Pages

Monday, March 10, 2008

காசிக்குப் போய் எதை விடவேண்டும்?





இன்று ஒரு தமிழ்ப் பதிவினில் ஒரு கதை படித்தேன்

.http://koodal1.blogspot.com/

"உண்மையைப் பேசுவதை விட மிகச் சிறந்தது ஒன்றும் இல்லை. மக்களுக்குச் சேவை செய்வதை விட சிறந்த வழிபாடு ஒன்றும் இல்லை"

காசி விசுவனாத ஆலயத்தின் முன் பலர் ஒரு ஏழைக் கிழவனும் கிழவியும் தாகத்திற்குத் தண்ணீர்
கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். அவர்களது குரலை ஈசனைத் தேடி வந்தோர் யாவரும்
கேட்ட பாடில்லை. அப்போது அங்கே ஒரு திருடன் வருகிறான். அவன் அந்த முதியோருக்கு
தண்ணீர் தருகிறான். நீ யாரப்பா எனக் கேட்க, பொய் சொல்ல விரும்பாத திருடன், ஐயா, நான்
நல்லவனில்லை. திருடித்தான் நான் பொருள் ஈட்டுகிறேன் என்கிறான். முதியவர் அதற்கு பதில்
சொல்கிறார்: நீ திருடனாக இருந்தாலும் உண்மை பேசினாயே அது நீ செய்யும் குற்றங்களுக்கெல்லாம்
ஒரு பிராயச்சித்தம் என்கிறார்.

பிச்சை கேட்ட முதியவர் அந்த ஈசனே.

இந்த பதிவினைப் படித்த நான் பின்னோட்டமாக எழுதியிருந்தேன்: காசிக்குப் போகும் யாவரும்
ஏதோ ஒன்றை விடுவார்கள். இந்த திருடன் பொய் பேசுவதை விட்டுவிட்டான். காசிக்கு ப்போகும்
மற்ற எல்லோரும் எதை விடப் போகிறார்கள் எனக் கேட்டிருந்தேன்.

காசிக்குப் போகிறவர்கள் ஒன்றை விடவேண்டும்.
அந்த ஒன்று ஆசை தான்.
அந்த ஆசைதான் நம்மை ஆலாய்ப் பறக்கவைக்கிறது.
அந்த ஆசைதான் அற வழிகளிலிருந்து நம்மை அப்புறப்படுத்துகிறது.
அந்த ஆசைதனை விட்டால் தான் வீட்டை (முக்திதனை..மோட்சத்தினை) அடையலாம்
என அறனெறிச்சாரம் கூறுவதை இன்று கவனிப்போம்.

அருளால் அறம் வளரும்; ஆள்வினையால் ஆக்கம்;
பொருளால் பொருள்வளரும் நாளும்; = தெருளா
விழைவு இன்பத்தால் வளரும் காமம்; அக்காமம்
விழைவுஇன்மையால் வளரும் வீடு.

அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை எனும் வள்ளுவனின்
வாக்கை நாம் மறக்கலாகுமோ ? அந்த அருள் வேண்டின்
பொருள் மேல் உள்ள ஆசைதனை விட்டிட வேண்டும். குறைந்த பட்சம்
நமக்குத் தேவையில்லாதவற்றின் பால் உண்டாகும் ஆசைதனை விட்டொழியவேண்டும்.

3 comments:

  1. நமக்குத் தேவையில்லாதவற்றின் பால் உண்டாகும் ஆசைதனை விட்டொழியவேண்டும்.
    அருமையாக முடித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. ஆசையை விட வேண்டும். சரியாகச் சொல்லியுள்ளீர்கள்

    ReplyDelete
  3. ஆசையே துன்பத்திற்க்க்கு காரணம் என்று விளக்கியிருபபது அருமை

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி