காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Saturday, August 15, 2009
பட்டம்மாள் பாடிய ஜன கண மன ...
சுதந்திரத் திரு நாளாம் ஆகஸ்ட் திங்கள் 15.
சென்ற வருடம் இதே நன்னாளில் பாடிய அதே குரலை இன்னொரு தரம் கேட்போமா ?
T.K. பட்டம்மாள் பாடிய ஜன கண மன ...
பாட்டுக்கொரு புலவன் பாரதி. அந்த சுப்பிரமணிய பாரதி
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என
ஆடுவோமே பாடுவோமே என ஆனந்தக்கூத்தாடினான்.
பாரதி எழுதிய அற்புதமான் கவிதை " தாயின் மணிக்கொடி பாரீர்."
அக்கவிதையைத் தன் வெண்கலக்குரலால்
பாட்டம்மாளாம் பட்ட்ம்மாள் பாடுவதைக் கேட்போம்.
vanthe matharam..vandhe matharam ... Ragha malikai.
Vande Matharam
Monday, July 27, 2009
ஆறடி உயரத்திலே அதி யற்புத வடிவத்திலே
தமிழகம் எங்கிலுமே , வீதிக்கு வீதி, முக்குக்கு முக்கு, மூலைக்கு மூலை, சந்திக்கு சந்தி ஒரு ஆலமரம் இருக்கும் இல்லையேல் ஒரு அரசமரம் இருக்கும். அதனடியில் அமர்ந்து அருளும் ஆசியும் தரும் வினாயகப்பெருமான் முன் நின்று ஒரு கணம் அவன் உருவத்தினை நெஞ்சினிலே இருத்தி அவனைத் தொழுவார்க்குத் தீவினை எதுவுமே அண்டிடாது.
இது ஆன்றோர், சான்றோர் உரைத்த நல்வாக்கு.
திருமூலர் கூறுவார்:
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.
சேக்கிழாரோ தமது புராணத்தில்:
வானுலகும் மண்ணுலகும் வாழ்மறை வாழப்
பான்மைதரு செய்ய்தமிழ் பார்மிசை விழங்க
ஞானமத ஐந்து கர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுகனைப் பரவி அஞ்சல் செய்கிற்பாம்.
பெருந்தேவனார் எனும் புலவர் சொல்வார்:
புண்ணியம் கோடி வரும் பொய்வாழ்க்கை ஓடிவிடும்
எண்ணியது கைகூடும் ஏற்றதுணை நண்ணிடவே
வாழ்வில் வளர் ஒளியாம் வள்ளல் வி நாயகனை
நாளெல்லாம் வாழ்த்திடுவோம் நன்று.
அந்தத் தும்பிக்கணபதியை நினைத்து வணங்குபவர் நீங்காத செல்வம் அடைந்து
இம்மையிலும் மறுமையிலும் புகழ் பெறுவர்.
" திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்" என்கின்றது விருத்தாசல புராணம்.
என்ன அழகிய எளிய தமிழ்ச் சொற்கள் !
சங்கத்தமிழ் மூன்றும் தா ! எனக்கோரிக்கை வைத்த அவ்வையும்
ஆரம்பிப்பது வி நாயக துதியுடனே.
அக்கணபதிக்கு எதைப் படைப்பது ?
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்.
என்ற பிராட்டி சொல்வார்.
எதைக் கொண்டு அவரை அர்ச்சிப்பது:
கையில் எது இருக்கிறதோ அது போதும்.
இருப்பினும் ஒரு அழகிய தமிழ்ப் பாடல் ஒன்று இருக்கிறது. அது இங்கே:
மேற்கு மாசிப்பச்சை நதுங்கை யாந்தகரை
வில்வமுடன் ஊமத்தை நொச்சி நாயுருவி
யேதமில் கத்தரி வன்னி அலரி காட்டாத்தி
யெருக்கு மருதுடன் மால்பேரி யம்புகாந்தி
மாதுளையே உய்ர் தேவதாரும் அரு நெல்லி
மன்னு சிறு சண்பகமே கெந்தளி பாதிரியே
ஓதரி யவ நுகு இவையோர் இருபத்தொன்று
முயர்வி நாயக சதுர்த்திக் குரைத்த திருபத்திரமே.
இத்தனையும் திரட்டி எடுத்துக்கொண்டு வாழ்வில் எஞ்சிய சில நாட்களில் என்றாவது ஒரு நாள் அந்த பிள்ளையார் பட்டி பிள்ளையாரைப் பார்த்து வழிபட்டு வரலாமென் நினைத்த வேளையில் எனது பேத்தி, அவள்தான், தாத்தா என என்னை அன்புடன் அழைக்கும் கவிதாயினி கவி நயா அவர்கள்
பிள்ளையார்பட்டி பிள்ளையாரைப்போற்றி எழுதிய பாடல் கிடைக்க்ப்பெற்றேன்.
என்னால் அடாணா ராகத்தில் பாடப்படுகிறது.
கற்பக கணபதியே
பிள்ளையார் பட்டியில் உறைநிதியே!
சொற்பதம் கடந்தவனே
உந்தன் பொற்பதம் பணியவந்தோம்!
ஆறடி உயரத்திலே
அதி யற்புத வடிவத்திலே
கோதறு குணத்தினிலே
வளர் பார்புகழ் கணபதியே!
கல்லினால் ஆனவனே
கருணையில் கரும்பென இனிப்பவனே!
புல்லினால் பூஜித்தாலும்
அகம் மிகமகிழ்ந் தருள்பவனே!
உமையவள் திருமகனே
எம்மை இமையென காப்பவனே!
குறைகளை தீர்ப்பவனே
எங்கள் சுமைகளை ஏற்பவனே!
வலம்புரி நாயகனே
பழம்பெற இறைவலம் வந்தவனே!
மறைகளின் அதிபதியே
எங்கள் மனம்அமர் குணநிதியே!
--கவிநயா
கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம்.
கவி நயா அவர்கள் வலைப்பதிவுக்குச் செல்லவும்.
அவர்களுடன் சேர்ந்து அந்த
ஆறுமுகத்தோன் அண்ணனை
துதித்து எல்லா நலமும் பெறவும்.
Saturday, July 25, 2009
"அய்யா ! தெரியாதைய்யா ! சொல்லிட்டேன் !!
அய்யா ! தெரியாதைய்யா ! சொல்லிட்டேன் !!
என்று ஒரு தமிழ்ப் படத்தில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு நகைச் சுவை கலைஞர்
அடிக்கடி சொல்வது நினைவுக்கு வருகிறது.
நினைவு கூற வைத்த நிகழ்வு அண்மையில் நடந்தது அமெரிக்க மண்ணில்.
ஆம்.
இந்த நிகழ்வு நமது நாட்டில் நடந்தது அல்ல. அமெரிக்காவில் நடந்துள்ள நிகழ்ச்சி.
அது நடந்த உடனேயே அதுபற்றிய தனது கருத்துக்களை, முழுமையான தகவல்கள்
இல்லாத நேரத்திலேயே, பொறுப்பில் உள்ள ஒருவர் தமது கருத்துக்களைச்சொன்னதினால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றிய செய்தி இது.
http://www.cnn.com/2009/US/07/24/officer.gates.arrest/index.html?eref=rss_topstories
ஆங்கிலத்தில் உள்ள இச்செய்தி சி.என்.என். எனும் செய்தித்தாளில் உள்ளது. அதை முதற்கண் படிக்கவேண்டும். பின் மேற்கொண்டு படிக்கவும்.
இந்த நிகழ்ச்சியை விவரிப்பதோ அல்லது விவாதிப்பதோ இப்பதிவின் மையக்கருத்து அல்ல.
இருப்பினும், இந்த நிகழ்ச்சியையும், இந்த நிகழ்ச்சிக்குப் பின் நடக்கும் விவாதங்களையும் நோக்குகையில், ஒன்று தெளிவாகக் காணப்படுகிறது. இச்செய்தியே ஒரு பாடம் கற்பிப்பதாகத் தோன்றுகிறது.
முதற்கண், எந்த ஒரு பொருளைப்பற்றியும் அதைப்பற்றிய முழுத் தகவல்கள் அறிந்தபின்னே கருத்துக்கள் வெளியிடுவது நல்லது.
உடனடியாகத் தானே அதற்கு பதிலைத் தரவேண்டுமா ? எனவும் சிந்திக்கவேண்டும்.
அக்கருத்துக்களை வெளியிடும்பொழுது, கருத்துக்களுக்கான விளைவு நிகழ்ச்சியின் விளைவினை விட, அதைக் கேட்பவர் மனதிற்க்கு ஏதோ ஒரு வகையில் துன்பம் விளைவதாக இருக்கக்கூடும். என்பதையும் கவனத்தில் கொண்டு, தாம் சொல்வது நிகழ்வுக்குத் தீர்வு காண்பதாக இருக்குபொழுதே சொல்லவேண்டும்.
முன்னமேயே ஒரு பதிவில் சொல்லியது போல, சொல்லாத சொல்லுக்கு நாம் எஜமானன். சொல்லிய சொல்லுக்கு நாம் அடிமை ஆகிவிடுகிறோம். அதை ஏன் சொன்னோம், எதற்கு சொன்னோம் எனப்பல்வேறு வகையில் விளக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டு, கடைசியில் பல சமயம், இச்சொற்களை நாம் தவிர்த்திருக்கலாமே என்று தோன்றும் மன நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
வள்ளுவர் அறிவுரை இதோ !
யா காவாராயினும் நா காக்க .. காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.
மனிதன் மனிதனாய் வாழ் முதற்கண் அடக்கம் தேவை. அடக்கம் எண்ணங்களிலும் பின் சொற்களிலும் பின் செயல்களிலும் பரிணமிக்கும்.
வள்ளுவரின் அறிவுரை மனித குலத்துதித்த யாவருக்குமே என்றாலும், ஒருவன் பதவி, அந்தஸ்து, செல்வம் ஆகிய ஏணிகளில் ஏறுகையில் , ஏறி நிற்கையில் வழுவாது கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றாம். உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் வாயிற்காப்போன் சொல்வதற்கும் அலுவலக அதிகாரி சொல்வதற்கும், பல்வேறு நேரங்களில், பொருள் ஒன்றாயினும், அவர்கள் சொல்லும் சொற்கள் ஒன்றாயினும், அவற்றினை கேட்பவர், அருகாமையில் இருப்பவர் புரிந்துகொள்ளும் தன்மை வேறு, நிலை வேறு. அவர்தமக்கு ஏற்படும் பாதிப்புகளும் அவ்வாறே. ஒன்று தெளிவு. மேலே செல்லச் செல்லப் பொறுப்புகள் அதிகரிக்கின்றன அல்லவா ?
ஆகவே தான், செங்கோன்மை எனும் அதிகாரத்தில், வள்ளுவர் சொல்வார்:
ஓர்ந்து கண்ணோடாது, இறைபுரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை.
நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர்
முதற்கண் குற்றம் என்ன என அறியவேண்டும்.
குற்றம் புரிந்தவரை, எந்த ஒரு தயவு தாட்சணியமும் இல்லாது,
நடு நிலையில் அமைந்து நின்று,
நீதி செய்வதே செங்கோலாகும்.
Subscribe to:
Posts (Atom)