Pages

Friday, October 02, 2009

காந்தியைக் காணோமே !!


காந்தியைக் காணோமே !!
2 october
இன்று நமது தேச பிதா மஹாத்மா காந்தியின் பிறந்த நாள்.

பல்வேறு பத்திரிகைகளில், தொலை காட்சிகளில், காந்தியின் வாழ்க்கை குறிப்புகள்,
அவரது கொள்கைகள், பல்வேறு பொருட்களில் அவரது நிலைப்பாடுகள் எல்லாவற்றினையும்
பற்றி எழுதியிருக்கிறார்கள், ஒலி, ஒளி பரப்புகிறார்கள்.

காந்திஜியை நினைவு கூர்வதற்கு இந்த ஒரு நாள் அவசியம் தேவைப்படத்தான் செய்கிறது.

நம் நினைவிலே மட்டுமே அவரது கொள்கைகளும், சத்திய சோதனைகளும், அஹிம்சா தர்மமும்
இன்று இருக்கின்றன.

நமது நாடு இந்திய தேசத்திலே இன்று ஜனத்தொகை 110 கோடிக்கும் மேலே இருக்கும் .
இத்தனை ஜனப்பெருக்கத்தின் நடுவிலே எங்கேயாவது ஒரு காந்தி தென்படுவாரா என்று
யோசித்துப் பார்த்தேன். தேடிப்பார்த்தேன்.

காந்தி போன்ற ஒரு அற நெறியாளர், வாய்மை எனும் சொல்லுக்கு உதாரணமாக விளங்கியவர்,
மனித நேயத்தின் பரிணாமமாக விளங்கிய அந்த மஹாத்மா போல் இன்னொருவர் எங்கேயாகிலும்
எத்துறையாயிலும், எத்திசையாயிலும் இருப்பாரோ எனத் தேடிப்பார்த்தேன்.

இல்லையே !

உங்கள் கண்களுக்குப் பட்டிருந்தால் சொல்லுங்களேன்.

1 comment:

  1. தேடிக்கொண்டு இருப்பதைவிட எல்லோரும் அவரை போல் ஒரு சதவிகிதமாகவாவது வாழ முயற்சிக்க வேண்டும்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி