Pages

Thursday, September 30, 2010

இன்று மட்டும் அல்ல இனி எல்லா நாளுமே காந்தி பிறந்த நாள் !!!


இன்று மட்டும் அல்ல , இனி வருகின்ற எல்லா நாளுமே அண்ணல் காந்தி பிறந்த நாள் என மனதில் கொள்வோமா !!
என்னென்ன உணர்வுகள் மனதில் பொங்கும் ?

புதியதோர் உலகம் காண்போம் - மனச்
சக்திகள் களைவோம் மாசுகளை வெல்வோம் . =
புதியதோர் உலகம் காண்போம் .

நேரம் இது நல்ல நேரம்
நேசக்கரம் நீட்டி நல உறவு கொள்வோம்.
நேயமிகு சொற்கள் சொல்வோம் = நம்
நெஞ்சிலே கங்கை நீர் பெருகச் செய்வோம்.


புதியதோர் உலகம் காண்போம் = இப்

புவியனைத்தும் பூக்கள் இனி மலரச் செய்வோம்.
பெறுகின்ற தனங்கள் எல்லாம் - அவ்
விறைவனின் புகழெனவே சொல்லி மகிழ்வோம்.

அண்ணல் காந்தி அவர் அன்று சொன்ன
உண்மையும் அஹிம்சையும் உளமார கொள்வோம்.
அன்புசார் அறவழியில் அமைதி காண்போம் ,   இங்கு
ஆயிரம் இடர் வரினும் நேயமதை நீங்கோம்.

புதியதோர் உலகம் காண்போம்
கார்டூன் படம் நன்றி:  நாளிதழ். ஹிந்து

ரகுபதி ராகவா ராஜா ராம். பாடுவதற்கு ஒரு சரியான தருணம் இதுவே.
இசை உலகின் மா மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் அவர்களின் ஷெனாய் இசையை கேட்டு மகிழுங்கள். 





No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி