Pages

Monday, March 24, 2008

ஆத்திசூடி



அறங்செய விரும்பு

ஆத்திசூடி என்றாலே முதல் 10 வரிகள் மட்டுமே பலருக்குத் தெரிந்திருக்கிறது.
ஒளவை பிராட்டி தமிழ் மக்களுக்குத் தந்த தங்கப் பேழை இது.

நல் வாழ்வு வாழ்ந்திட நல்லுரை வழங்கிடும் இந்த 106 வரிகளும் எல்லாபபள்ளிகளிலும் பாடத்தொகுப்பினில் அமைதல் அவசியம்.

நேற்றும் ஒரு வலைப்பதிவில் பார்த்தேன். ஏதோ போட்டியாம். அதில் பங்கெடுத்துக்கொள்ள அறஞ்செய விரும்பு முதல் 10 வரிகளைத் தந்து விட்டு, அதற்கு மேல் எங்கு இருக்கிறது
எனக் கேட்டிருக்கிறார்கள். அத்தனையும் இரவு 12 மணிக்கு மேல் உட்கார்ந்து
தட்டச்சு செய்து அதை பின்னோட்டமாகத் தந்தேன்.
அதற்கும் போட்டி முடிந்துவிட்டதால், அதற்குரிய ஈடுபாடும் குறைந்துவிட்டது
போலும் !!

என்னுடைய இந்த வலைப்பதிவின் முதல் பதிவே 'அறஞ்செய விரும்பு " தான்.
மற்ற வரிகள் இதோ !!
12. ஒளவியம் பேசேல்.
13. அ:கம் சுருக்கேல்.
14. கண்டு ஒன்று சொல்லேல்.
15. ஙப்போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. (இ)டம்பட வீடு எடேல்.
19. (இ) ணக்கம் அறி ந்து இணங்கு.
20. த ந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர்செய்.
23. மன்றுபறித்து உண்ணேல்.
24. (இ)யல்பு அலாதன் செயேல்.
25. (அ) ரவம் ஆட்டேல்.
26. (இ)லவம்பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன் செயேல்.
29. இளமையில் கல்.
30. அறனை மறவேல்.
31. அன ந்தல் ஆடேல்.
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப்பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41.கொள்ளை விரும்பேல்.
42. கோது ஆட்டு ஒழி.
43. சக்கர நெறி நில்.
44. சான்றோர் இனத்து இரு.
45. சித்திரம் பேசேல்.
46. சீர்மை மறவேல்.
47. சுளிக்கச் சொல்லேல்.
48. சூது விரும்பேல்.
49. செய்வன திரு ந்தச்செய்.
50. சேரிடம் அறி ந்து சேர்.
51. சைஎனத் திரியேல்.
52. சொல்சோர்வு படேல்.
53. சோம்பித் திரியேல்.
54. தக்கோன் எனத்திரி.
55. தானமது விரும்பு.
56. திருமாலுக்கு அடிமைசெய்.
57. தீவீனை அகற்று.
58. துன்பத்திற்கு இடம்கொடேல்.
59. தூக்கி வினைசெய்.
60. தெய்வம் இகழேல்.
61. தேசத்தோடு ஒத்துவாழ்.
62. தையல்சொல் கேளேல்.
63. தொன்மை மறவேல். 64. தோற்பன தொடரேல். 65. நன்மை கடைப்பிடி.
66. நாடு ஒப்பன் செய். 67. நிலையிற் பிரியேல். 68. நீர்விளை யாடேல்.
69. நுண்மை நுகரேல். 70. நூல்பல கல். 71. நெற்பயிர் விளை. 72. நேர்பட ஒழுகு.
73. தைவினை நணுகேல். 74. நொய்ய உரையேல். 75. நோய்க்கு இடம்கொடேல்.
76.பழிப்பன் பகரேல். 77.பாம்பொடு பழகேல். 78. பிழைபடச் சொல்லேல். 79. பீடுபற நில். 80. புகழ் ந்தாரைப் போற்றிவாழ். 81. பூமி திருத்தி உண். 82. பெரியாரைத் துணை கொள். 83. பேதைமை அகற்று. 84. பையலோடு இணங்கேல். 85. பொருள்தனைப் போற்றி வாழ். 87. மனம் தடுமாறேல். 88. மாற்றானுக்கு இடம்கொடேல். 89. மிகைபடச் சொல்லேல். 90. மீதூண் விரும்பேல். 91. முனைமுகத்து நில்லேல்.92. மூர்க்கரோடு இணங்கேல். 93. மெல்லினல்லாள் தோள்சேர். 94. மேன்மக்கள் சொற்கேள். 95. மைவிழியார் மனையகல். 96. மொழிவது அற வழி. 97. மோகத்தை முனி. 98. வல்லமை பேசேல். 99. வாது முன்கூறேல். 100. வித்தை விரும்பு. 101. வீடு பெற நில். 102. உத்தமனாய் இரு.
103. ஊருடன் கூடிவாழ். 104. வெட்டு எனப் பேசேல். 105.வேண்டி வினைசெயேல்.
106. வைகறைத் துயிலெழு. 107. ஒன்னாரைத் தேறேல். 108. ஓரம் சொல்லேல்.

Monday, March 10, 2008

காசிக்குப் போய் எதை விடவேண்டும்?





இன்று ஒரு தமிழ்ப் பதிவினில் ஒரு கதை படித்தேன்

.http://koodal1.blogspot.com/

"உண்மையைப் பேசுவதை விட மிகச் சிறந்தது ஒன்றும் இல்லை. மக்களுக்குச் சேவை செய்வதை விட சிறந்த வழிபாடு ஒன்றும் இல்லை"

காசி விசுவனாத ஆலயத்தின் முன் பலர் ஒரு ஏழைக் கிழவனும் கிழவியும் தாகத்திற்குத் தண்ணீர்
கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். அவர்களது குரலை ஈசனைத் தேடி வந்தோர் யாவரும்
கேட்ட பாடில்லை. அப்போது அங்கே ஒரு திருடன் வருகிறான். அவன் அந்த முதியோருக்கு
தண்ணீர் தருகிறான். நீ யாரப்பா எனக் கேட்க, பொய் சொல்ல விரும்பாத திருடன், ஐயா, நான்
நல்லவனில்லை. திருடித்தான் நான் பொருள் ஈட்டுகிறேன் என்கிறான். முதியவர் அதற்கு பதில்
சொல்கிறார்: நீ திருடனாக இருந்தாலும் உண்மை பேசினாயே அது நீ செய்யும் குற்றங்களுக்கெல்லாம்
ஒரு பிராயச்சித்தம் என்கிறார்.

பிச்சை கேட்ட முதியவர் அந்த ஈசனே.

இந்த பதிவினைப் படித்த நான் பின்னோட்டமாக எழுதியிருந்தேன்: காசிக்குப் போகும் யாவரும்
ஏதோ ஒன்றை விடுவார்கள். இந்த திருடன் பொய் பேசுவதை விட்டுவிட்டான். காசிக்கு ப்போகும்
மற்ற எல்லோரும் எதை விடப் போகிறார்கள் எனக் கேட்டிருந்தேன்.

காசிக்குப் போகிறவர்கள் ஒன்றை விடவேண்டும்.
அந்த ஒன்று ஆசை தான்.
அந்த ஆசைதான் நம்மை ஆலாய்ப் பறக்கவைக்கிறது.
அந்த ஆசைதான் அற வழிகளிலிருந்து நம்மை அப்புறப்படுத்துகிறது.
அந்த ஆசைதனை விட்டால் தான் வீட்டை (முக்திதனை..மோட்சத்தினை) அடையலாம்
என அறனெறிச்சாரம் கூறுவதை இன்று கவனிப்போம்.

அருளால் அறம் வளரும்; ஆள்வினையால் ஆக்கம்;
பொருளால் பொருள்வளரும் நாளும்; = தெருளா
விழைவு இன்பத்தால் வளரும் காமம்; அக்காமம்
விழைவுஇன்மையால் வளரும் வீடு.

அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை எனும் வள்ளுவனின்
வாக்கை நாம் மறக்கலாகுமோ ? அந்த அருள் வேண்டின்
பொருள் மேல் உள்ள ஆசைதனை விட்டிட வேண்டும். குறைந்த பட்சம்
நமக்குத் தேவையில்லாதவற்றின் பால் உண்டாகும் ஆசைதனை விட்டொழியவேண்டும்.