Pages

Tuesday, October 02, 2012

நீ சிரிக்காதே.



நீ சிரிக்காதே. 

உன் நினைவைப் போற்றும் வகையில் பாரதமெங்கும்  இன்று 
ஏன் உலகெங்கும் உன் படத்திற்கும் உருவச் சிலைக்கும் மலர் அணிவிக்கிறோம்.

இனிப்பு தருகிறோம் . இதமான வார்த்தைகள் பேசுகிறோம்.  பூரித்து போய் பாரிலே நீ எங்கள் பாரத பூமியிலே ஒரு தெய்வமாய் பிறந்தாய் எனப்பலவிதமாய்  போற்றுகிறோம். 

தனி வாழ்விலே மட்டும் அன்றி, பொது வாழ்விலேயும் அஹிம்சை  சத்தியம் .தூய்மை, ,நேர்மை, கடமை, மதங்களுக்கு அப்பாற் பட்ட மனித நேயம் இத்தனைக்கும் நீ ஒரு உருவமாய்த் திகழ்ந்த அற்புதத்தை எண்ணி எண்ணி வியக்கிறோம். இந்த புவியிலே ஒருவர் இவர் போல இருக்க முடியுமா என வியந்து நிற்கிறது இவ்வுலகம்.

ஆம். நீ சொல்லிவந்த வார்த்தைகளை இன்று  மறுமுறையும் சொல்லுகிறோம். பலமுறை சொல்கிறோம். 

ஆனால், எல்லாவற்றையும் நாளையே மறந்து விடுவோம் என 
உனக்குத் தெரியும் . எங்களுக்கும் தெரியும் . 

அதனால் சிரிக்கிறாய். 

காந்தீயம் இறந்துவிட்டது.
 உனக்கும் தெரியும்.
 எங்களுக்கும் தெரியும். 
இது எங்கள் வேதனைக் குரல். 














காந்தீஜிக்கு ஜே.

5 comments:

  1. சில உண்மைகள் மனதை சுடுகின்றன...

    ReplyDelete
  2. நச்சென்று இருந்தது, நன்றிகள்!

    ReplyDelete
  3. நச்சென்று இருந்தது, நன்றிகள்!

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி