதை எப்படி இரண்டு வார்த்தைகளாகச் சொல்வது ? அது ஒன்று தானே !!

ஏன் எனில் ,

"ஆங்கென்றும் ஈங்கென்றும் உண்டோ ‍ சச்சி
தானந்த சோதி அகண்ட வடிவாய்
ஓங்கி நிறைந்தது கண்டால் ‍ = பின்னர்
ஒன்றென்று இரண்டென்று உரைத்திடலாமோ ?" == தாயுமானவர்.

3 comments:

  1. //ஆங்கென்றும் ஈங்கென்றும் உண்டோ ‍ சச்சி
    தானந்த சோதி அகண்ட வடிவாய்
    ஓங்கி நிறைந்தது கண்டால் ‍ = பின்னர்
    ஒன்றென்று இரண்டென்று உரைத்திடலாமோ//
    ஆகா, அருமை! தாயுமானவர் தாள் சரண்.

    தோன்றும் அவையா விவுலும் உளதேயாம்,
    தோன்றாப் பிரபஞ்சம் யாதிலும் நீண்டேயாம்,
    நீக்கமற நிறைந்திடும் நிஜமான நிஜத்தை
    நோக்கிட விளங்கும் வாய்மை.

    ReplyDelete
  2. ////" யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற "////

    வள்ளுவரின் இந்தக் குறட்பாவில் எனக்கு ( தாங்கள் கையாண்டிருக்கும் இக்கட்டுரையைப் பொருத்தவரை) உடன்பாடில்லை.


    வள்ளுவர் தான் கண்டவரையில் வாய்மையைப் போல் நல்லதொன்று இல்லை என்கிறார். வாயளவில் மெய்யாக இருப்பதே வாய்மை. வாயளவில் எப்போது மெய்வரும் ? ஒருவன் உள் அளவில் மெய்யாக (உண்மை) இருந்தானாயின் மட்டுமே வாய்மை வெளிப்படமுடியும் என்பது என் கருத்து.

    உள்ளத்தில் மெய்யில்லையாயிள் உதட்டில் வெளிப்படா. உள்ளத்தில் உண்டாயிள் உதட்டில் வெளிப்படும். உதட்டில் வெளிப்பட்டால் உடலில் வெளிப்படும். அதைத்தான் மெய்மை என்கிறார்கள். அதாவது மெய்யளவில் (உடலளவில்) மெய்யாக இருப்பது.

    /////யோசித்துப் பார்த்தால் எது நமது வார்த்தைகளுக்கப்பால் புலன்களுக்கப்பால் மனதிற்கப்பால் புத்திக்கு அப்பால் இருந்து இவை அத்தனையும் நீங்கும்போது உணரப்படுமோ அதுவே மெய்./////

    தாங்கள் இடுகையின் முதலில் எழுப்பியிருந்த வினாக்களுக்கு நான் சிந்தித்ததும் இதுதான். மெய்க்கு வரையறை கிடையாது. மேலுள்ள இருவரிகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்த வரிகளாகும். வணக்கம் கலந்த வாழ்த்துகள் அய்யா!

    ReplyDelete
  3. //வாயளவில் மெய்யாக இருப்பதே வாய்மை.//


    அப்படியா !

    அகரம் அவர்கள் அருள் கூர்ந்து, நண்பர் ஜீவா அவர்கள் மனமுவந்து
    தந்திருக்கும் பதிலைப் படிக்க வேண்டும்>

    நிற்க.
    ஒளியினால் மற்ற அனைத்துப் பொருட்களையும் பார்க்க முடிகிறது.
    ஒளியினைப் பார்க்க இயலுமோ ? ( In the absence of a medium, light is
    hardly visible )/
    அது போலவே வாய்மையும் என நினைக்கின்றேன். அது ஒரு எண்ணம், சொல்
    அல்லது செயல் வழியேதான் உணரப்படுகிறது.
    செயல், சொல், எண்ணங்கள் அடங்கிப்போன நிலையில் வாய்மையின்
    நிஜத்தன்மை என்ன ?

    நண்பர் ஜீவா அவர்கள் தந்திருக்கும் பதில் ஒளி தருகிறது.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி